Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்.!

cropped-zcza.jpg

அவர்களின் ஊடக அறிக்கை பின்வருமாறு

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8000 கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமாடன முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கரிசனை காட்டத் தொடங்கி இருக்கின்றார்கள். அதற்கு சாதகமான இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து சிறுபான்மைத் தரப்பினரும் இனம், மதம், கட்சி, அரசியல், பிரதேச வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு மனித நேயத்திற்கு மதிப்பளித்து கொள்கையளவில் ஒன்றுபட்டு, எமது விடுதலைக்கு வழி சமையுங்கள் என வினயமுடன் வேண்டுகிறோம்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறையே வாழ்க்கை என சீரழிந்து கொண்டிருக்கும் அரசியல் கைதிகளாகிய நாம் உயிரை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு நிகழ் காலத்தைக் நகர்த்;துகிறோம். நாட்டில் தேர்தல்கள் வருகின்ற போதும், ஆட்சியதிகாரங்கள் மாறுகின்றபோதும் எங்களது சிறைவாழ்வுக்கு விடிவு பிறக்குமென கண்ட கனவுகள் எல்லாம் கானல் நீராகிப் போனது.

விடுதலையை வலியுறுத்தி நாம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டபோதெல்லாம் திறந்த வாக்குறுதிகளும், தீராத நோய்களுமே எமக்கு மிஞ்சிப் போனது. இதுவரை தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு எம்மோடு சிறையிருந்த பத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறைக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

அது தவிர சிறை வன்முறைகளின்போது நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். தற்போது உயிர்க்கொல்லித் தொற்று நோயான கொவிட் 19 சிறைக் கொத்தணியாக மாறி ஆயிரக்கணக்கான கைதிகளை அச்சுறுத்துவதுடன், சில உயிர்களையும் பலிகொண்டிருக்கின்றது.

எமது குடும்ப உறவுகள் உழைக்கும் கைகளை இழந்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். எமது பிள்ளைகள் தந்தையரின் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கின்றார்கள். வயதான பெற்றோர் தமது இறுதிக்காலத்திலாவது ‘என் பிள்ளை கொள்ளியிட உயிரோடு வருவானா?’ என கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்.  எனவே சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணிகளால் சிறை வைக்கப்பட்டுள்ள எமது விடுதலைக்கு வழி சமைக்க அனைவரும் முன்வாருங்கள்.

இன்று சிறைகளில் வாடுகின்ற நாம் சுகபோகமாக வாழத்தெரியாமல் சிக்குப்பட்டுப் போயிருப்பவர்கள் அல்ல. எமது சொந்த சுயநல லாபத்திற்காகச் செயற்பட்டு சிறையேகியவர்களுமல்ல என்பதைத் தயவு செய்து சற்றுப் புரிந்து கொள்ளுங்கள்.

மூன்றரை கால யுத்தம் முடிவுறுத்தப்பட்டு, 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டு தசாப்தமொன்று கடந்துள்ள நிலையிலும்கூட, 20 வருடங்களாகச் சிறையிருக்கும் எமது விடுதலை வாசல் திறக்கப்படவில்லை என்பது பெருந் துக்கமல்லவா?

எனவே சர்வமதத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் சமூக நல அமைப்புக்கள் என அனைத்துத் தரப்புக்களும் அரசியல் கைதிகளான எமது விடுதலை விடயத்தில் தத்தமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் சிறைக்கைதிகளின் விடயத்தில் தீரமானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. அந்த வகையில் ‘ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விடுதலை செய்யப்படுவோர்’ பட்டியலுக்குள் தமிழ் அரசியல் கைதிகளையும் உள்வாங்குமாறு, அரசியல் அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் தனித்தனியான கருணை மனுக்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு முன்வைக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதன்மூலம் எமக்கும் சமூகத்துடன் இணைந்து வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதுடன் எம்மைப் பிரிந்து நித்தமும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளின் கண்ணீருக்கும் ஒரு முடிவு கிட்டும் என எதிர்பார்க்கிறோம்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/12/93927/

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்

 
1-9-1-696x381.jpg
 53 Views

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கையொப்பம் இட்ட மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2020-12-09-at-6.18.25-PM.

நாடாளுமன்ற உறுப்பினர்களான,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செல்வராசா கஜேந்திரன்

சி.வி.விக்கினேஸ்வரன்

இரா.சம்பந்தன்
எம்.எ.சுமந்திரன்
செல்வம் அடைக்கலநாமன்
சாள்ஸ் நிர்மலநாதன்
சிவஞனம் சிறீதரன்
நோகராதலிங்கம்
கோ.கருணாகரம்
சாணக்கியன் இராசமாணிக்கம்
தவராசா கலையரசன்
சித்தார்தன்

மனோகணேசன்
ராதாகிருஸ்ணன்

WhatsApp-Image-2020-12-09-at-6.18.25-PM-

உள்ளிட்ட 15 பேரது கையொப்பங்களுடன் கையளிக்கப்பட்டது.

 

https://www.ilakku.org/அரசியல்-கைதிகளை-விடுதலை-2/

எங்களது விடுதலைக்கு ஒன்றிணைந்து செயற்படுங்கள் தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்

 
1-58-696x464.jpg
 66 Views

எங்களது விடுதலைக்கு ஒன்றிணைந்து செயற்படுங்கள் என தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில்,

“நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினை அடுத்து  ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

அந்தவகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8000 கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமாடன முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மைப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கரிசனை காட்டத் தொடங்கி இருக்கின்றார்கள். அதற்கு சாதகமான இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து சிறுபான்மைத் தரப்பினரும் இனம், மதம், கட்சி, அரசியல், பிரதேச வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு மனித நேயத்திற்கு மதிப்பளித்து கொள்கையளவில் ஒன்றுபட்டு, எமது விடுதலைக்கு வழி சமையுங்கள் என வினயமுடன் வேண்டுகிறோம்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறையே வாழ்க்கை என சீரழிந்து கொண்டிருக்கும் அரசியல் கைதிகளாகிய நாம் உயிரை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு நிகழ் காலத்தைக் நகர்த்துகிறோம்.

நாட்டில் தேர்தல்கள் வருகின்ற போதும், ஆட்சியதிகாரங்கள் மாறுகின்றபோதும் எங்களது சிறைவாழ்வுக்கு விடிவு பிறக்குமென கண்ட கனவுகள் எல்லாம் கானல் நீராகிப் போனது.

விடுதலையை வலியுறுத்தி நாம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டபோதெல்லாம் திறந்த வாக்குறுதிகளும், தீராத நோய்களுமே எமக்கு மிஞ்சிப் போனது. இதுவரை தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு எம்மோடு சிறையிருந்த பத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறைக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

அது தவிர சிறை வன்முறைகளின்போது நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். தற்போது உயிர்க்கொல்லித் தொற்று நோயான கோவிட் 19 சிறைக் கொத்தணியாக மாறி ஆயிரக்கணக்கான கைதிகளை அச்சுறுத்துவதுடன், சில உயிர்களையும் பலிகொண்டிருக்கின்றது.

எமது குடும்ப உறவுகள் உழைக்கும் கைகளை இழந்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். எமது பிள்ளைகள் தந்தையரின் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கின்றார்கள். வயதான பெற்றோர் தமது இறுதிக்காலத்திலாவது ‘என் பிள்ளை கொள்ளியிட உயிரோடு வருவானா?’ என கண்ணீரோடு காத்திருக்கிறார்கள். எனவே சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணிகளால் சிறை வைக்கப்பட்டுள்ள எமது விடுதலைக்கு வழி சமைக்க அனைவரும் முன்வாருங்கள்.

இன்று சிறைகளில் வாடுகின்ற நாம் சுகபோகமாக வாழத்தெரியாமல் சிக்குப்பட்டுப் போயிருப்பவர்கள் அல்ல. எமது சொந்த சுயநல இலாபத்திற்காகச் செயற்பட்டு சிறையேகியவர்களுமல்ல என்பதைத் தயவு செய்து சற்றுப் புரிந்து கொள்ளுங்கள். மூன்றரை கால யுத்தம் முடிவுறுத்தப்பட்டு, 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டு தசாப்தமொன்று கடந்துள்ள நிலையிலும்கூட, 20 வருடங்களாகச் சிறையிருக்கும் எமது விடுதலை வாசல் திறக்கப்படவில்லை என்பது பெருந் துக்கமல்லவா?

எனவே சர்வமதத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் சமூக நல அமைப்புக்கள் என அனைத்துத் தரப்புக்களும் அரசியல் கைதிகளான எமது விடுதலை விடயத்தில் தத்தமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் சிறைக்கைதிகளின் விடயத்தில் தீரமானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. அந்த வகையில் ‘ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விடுதலை செய்யப்படுவோர்’ பட்டியலுக்குள் தமிழ் அரசியல் கைதிகளையும் உள்வாங்குமாறுஇ அரசியல் அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் தனித்தனியான கருணை மனுக்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு முன்வைக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதன்மூலம் எமக்கும் சமூகத்துடன் இணைந்து வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதுடன் எம்மைப் பிரிந்து நித்தமும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளின் கண்ணீருக்கும் ஒரு முடிவு கிட்டும் என எதிர்பார்க்கிறோம்.” என்றுள்ளது.

https://www.ilakku.org/எங்களது-விடுதலைக்கு-ஒன்ற/

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்- கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

 
DSCN0926-696x522.jpg
 52 Views

“மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசினால் எண்ணாயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் நீண்ட காலமாக சிறையில் வாடும் எமது தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்” என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா தெரித்துள்ளார்.

DSCN0869.jpg

மட்டக்களப்பு மாநகரசபையின் 33வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளரை வரவேற்றலுடன் ஆரம்பமான இச்சபை அமர்வில், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட புதிய ஆணையாளர் ம.தயாபரன் மற்றும் பொறியியலாளர், கணக்காளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

DSCN0874.jpg

இதன்போதே மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா தனது உரையில்  தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிக்க ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

 

https://www.ilakku.org/தமிழ்-அரசியல்-கைதிகள்-வி-5/

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் விடுதலை தற்போதைய அரசின் கீழ் சாத்தியப்படாது – அருட்தந்தை சக்திவேல்

 
%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%
 1 Views

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதென்பது தற்போதைய அரசாங்கத்தின் கீழ்சாத்தியப்படாது. எனவே இதுவிடயத்தில் வெளிநாட்டு சக்திகளுடனும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுடனும் பேச்சுகளை நடத்துவதற்குத் தயாராகி வருகின்றோம் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சிலர் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியுள்ள போதிலும், அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில, அரசியல் கைதிகள் என்று எவரும் நாட்டின் சிறைச்சாலைகளில் இல்லை என்று கூறியுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவைவருமாறு:-

“அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஆளுந்தரப்பின் தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். எனவே இந்த நாட்டில் அரசியல் கைதிகள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு அவர்கள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோதே, அரசியல் கைதிகள் எவருமில்லை என்று உதயகம்மன்பில கூறியிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதேபோன்று அரசியல் கைதிகள் எவருமில்லை என்று முன்னர் ஒருமுறை கூறியிருந்தார்.

அதேவேளை தற்போதைய அரசாங்கம்தேர்தல் பிரசாரத்தின்போதே இந்த நாட்டில் அரசியல் பிரச்சினை இல்லை என்றும் பொருளாதார மற்றும் அபிவிருத்திசார் பிரச்சினைகளே இருக்கின்றன என்றுமே கூறிவந்தது. ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் சிந்தனையைப் பிரதிபலிக்கும் விதமாகவே தற்போது உதயகம்மன்பில மேற்படி கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

எனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதென்பது தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சாத்தியப்படாது என்பது தெளிவாகின்றது. ஆகவே இந்த விடயத்தில் வெளிநாட்டு சக்திகளுடனும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுடனும் பேச்சுகளை நடத்துவதற்குத் தயாராகி வருகின்றோம்” என்றார்.

 

https://www.ilakku.org/ஆரசியல்-கைதிகளின்-விடுதல/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம் – சம்பந்தன்

 
SAMPANTHAN025.png
 14 Views

‘தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் நல்ல செய்தி வரும் என்று நாம் காத்திருக்கின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தமிழ் அரசியல் கைதிகளை ஆளும் தரப்பிலுள்ள சிலர் இனவாத ரீதியில் பார்ப்பது வேதனை தரும் விடயமாகும். இது தொடர்பில் அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்களைத்தான் நாம் ‘தமிழ் அரசியல் கைதிகள்’ என்கிறோம். அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

அவர்களின் விடுதலை தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கடிதம் அனுப்பியுள்ளோம். அந்தக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் நல்ல செய்தி வரும் என்று நாம் காத்திருக்கின்றோம்” என்றார்.

 

https://www.ilakku.org/தமிழ்-அரசியல்-கைதிகள்-வி-6/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.