Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்க முடியாத அழிவுகளை விட்டுச் சென்ற சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியாத அழிவுகளை விட்டுச் சென்ற சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று

சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பேரனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உறவுகள் நினைவாக தமிழர் தாயகத்திலும் – நாடு முழுவதும் நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2004 டிசெம்பர் 26 ஆம் திகதி சுமத்ராதீவின் அருகே கடலில் ஏற்பட்ட 9.2 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தால் ஆழிப்பேரலை உருவானது. இந்தப் பேரலை இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மியான்மர் என 14 நாடுகளின் கரையோரப் பகுதிகளை தாக்கியது.

இலங்கையில் தமிழர் தாயகமான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்கள் பேரலையால் தாக்கப்பட்டன. இதனால், 35 ஆயிரத்து 322 மக்கள் கொல்லப்பட்டனர். 5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். 90 ஆயிரம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்தனர்.

பேரலை தாக்கிய நாடுகள் முழுவதிலுமாக 2 இலட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்தனர். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போயினர்.

இந்தப் பேரனர்த்தத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று, கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நினைவேந்தப்படவுள்ளது. சுகாதார விதிகளை அனுசரித்து நினைவேந்தலை நடத்த நமது நாட்டிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறக்க முடியாத அழிவுகளை விட்டுச் சென்ற சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று – Thinakkural 

 

 
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் சுனாமி தாக்கத்தின் 16 வது நினைவு தினம் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு

battinews0010.jpg(ரீ.எல்.ஜவ்பர்கான்)

ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதனை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா சுகாதார நடைமுறைகளைப பேணி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1800 பேரை பலிகொண்ட நாவலடி, டச்பார்,புதுமுத்துவாரம்,திருச்செந்தூர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளில் மெழுகுதிரி ஏற்றி சமய வழிபாடுகள் இடம்பெற்றன.
பிரதான நிகழ்வு நாவலடி நினைவுத்தூபியில் இடம்பெற்றது. இறந்தவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

.அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சுனாமி தாக்கத்தில் உறவுகளை இழந்தவர்கள் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

 

 

http://www.battinews.com/2020/12/tsunami-16.html

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பில் ஒன்றுபட்டு, சுடர் ஏற்றி, அஞ்சலி!

December 26, 2020

Puthu-kudiyiruppu.jpg

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று (26.12.20) இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள சுனாமி நினைவாலயத்தில், வணக்க நிகழ்வுகள் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு காலை 7.50 மணிக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலையின் போது உயிர்நீர்த்த உறவுகளை புதுக்குடியிருப்பில் அடக்கம் செய்த இடத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவாலயத்தில்  நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன்; விநோனோகராதலிங்கம்  மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர். 

உயிரிழந்தவர்கள் நினைவான பொதுச் சுடரினை மாவைசேனாதிராசா, செ.கஜேந்திரன், வினோநோகரதலிங்கம், சிவமோகான் ஆகியோர் இணைந்து ஏற்றிவைக்க, தொடர்ந்து நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து மலர் வணகத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் மற்றும் சுனாமியின் போது உறவுகளை இழந்த செல்வச்சந்திரன் ஆகியோர் தொடங்கிவைக்க தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளதுடன்,  சுனாமி நினைவாலய வளாகத்தில் புதைக்கப்பபட்டவர்களின் நினைவாக பெயர் பொறிக்கப்பட்ட பெயர் கல்லிற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர். 

மக்கள் பிரதிநிதிகளுடன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்,பிரதேச சபையின் உறுப்பினர்கள் உயிரிழந்த உறவினர்கள் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர். 
 

https://globaltamilnews.net/2020/154863/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியாத அழிவுகளை விட்டுச் சென்ற சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று

சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பேரனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உறவுகள் நினைவாக தமிழர் தாயகத்திலும் – நாடு முழுவதும் நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2004 டிசெம்பர் 26 ஆம் திகதி சுமத்ராதீவின் அருகே கடலில் ஏற்பட்ட 9.2 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தால் ஆழிப்பேரலை உருவானது. இந்தப் பேரலை இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மியான்மர் என 14 நாடுகளின் கரையோரப் பகுதிகளை தாக்கியது.

இலங்கையில் தமிழர் தாயகமான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்கள் பேரலையால் தாக்கப்பட்டன. இதனால், 35 ஆயிரத்து 322 மக்கள் கொல்லப்பட்டனர். 5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். 90 ஆயிரம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்தனர்.

பேரலை தாக்கிய நாடுகள் முழுவதிலுமாக 2 இலட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்தனர். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போயினர்.

இந்தப் பேரனர்த்தத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று, கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நினைவேந்தப்படவுள்ளது. சுகாதார விதிகளை அனுசரித்து நினைவேந்தலை நடத்த நமது நாட்டிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மறக்க முடியாத அழிவுகளை விட்டுச் சென்ற சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று – Thinakkural

 

தவறுதலாக இரண்டு தரம் இணைக்கபட்டு விட்டது வெட்டிக் கொள்ளலாம்.✂️

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புகள் நினைவு நாளாக கடந்து செல்கிறது தம்பி, 2 மாமி  குழந்தைகள் 

ஆழ்ந்த இரங்கல்கள் அனைத்து உறவுகளுக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.