Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

IMG_6203-696x392.jpg
 30 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலங்களில் 12கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாநகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூன்று தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

IMG_6236.jpg

மட்டக்களப்பு மாநகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் காத்தான்குடி பிரதேசமும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளமையினால், அப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

மேலும், பொலிஸாரும் இராணுவத்தினரும் நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் காணமுடிகின்றது.

காத்தான்குடியின் இரு எல்லைப்பகுதிகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். காத்தான்குடி பகுதியில் இருந்து வெளியேறுவோர் தொடர்பிலும் காத்தான்குடிக்குள் நுழைவோர் தொடர்பிலும் கண்காணிப்படுகின்றன.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1015பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர்  நா.மயூரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நா.மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலங்களில் 12 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் களுவாஞ்சிகுடியை சேர்ந்த இருவரும் வாழைச்சேனை பகுதியில் ஒருவரும் காத்தான்குடி பகுதியில் மூவரும் ஓட்டமாவடி பகுதியில் ஆறு பேருமாக 12பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

IMG_6248.jpg

நேற்று முன்தினம் காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. காத்தான்குடி பகுதியில் 665பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் 27பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதில் 23பேர் காத்தான்குடியை சேர்ந்தவர்கள்.மூவர் மட்டக்களப்பு பகுதியையும் ஒருவர் பட்டிப்பளை பகுதியையும் சேர்ந்தவர்கள்.

இதேபோன்று மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 549 மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 26 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் 23பேர் காத்தான்குடி பகுதியையும் இருவர் மட்டக்களப்பு பகுதியையும் ஒருவர் ஆரையம்பதியையும்சேர்ந்தவர்களாவர்.

இதனை தொடர்ந்து மாவட்ட கொரோனா செயலணி கலந்துரையாடி, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஐந்து நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மட்டக்களப்பு மாநகரத்துக்குள் உள்ள கடைகள் கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1015பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று காத்தான்குடி சுகாதார பிரிவில் 300அன்டிஜன் சோதனைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

IMG_6232.jpg

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிகை 1224ஆக அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 218ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=38286

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட முஸ்லீம்களால் நிலமை மோசமடையும் நிலைதான் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிரார்கள் இல்லை இட்கு அரசின் அசமந்த போக்கும் கூட இதனால் தமிழ் பகுதிகளும் தொற்றலுக்கு ஆளாகலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் பூட்டு - மாநகர மேயர் 

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், கோழிக்கடைகள், பேக்கரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளும் இன்று வியாழக்கிழமை 31 திகதியில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 3  தினங்களுக்கு பூட்டப்படும் என மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.

 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/142260/Batticaloa-MC-Meyor-Saravanapavan_-_Copy.jpg

 

மாநகரசபையில் இன்று வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் நேற்று புதன்கிழமை  வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்  26 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது. 

இதனடிப்படையில் குறித்த வர்தக நிலையங்களுக்கு வந்து சென்றவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் இந்த செயற்பாடு முடியும்வரை வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

எனவே சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்  என மாநகரசபை இன்று எடுத்த தீர்மானத்தின்படி எதிர்வரும் 3 தினங்களுக்கும் தொடர்ந்து வர்த்தக நிலையங்களை மூட முடிவு செய்துள்ளோம்.  

இதில் பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், கோழிக்கடைகள், பேக்கரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளும் பூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. 

இந்த அறிவித்தலை மீறுபவர்களுக்கு எதிராக மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் கீழ் கொரோனா சட்டத்தின் கீழும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை குறிப்பாக வியாபார நிலையங்களை திறந்து வியாபாரம் நடாத்துக்கின்ற வியாபாரிகள் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும். 

பல கடைகளில் முககவசம் அணியவில்லை மற்றும் இடைவெளி பேணப்படவில்லை, கைகழுவுவதற்கான வசதிகள் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே இவற்றை பின்பற்றி நீங்கள் வியாபார செயற்பாட்டை செய்யவேண்டும். 

அதேவேளை மாநகரசபைப் பகுதியில் கொரோனா தொற்று வராமல் பாதுகாக்க அனைவரது ஒத்துழைப்பையும் நல்குமாறு  கேட்டுக்கொள்வதுடன் நாளை நடக்கவிருக்கும் புதுவருட  ஆராதனையில் பெரிய தேவாலயங்களில் 50 பேரும் சிறிய தேவாலயங்களில் 25 பேரும்  அனுமதிக்கபடும் என்ற விதிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் பூட்டு - மாநகர மேயர்  | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.