Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்தவிகடன் புலிகள் மீது பழி

Featured Replies

ஆனந்தவிகடனின் இந்தவார ஆசிரியர் தலையங்கத்தில் ஐந்து மீனவர்கள் படுகொலை மற்றும் பன்னிரண்டு மீனவர்களை கடத்தியது விடுதலைப்புலிகள் என குற்றஞ்சாட்டி உள்ளது. இவ்வளவு நாட்கள் மௌனமாக இருந்துவிட்டு யாருடையதோ ஒரு வற்புறுத்தலின் பின் இவ்வாறு தலையங்கம் இட்டுள்ளது.

யாராவது விகடன் இணையதளத்தில் இருந்து அந்த செய்தியை இங்கே ஒட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • தொடங்கியவர்

ஆனந்தவிகடன் இதற்காக வருத்தம் தெரிவித்து அடுத்தஇதழில் செய்திவெளியிட வேண்டும். இல்லை என்றால் உலகத்தமிழர்கள் விகடன் வாங்குவதை நிறுத்தவேண்டும்.

அதற்கு பதிலை அனுப்புவோம் ஆனந்த விகடனுக்கு ஒரு புளக்கை உருவாக்கி தமிழர்களை ஒப்பமிட செய்து எம் எதிர்பை வெளிக்காட்டுவோம் எங்கே நம் வானவில் உருவாக்கும் ஒரு புளக்கை எனக்கு நேரமில்லை பரீட்சை என்பதால்

வந்துட்டேன்

என்ன பேரில உருவாக்குறது?

வந்துட்டேன்

என்ன பேரில உருவாக்குறது?

நல்ல பெயரை உருவாக்கி இந்த கட்டுரையில் இருக்கும் பிழைகளை எடுத்துகாட்டி இதற்கான மன்னிப்பை கேட்காவிடின் ஆனந்த விகடன் பத்திரிகை முற்றுமுழுதாக புறக்கணிக்கப்படும் என சொல்லி அதற்கு மக்கள் கருத்து எழுதும் படி செய்யும்

யாராவது கட்டுரையை இங்கே பிரசுரியுங்களேன்

ஆனந்தவிகடனின் இந்தவார ஆசிரியர் தலையங்கத்தில் ஐந்து மீனவர்கள் படுகொலை மற்றும் பன்னிரண்டு மீனவர்களை கடத்தியது விடுதலைப்புலிகள் என குற்றஞ்சாட்டி உள்ளது. இவ்வளவு நாட்கள் மௌனமாக இருந்துவிட்டு யாருடையதோ ஒரு வற்புறுத்தலின் பின் இவ்வாறு தலையங்கம் இட்டுள்ளது.

யாராவது விகடன் இணையதளத்தில் இருந்து அந்த செய்தியை இங்கே ஒட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாரம் ஏதாவது புதிதாக வந்ததோ தெரியவில்லை. கீழே உள்ளது கடந்த 25.05.07 அன்றைய பதிப்பில் இருந்து

இது அல்ல போர் தர்மம்!


அறுபத்தெட்டு நாள் பதைபதைப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் பத்திரமாக மீண்டுவிட்டார்கள்!


இத்தனை நாளும் நெருப்புப் படுக்கையில் துடித்துக்கிடந்தவர்களின் சொந்தங்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றன. மீண்டு வந்த தமிழக மீனவர்கள், 'எங்களைக் கடத்திவைத்திருந்தது விடுதலைப் புலிகள்தான்' என்று தந்திருக்கும் வாக்குமூலம், நிம்மதிக்கு நடுவிலும் வேதனைத் தீயைக் கிளப்புகிறது!


'ஒரு பக்கம் இந்திய தேசத்தின் & குறிப்பாக தமிழ் தேசத்தின் உதவியைக் கேட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட துரோகங்களைத் தொடர்வதுதான் புலிகளின் பாணியா?'

என்ற திகைப்பால் விளைந்த வேதனை நெருப்பு அது.


'இந்தக் கடத்தல் மட்டுமல்ல... ஐந்து மீனவர்களை நடுக்கடலில் கொன்றதும் புலிகள்தான்' என்று ஏற்கெனவே தமிழகக் காவல் துறை ஆதாரங்களை வெளியிட்டபோது, 'இருக்கவே இருக்காது! ஒருபோதும் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள்' என்று தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள் நற்சான்றுப் பத்திரம் வாசித்தார்கள்.


அவ்வளவு ஏன்... முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தது புலிகள்தான் என்று நிரூபணமான பிறகும்கூட, சில தலைவர்களின் குரல் புலிகளுக்கு ஆதரவாக ஒலித்ததே..! போருக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத அப்பாவிகளின் உயிரைப் பறிப்பதோ, அவர்களைப் பிணைக் கைதியாகப் பிடிப்பதோ தர்மம் ஆகாது. அதை உணர்ந்து, ஈழத் தமிழரின் நலன் என்ற அளவில் மட்டும் தங்கள் புலி ஆதரவுக் குரலை இந்தத் தலைவர்கள் நிறுத்திக்கொள்ளட்டும். போர் தர்மம் மீறப்படும்போதும் புலி ஆதரவுக் குரலை ஒலிக்கும் தலைவர்கள்... முற்றிலுமாக நம் மண்ணையும் மனதையும்விட்டு அந்நியப்பட்டுப்போவார்கள்!


நன்றி: ஆனந்தவிகடன்
இதற்கு பிரான்சில் இருந்து பரணி கிருஸ்ணரஜனி எழுதியதில் ஒரு பகுதி மறுவார (01.06.07) ஆனந்த விகடனில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. (அக் கட்டுரையின் முழுவடிவம்)
'இது அல்ல ஊடக தர்மம்!'

கடந்த ஐந்து வருடங்களாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தைத் தமிழக மக்களிடையே பரப்பி, அதுவரை இருந்த மாயைகளைத் தகர்த்தெறிந்ததில் 'விகடன்' குழுமத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.


ஆனால், கடந்த இதழ் தலையங்கம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதையாக மாறியிருக்கிறது. சரியான தர்க்க நியாயங்களை மறுதலித்து, ஒற்றை மதிப்பீட்டின் மூலம் ஒரு முடிவை நோக்கி நகர்ந்திருக்கிறீர்கள்; அல்லது, நகர்த்தப் பட்டிருக்கிறீர்கள்.


அண்மைக்காலமாக, சில துணை ராணுவக் குழுக்கள் ஈழத்திலேயே சில அசம்பாவிதங்களை நடத்திவிட்டுப் புலிகள் மீது பழிபோட்ட & இன்னும் போடுகிற கதை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சிங்கள புலனாய்வுத் துறையின் ஓர் அங்கமாகச் செயல்படும் அவர்கள் ஏன் புலிகள் மீது பழி போட்டிருக்கக் கூடாது? தமிழகக் காவல் துறை கைது செய்து வைத்திருப்பதுகூட இந்த துணை ராணுவக் குழுவினராக ஏன் இருக்கக் கூடாது?


அப்பாவிகளைக் கடத்துவதும் கொலை செய்வதும் போர் தர்மம் இல்லை. அது புலிகளுக்குத் தெளிவாகவே தெரியும். அதே நேரம், பொய்யான கட்டுக்கதை களினூடாக, முழுமையாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை முன்வைத்து, ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் ஓர் அமைப்பின் மீது சேறடிப்பது ஊடக தர்மமா?


பரணி கிருஸ்ணரஜனி

நன்றி: ஆனந்தவிகடன்

ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு கருத்துக்களை எழுதாது நியாயம் கோரி நீங்கள் நேரடியாக ஆனந்தவிகடனுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பலாம்.

Edited by Aalavanthan

இங்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை

12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டது ..... எல்லாம் மர்ம நாவலைப்போல்வே உள்ளது.

உளவுத்துறை இயற்றிய இந்த நாடகத்தை தமிழக மக்கள் நம்பவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை

அது சரி, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா, இது புலிகளுக்கெதிரான கபட நாடகம் என்று!

அட சிங்களவங்களை தாக்கியிருந்தாலும் இப்படி புனைகதை எழுதலாம்.

அப்பாவித் தமிழ் மக்களை கொல்வதால் எங்களுக்கேதுங்க நன்மை?

உங்கள் சந்தேகம் தீரவேண்டுமென்றே நாம் முயற்சிக்கிறோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.