Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - உலப்பனே சுமங்கல தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை  இந்தியாவுக்கு  வழங்குவது  தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறையே தற்போதைய அரசாங்கமும் தொடர்கிறது என வன்முறைகளை தோற்கடிக்கும் மக்கள் இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - உலப்பனே சுமங்கல தேரர் | Virakesari.lk

உளப்பனே சாது, இலங்கைக்கு 51 % இந்தியாவுக்கு 49 % . இதுதான் இலங்கை அரசின் முடிவு. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எதனை தரம்தான் சொல்ல வேண்டும். தலைக்குள்ள ஒரு நாசமும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க வேண்டாம் – திஸ்ஸ அத்தநாயக்க

tissa-400.png
 42 Views

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது என்று அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே அந்தத் தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது என அறிந்துகொள்ள முடிகின்றது. இதில் 49 வீதம் இந்தியாவுக்கும், 51 வீதம் இலங்கைக்கும் வழங்கப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது. தெற்குமுனையமும் 65 வீதம் இந்தியாவுக்கே வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அபிவிருத்திகளில் இலங்கைக்கு கிடைத்த இலாபம் ஒன்றுமே இல்லை. இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை இன்றும் நட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் துறைமுகங்களை வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டாம். குறிப்பாக கிழக்கு முனையம் இலங்கைக்கு கிடைத்துள்ள முக்கிய வளமாகும். அதனை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம்.

மேலும் துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 900 பேரளவில் கொரோனா வைரஸ் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் துறைமுகம் முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. இதனால் இலங்கைக்கு வரும் கப்பல்கள் எண்ணிக்கை குறைவடையும் நிலைமை உருவாகியுள்ளது.

பிரதான சர்வதேச நிறுவனங்கள் இலங்கை வருவதைத் தவிர்த்துள்ளன. துறைமுகத்தின் கடன்கள் மாத்திரம் மொத்தக் கடன்களில் 24 வீதமாகும். இதிலிருந்து துறைமுகங்களை எவ்வாறு மீட்பது, அதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை ஆராயவேண்டும். தற்காலிக வருமானங்களைக் கருத்தில் கொண்டு நீண்டகால நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது. இப்போதும்கூட துறைமுகத் தில்வரும் வருமானத்தில் சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது பாரிய நிதி மோசடி” என்றார்.

 

https://www.ilakku.org/துறைமுக-கிழக்கு-முனையத்த/

 
 
 
 
1 hour ago, உடையார் said:

துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க வேண்டாம் – திஸ்ஸ அத்தநாயக்க

tissa-400.png
 42 Views

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது என்று அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே அந்தத் தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது என அறிந்துகொள்ள முடிகின்றது. இதில் 49 வீதம் இந்தியாவுக்கும், 51 வீதம் இலங்கைக்கும் வழங்கப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது. தெற்குமுனையமும் 65 வீதம் இந்தியாவுக்கே வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அபிவிருத்திகளில் இலங்கைக்கு கிடைத்த இலாபம் ஒன்றுமே இல்லை. இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை இன்றும் நட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் துறைமுகங்களை வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டாம். குறிப்பாக கிழக்கு முனையம் இலங்கைக்கு கிடைத்துள்ள முக்கிய வளமாகும். அதனை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம்.

மேலும் துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 900 பேரளவில் கொரோனா வைரஸ் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் துறைமுகம் முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. இதனால் இலங்கைக்கு வரும் கப்பல்கள் எண்ணிக்கை குறைவடையும் நிலைமை உருவாகியுள்ளது.

பிரதான சர்வதேச நிறுவனங்கள் இலங்கை வருவதைத் தவிர்த்துள்ளன. துறைமுகத்தின் கடன்கள் மாத்திரம் மொத்தக் கடன்களில் 24 வீதமாகும். இதிலிருந்து துறைமுகங்களை எவ்வாறு மீட்பது, அதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை ஆராயவேண்டும். தற்காலிக வருமானங்களைக் கருத்தில் கொண்டு நீண்டகால நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது. இப்போதும்கூட துறைமுகத் தில்வரும் வருமானத்தில் சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது பாரிய நிதி மோசடி” என்றார்.

 

https://www.ilakku.org/துறைமுக-கிழக்கு-முனையத்த/

 
 
 
 

இவங்கள் ஆட்சியில் இருந்தால் ஒரு கதை, வெளியே போனால் இன்னொரு கதை. அதுதான் நாடு இப்படி குட்டிசுவருகிப்போய் இருக்குது. ஒரு கொள்கை என்பது கிடையாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.