Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம்கள் நெருக்கமாகவே உள்ளனர்- வர்த்தகர் கடத்தல்கள் என்பது வதந்தி: அமைச்சர் அமீர் அலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம்கள் நெருக்கமாகவே உள்ளனர்- வர்த்தகர் கடத்தல்கள் என்பது வதந்தி: அமைச்சர் அமீர் அலி

[வெள்ளிக்கிழமை, 15 யூன் 2007, 20:16 ஈழம்] [செ.விசுவநாதன்]

இலங்கையில் முஸ்லிம் வர்த்தகர்களைக் கடத்தி அவர்களிடமிருந்து கப்பம் பெறப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரம் செய்து வருவது திட்டமிடப்பட்ட வதந்தி என்று பேரிடர் நிவாரண சேவைகள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது:

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் முஸ்லிம் மக்களுக்குள்ள நெருக்கத்தையும் அவர்கள் வழங்கி வரும் ஆதரவையும் சிதைப்பதற்கான முயற்சியே இவ்வதந்தியின் நோக்கமாகும்.

முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்படுவதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதோடு, இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை இரு வாரங்களுக்குள் அரசாங்கம் எடுக்காவிட்டால் முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலக வேண்டுமெனவும் அவர் சவால் விடுத்திருந்தார். இவ்வாறு பதவி விலக வேண்டுமென்றால் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலையே நினைத்துப் பார்க்க முடியாது.

வர்த்தகர்கள் 11 பேர் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவை தொடர்பில் காவல்துறை மற்றும் இரகசிய புலனாய்வு அதிகாரிகள், கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர்களை விசாரித்த போது அவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை என்றும் தம்மிடம் யாரும் கப்பம் பெறவில்லையென்றும் குறித்த நபர்கள் தெரிவித்துள்ளனர். ஆக, கடத்தப்பட்டதாக கூறப்படுபவர்களே தமக்கு அவ்வாறு எதுவும் நிகழவில்லையென சொல்லும் போது இந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு கூறுகின்றனர் என தெரியவில்லை.

முஸ்லிம்கள் பற்றி பேசுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித தகுதிகளும் இல்லை. இவர்களின் ஆட்சிக் காலத்தின் போதுதான் வடக்கிலிந்து 1 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். அப்போது இவர்கள் என்ன செய்தார்கள் எதுவுமில்லை!.

மகிந்த அரச தலைவரானால், முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்ல முடியாது, மக்காவுக்கு ஹஜ் செல்ல முடியாது முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாது என்றெல்லாம் தேர்தல் காலங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்து இந்த ஆட்சியை தடுக்க முயன்ற ஐக்கிய தேசியக் கட்சியினர் அதில் தோற்றுப் போன பின்னர், இப்போது முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்படுவதாகக் கூறி முஸ்லிம் மக்களை இந்த அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்பப் பார்க்கின்றனர். அது ஒருபோதும் சாத்தியமாகாது. இந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் மக்கள் மிகவும் நெருக்கமாகவுள்ளனர்.

எனவே, முஸ்லிம் வர்த்தகர்கள் பயப்படத் தேவையில்லை. ஏதாவது அசம்பாவிதங்கள் உங்களுக்கு நேர்ந்தால் உடனே முஸ்லிம் அமைச்சர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவ தயாராகவுள்ளோம் என்ரார் அவர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, ரிசாத் பதியுதீன், நஜீப் ஏ மஜீத், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான, மகிந்தவின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதினம்

''புலனாய்வு அதிகாரிகள்இ கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர்களை விசாரித்த போது அவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை என்றும் தம்மிடம் யாரும் கப்பம் பெறவில்லையென்றும் குறித்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.""

கடத்தப்பட்டதாக சொல்லப்பட்டவர்களையும் அவரது குடும்பங்களையும் வெளி நாடொன்றில் பத்திரமாக குடியேற்றிவிட்டு அங்குவைத்து கேளுங்கள் உண்மை என்னவென்று சொல்வார்கள்

''புலனாய்வு அதிகாரிகள்இ கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர்களை விசாரித்த போது அவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை என்றும் தம்மிடம் யாரும் கப்பம் பெறவில்லையென்றும் குறித்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.""

கடத்தப்பட்டதாக சொல்லப்பட்டவர்களையும் அவரது குடும்பங்களையும் வெளி நாடொன்றில் பத்திரமாக குடியேற்றிவிட்டு அங்குவைத்து கேளுங்கள் உண்மை என்னவென்று சொல்வார்கள்

BBC பேட்டியில் அழுது அழுது தன் மகனை கடத்திய கதை சொன்னாரே ஒரு முஸ்லீம் பெண்.

அமீர் அலிகள் இப்படித்தான் சொல்வார்கள். பதவிக்காக நக்குபவர்கள். அல்லவா?

:angry:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை மகிந்த அரசாங்கம் கடத்துறதில்லை அவையளோட மிச்சம் சினேகமாயிருக்குதெண்டு சொல்லுறதப் பார்த்தால் மற்றாக்களையெல்லாம் கடத்துறது அரசாங்கம்தான் எண்டிறமாதிரி அதாவது எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையெண்டு சொல்லுறமாதிரியெல்லே இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலிருந்து தமிழ், முஸ்லிம் தொழிலதிபர்கள் தப்பிப் பிறநாடுகளுக்கு ஓடியபின்னர் தானாகத் தெரியவரும்.. தொழிலதிபர்கள் காணாமல்போவதும், தப்பி ஒடுவதும் சிறிலங்காவின் பொருளாதாரத்தைப் பாதிக்கவைக்கும்.. இதுவும் ஒருவகையில் சிங்கள அரசிற்கு சிக்கலையே கொடுக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.