Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலும் தெற்கிலும் வெலிக்கடை மஹர சிறைச்சாலைகளிலும் கொல்லப்பட்டவர்கள் எங்கள் பிள்ளைகளே-மங்களசமரவீர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதி தீவிரவாதி குற்றச்செயலில் ஈடுபட்டவர் என தீர்ப்பளிக்கப்பட்ட எவரையும் சட்டத்தின்கீழ் பாதுகாக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர வலியுறுத்தியுள்ளார்.

mangala-300x181.jpg
சமூகஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு ஒருசட்டம் என்பதனை வெறும் வார்த்தைகளிற்கு அப்பால் சென்று உண்மையில் நடைமுறைப்படுத்துவது எப்படி என நாட்டை நேசிப்பவர்கள் சிந்திக்கவேண்டிய தருணம் வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹரசிறைச்சாலை கலவரத்தின் பின்னர் சிறைச்சாலை வாசலில் தாய்மார்கள் கண்ணீர்விட்டு அழுதது தென்பகுதியில் கண்ணீர்விட்ட தாய்மார்களை நினைவுபடுத்தியது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

127604016_3659461730782952_7115952505561
அதன் பின்னர் நாங்கள் வடபகுதியின் தாய்மார்களின் கண்ணீரை மாத்திரமில்லை; அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரையும் பார்த்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை செய்யப்படுபவர்கள் எங்களின் தேசத்தின் பிள்ளைகள்,என தெரிவித்துள்ள மங்களசமரவீர தென்பகுதியில் கொல்லப்பட்ட சிங்களவர்கள் வடபகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள் மகரசிறைச்சாலையில் கொல்லப்பட்டவர்கள் 2012 இல் வெலிக்கடையில் கொல்லப்பட்டவர்கள் எங்களின் பிள்ளைகள் எங்கள் நாட்டின் பிள்ளைகள் என்பதை நாங்கள் மறக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக இடம்பெறும் விடயங்களை பார்க்கும்போது சுதந்திரத்திற்கு பின்னர் தாய்மார்களின் கண்ணீரை தவிர மக்களிற்கு வேறு எதுவும் என்ற கருத்து நிராகரிக்க முடியாதது போல தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கிலும் தெற்கிலும் வெலிக்கடை மஹர சிறைச்சாலைகளிலும் கொல்லப்பட்டவர்கள் எங்கள் பிள்ளைகளே-மங்களசமரவீர – Thinakkural

நேர்மையாக செயட்படக்கூடிய , பேசக்கூடிய ஒரு மனிதன். இருந்தாலும் அது பெரும்பான்மை சிங்கள பவுத்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இவர் அரசியல் பேசி மக்களால் (தெட்கு) மக்களால் தெரிவு செய்யப்படுவது என்பது சிரமம். எனவே இவர் இப்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விடடார். இருந்தாலும் தேசிய பட்டியல்மூலமாக இவருக்கு ஆசனம் கொடுப்பதட்கும் சிங்கள காட்சிகள் தயங்குகின்றன. சிங்கள காட்சிகள் பவுத்த பேரினவாதத்துக்கு அஞ்சுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய முற்படுகிறார். ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடை செய்ய முன்னின்று உழைத்தவர்களில் இவர் முதன்மையானவர். அது முடிந்த கையுடன் கோத்தா இவர்மேல் தன் வேலையை காட்ட வெளிக்கிட்டு, தாக்குப்பிடிக்க முடியாமல் கட்சி தாவினார். இவரும் பொன்சேகாவும்  இன்னும் உயிருடன் இருப்பதேபெரிய அதிசயம் இலங்கை கோத்தா அரசியலில். அங்காலை சமாதான தேவதை ஒருபுறம் தமிழருக்காக அழுகிறதா. இன்னும் சில நாட்கள் போக மைத்திரி, ரணில் எல்லோரும் தமிழருக்காக முதலைக்கண்ணீர் விடுவினம். விழுந்த தங்கள் அரசியலை சரி செய்ய.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.