Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புயல் எச்சரிக்கை- பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புயல் எச்சரிக்கை-  பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு

 
IMG_0962-696x464.jpg
 64 Views

கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து முன்னாயத்த செயற்பாடுகள்  எடுக்கப்பட்டுள்ளன.

தென் கிழக்காக உருவாகியுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாற்றமடைந்து கிழக்கு ஊடாக கடந்துசெல்லும் நிலையேற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாலை ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகரசபையின் அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள்,அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

IMG_0943.jpg

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ குழு வழங்கும் தீர்மானங்களுக்கு அமைவாக நாளை பிற்பகல் தொடக்கம் பொதுமக்களுக்கு அது தொடர்பில் தெளிவூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மாநகரசபையின் முழுமையான பங்களிப்பினை வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

புரவி சூறாவளி மட்டக்கள்பபு மாநகரத்தினை தாக்கும்பட்சத்தில் மாநகரசபையின் முன்னாயத்த படையணி மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு தயாராகயிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

பதவி நிலை உத்தியோகத்தர்களின் விடுமுறைகளை இரத்து செய்வதோடு, 24 மணி நேரமும் தயார் நிலையில் இருத்தலுடன் அனர்த்த ஆபயக் குறைப்பு பணிகளில் ஈடுபடும் வகையில் மாநகர தீயணைப்பு படையணியை முழுமையாக பயன் படுத்தல். அத்துடன் மாநகரத்துக்குள் காணப்படும் ஆபத்தான மரங்களை இனம் கண்டு உடனடியாக அகற்றுத்தல் போன்ற தீர்மானங்கள் இதன்போது எட்டப்பட்டன.

இதேநேரம் சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் தாழமுக்கம் எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக கிழக்கில் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் திருகோணமலை ஊடாக சூறாவளியாக ஊடறுக்கும்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/புயல்-எச்சரிக்கை-பாதுகா/

  • கருத்துக்கள உறவுகள்

 வரப் போகும் புயலுக்கு... நீதிமன்றம் தடை போட முடியாதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை கடக்கவுள்ள புயல் – பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

 
1-4.jpg
 12 Views

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில்  உருவாகியுள்ள ஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக மாறி பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் மழை மற்றும் காற்று  அளவில் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில்  உருவான தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இத் தொகுதியானது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்த சூறாவளி பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை இன்று (புதன்கிழமை) மாலையில் அல்லது இரவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்சூடும் என்பதோடு, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் சூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

https://www.ilakku.org/இலங்கையை-கடக்கவுள்ள-புயல/

  • கருத்துக்கள உறவுகள்

purevi.JPG

pure.JPG

p.JPG

வடமாராட்சி கிழக்கு தான் புயல் கடக்கும் மையம் போல் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.