Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாயவின் விமர்சனத்துக்கு ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா எதிர்ப்பு

Featured Replies

கோத்தபாயவின் விமர்சனத்துக்கு ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா எதிர்ப்பு

[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 20:00 ஈழம்] [செ.விசுவநாதன்]

ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவைகள் குறித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்த விமர்சனங்களுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு வருகை தந்த பிரித்தானியா இணை அமைச்சர் பயங்கரவாதத்தை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று கோத்தபாய தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதுவர், பிரித்தானிய இணை அமைச்சர் பயங்கரவாதத்தைக் கண்டனம் செய்துதான் கருத்து தெரிவித்தார். மேலும் அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பில் இரட்டை வேடமிடுவதாக கோத்தபாய ராஜபக்சவின் விமர்சித்திருந்தார். இக்கருத்து ஆச்சரியமளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் மனித உரிமைகளுக்கு ஆதரவு விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு என சொந்தக் கொள்கை இருக்கிறது- இது தொடர்பில் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் விவாதிக்க உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாக கோத்தபாய ராஜபக்ச குற்றம்சாட்டியிருந்தார்.

"இத்தகைய குற்றச்சாட்டு அடிப்படையற்றது. இத்தகைய விமர்சனங்களால் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஆபத்து ஏற்படும்" என்று ஐக்கிய நாடுகள் சபையும் பதிலளித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னேன் பார்த்தீங்களா? மூளையில்லாதது தன் வாயாலயே தனக்கு மண் அள்ளிப் போடுமெண்டு? மிக்க மகிழ்ச்சி. இந்தக் கறளை வளர்க்க புலம் பெயர் மீடியாக்களில் செல்வாக்குள்ள தமிழர்கள் நன்றாக ஊதிப் பற்ற வைக்க வேண்டும்.

எமது நீண்ட நாள் கனவு பலிக்க வெளிக்கிட்டது. சிங்களத்தின் பொய் முகம் உலகத்திற்கு தெரிய வெளிக்கிட்டது. இனி சிங்களத்தின் பாய்ச்சா உலக நாடுகளில் வாய்க்காது. எமது மக்களின் கடின விடா முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.

இனி எமது விடுதலையின் நியாயம் உலகத்திற்கு விளங்க தொடங்கியுள்ளது.

தொடரட்டும் பிரச்சார தந்திரங்கள் எம் உறவுகளே............அடிக்கு மேல் அடியடித்தால் அம்மியும்........

காற்று நம் பக்கம் .... சிங்களம் ஆமை தலையை உள்ளே இழுக்கவெளிக்கிட்டது......

காலம் நமக்கு கனிகிறது...

எமக்கு ஆதரவான வெளினாட்டினர்களை ஒருங்கு திரட்டி அவர்கள் மூலம் தொடருட்டும் சிங்களப்பேய்களைப்பு.............

தற்போது நிலவும் இரண்டும் கெட்டான் சூழ்நிலையை புலத்தமிழரும் அவர்தம் அமைப்புகளும் நன்கு திட்டமிட்ட வகையில் பயன்படுத்தத்தவறக் கூடாது! தவறினால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் அதன் அடிவருடிகளை உபயோகித்து விரைந்து இந்த நிலமையை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும்.

இத்தருணத்தில் அனைத்து தமிழரும் ஒற்றுமையுடனும் ஆர்வத்துடனும் செயற்பட்டு தாயகத்தில் பெரும் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள தமிழ் உறவுகளை காக்க முன்வரவேண்டும்.

மேற்கு நாடுகள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்; நாங்கள் அவர்களைச் சார்ந்து நிற்கப் போவதில்லை! பிரிட்டிஷ் அமைச்சர் ஹவால்ஸ் இங்கு வந்த போது புலிகளுக்கு எதிராக ஒரு சொல் கூட பேசவில்லையே! பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய பேட்டி

சர்வதேச நாடுகள், குறிப்பாக பிரிட்டன், மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையைப் பய முறுத்தப் பார்க்கின்றன. எம்மீது சவாரிவிட நினைக்கின்றன.

அவை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாங்கள் அவர்களைச் சார்ந்து நிற்கப்போவதில்லை.

நாங்கள் தனிமைப்படுத்தப்படமாட்டோம். சார்க் நாடுகளும் ஆசிய நாடுகளும் எமக்கு உள்ளன.

இவ்வாறு காரசாரமாக, கடுந்தொனியில் தமது உள்ளக் கிடக்கையைக் கக்கியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செய லாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜ பக்ஷ.

இலங்கைக்குத் திங்களன்று உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்த பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஹிம் ஹவால்ஸ் மீது அவர் பொரிந்து தள்ளியிருக்கிறார்.

அவர் ஒரு வார்த்தைகூட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பேச வில்லையே என்று விசேடமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களில் குறிப்பாக கொழும்பில் உள்ள அதன் தலைமைப் பணிமனையில் புலிகள் ஊடுருவி இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குற்றஞ்சாட்டியுள் ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதா வது:

கொழும்பில் தமிழர்கள் வெளியேற் றப்பட்ட விவகாரத்தில் அனைத்துலகமும் பாகுபாட்டுடன் நடந்துகொள்கின்றது. இவை இலங்கை அரசை வம்புக்கு இழுக்கின் றன. எமது பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல், எங்களை பிரச்சினைக்குள் தள்ளப் பார்க்கின்றனர்.

மேற்கத்தைய நாடுகளை நாம்

சார்ந்து நிற்கப் போவதில்லை

பிரித்தானியா அல்லது மேற்கத்தைய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நாங்கள் அவர்களைச் சார்ந்து நிற்கப்போவது இல்லை. நாங்கள் தனிமைப் படுத்தப்பட்டுவிடமாட்டோம். சார்க் நாடுகளும், ஆசிய நாடுகளும் உள்ளன.

ஆள் கடத்தலுக்கு எதிராணவர்கள்

நாங்கள் எங்களைப் பாதுகாக்கிறோம். எங்களை ஆபத்துக்குள்ளாக்காதீர்கள். நான் பயங்கரவாதிகளைப் பற்றிப்பேசுகிறேன். அமெரிக்கா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால் அது "இரகசிய நடவடிக்கை' என்பார்கள். இலங்கையில் இது நடந்தால் கடத்தல் சம்பவம் என்பார்கள். இது ஒரு வார்த்தை விளையாட்டு. உண்மையில் ஆட்கடத்தல் விவகாரம் கவலைக்குரியது. இதற்கு நாம் எப்போதும் எதிரானவர்களே.

இலங்கைக்கு வருகை தந்த பிரிட்டிஷ் அமைச்சர் கிம் ஹவெல்ஸ், முற்றிலுமாக தவறான தகவல்களைக் கொண்டுள்ளார். அவர் ஒரு வார்த்தை கூட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசவில்லை. அவர் ஒரு வார்த்தை கூடப் பயங்கரவாதத்துக்கு எதிராகப் பேசவில்லை. எம்மைத் தனிமைப்படுத்தப் போவதாகவும், நிதி உதவியை நிறுத்தப்போகின்றோம் எனவும் மிரட்டுகிறார். நாங்கள் பாதிக்கப்படவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

புலிகளின் கைங்கரியமே

அமெரிக்கா தாக்கப்படும்போது ஒவ்வொரு நாடும் பயங்கரவாதம் என்கிறது. ஆனால், இலங்கையில் மட்டும் பயங்கரவாதிகளை ஏன் வேறாக நடத்துகிறீர்கள்? அமெரிக்காவை தனிமைப்படுத்துவது குறித்து பிரித்தானியா பேசுமா?

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்களுக்குள் முப்பது ஆண்டுகளாகத் திட்டமிட்டுப் புலிகள் ஊடுருவியுள்ளனர். பிரிட்டிஸ் அரசு புலிகளுக்கு எதிராகப் பேசாமல் இலங்கை அரசுக்கு எதிராகப் பேசுகிறது. இது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் நிறுவனங்களும் மனித உரிமை மீறல்களை நிறுத்துமாறு அரசை வலியுறுத்துகின்றன. உள்ளூர் பணியாளர்களால் அவர்களுக்கு தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புலிகளின் கைங்கரியமே. என்றார். (க 09)

uthayan

கோத்தபாயாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி கருத்து

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்வைத்த குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:

கோத்தபாய ராஜபக்ஷ முன்வைத்த குற்றச்சாட்டு எந்தவித ஆதாரமும் அற்றது. அண்மையில் இலங்கையில் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டு நிறுவனப் பணியாளர் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து நாம் கவலை கொள்கின்றோம்.

இத்தகைய பணியாளர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. இவ்வாறான எதிர்மறையான கூற்றுக்கள் பணியாளர்களின் பாதுகாப்பில் பல்வேறு விதமான தாக்கங் களை ஏற்படுத்தலாம் என்பதனை கவனத்தில் கொண்டு எங்கள் கவலையைத் தெரிவித் துக்கொள்கின்றோம். என்றார். (சி)

uthayan`

கோத்தபாய ராஜபக்ஸவின் குற்றச்சாட்டுக்கு ஐநா கடும் கண்டனம்

சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஸ ஐநா தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபை கடும் விசனம் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

சிலதினங்களுக்கு முன்பு கோத்தபாய, ஐநாவினுள் விடுதலைப்புலிகள் ஊடுருவியுள்ளதாகவும் புலிகள் ஐநா வை பிழையாக வழிநடத்துவதாகவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்தை பி.பி.சி மற்றும் ரொய்ட்ரர்ஸ் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

இக்குற்றச்சாட்டு ஆதாரம் எதுவுமற்றது. அண்மைக்காலமாக உதவிநிறுவன பணியாளர்கள் மீதான கொடுமைகள், கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு செயலரின் இக்கூற்று எமது உதவிப்பணியாளர்களின் செயற்பாடுகளையும் உயிர்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது எனத்தெரிவித்துள்ள சிறீலங்காவிற்கான ஐநாவின் மனிதாபிமான பணிகளுக்கான வதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ஐநா பணியாளர்கள் ஐநாவின் கடுமையான சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே பணிக்கமர்த்தப்படுவதாகவும் அவர்கள் ஐநா வரைமுறைகளுக்கும், செயலருக்கும் பதில்கூற கடமைப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளார். அவர்களின் பணிகள் நடுநிலையான உயர்விழுமியங்களை கொண்டன, அவர்கள் மூன்றாம் தரப்பு யாரினதும் கட்டளைகளுக்கு இணங்குபவர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தீவில் பணியாற்றும் ஐநாவின் பணியாளர்கள் ஓய்வின்றி பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக உதவுவதை தாம் கண்ணுற்றதாகவும் அவர்கள் சிறந்த கூட்டுப்பொறுப்புடன் இயங்குவதனால் ஐநாவின் உயர்ந்த இலக்குகளுக்காக தொடர்ந்தும் பணியாற்றுவர் என்றும் தெரிவித்த ஐநா அதிகாரி ஐநாவின் பணியாளர்களிடையே நல்லிணக்கம், கூட்டுப்பொறுப்பு விடயத்தில் கேள்விக்கே இடமில்லை என்றார்.

http://www.pathivu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.