Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மானிடத்தின் நம்பிக்கை கனவுகள்-2021-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


உலக மானிடத்தின் நம்பிக்கை கனவுகள்-2021-பா.உதயன் 

பல துன்பமும் துயரம் நிறைந்த வாழ்வோடு விடைபெறுகிறது 2020.உலகத்தையே உலுக்கி அதன் குரல் வளையை நெரித்தபடி இருக்கும் கொரோனாவின் வரவும் அதன் பின் உலக அரசியல் பொருளாதார சமூகவியல் மாற்றங்களோடு 2021 பிறந்திருக்கிறது.உலகமே எதிர் பார்த்திருக்க முடியாத ஒரு துன்பவியல் நிகழ்வினால் துன்பமும் துயரமுமாக பல்லாயிரம் மனித வாழ்வுகளை பறித்தெடுத்து போய் இருக்கிறது கண்ணுக்குத் தெரியாத வைரசு ஒன்று.பலர் உறவுகளை சிலர் நண்பர்களை அருகில் இருப்பவர்கள் அன்பானவர்கள் என்று அந்த கொரோனாவின் கோரப்பிடியில் அகப்பட்டு அநியாயமாக இறந்து போன துயர நினைவுகளால் தூக்கம் மறந்த துன்பம் நிறைந்த மனிதர்களாகிப்போனோம்.எல்லா எம் கனவுகளையும் எம் பாடல்களையும் கொரோனா என்ற கொடிய நோய் தின்றுகொண்டிருக்கிறது.

புதிய மருந்தின் வரவோடு மாற்றங்களோடு இருளை கடந்து போகும் ஒரு ஒளி தெரிகிறது.இருந்தபோதும் கடந்து போகும் பாதை துரத்தே தெரிந்தாலும் உலகம் விடுதலை ஆகும் என்ற நம்பிக்கையோடு பயணித்தாலும் கொரோனவை போலவே இனி வரும் உலக அரசியல் நிகழ்வும் அமைதியாகவே பயணிக்குமா என்பது கேள்விக்குறியே.கொரோனா செய்யும் படு கொலைகள் போலவே கொடுங்கோல் ஆட்ச்சியாளர்களால் மனித இனம் கண்ட பெரும் துயரங்களையும் இந்த உலகு கண்டு தான் வருகிறது.

கொரோனாவின் வரவோடு எதையுமே எதிர்த்து போராட முடியாத எதிர்க்கட்சிகள் முடங்கிப் போகவே ஆதிக்க சக்தியும் அடக்கு முறையும் கொண்ட ஆட்சிகள் பதவிக்கு வர வழிவகுத்தன.தங்கள் ஆட்சிக்கு தேவையான பாதையில் அரசியல் அமைப்பை மாற்றி நீண்ட காலத்துக்கு தேவையான தமது ஆட்சியை தக்க வைப்பதற்காக ஜனநாயக வழியில் போராடும் எல்லா பாதைகளையும் மூடி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொண்டார்கள்.கொரோனாவின் வரவையும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் பல சர்வாதிகாரிகளும் அந்த நாடுகளை தொடர்ந்து தம் ஆட்சியில் வைத்திருக்க விரும்பியவர்களும்.எனவே இனவாதிகளாலும் அடிப்படை மத வாதிகளாலும் இந்த உலகு அமைதியாக சுழலவில்லை.

இனி வரும் காலங்களில் தமிழ் மக்கள் சரியான பாதையை தெரிய வேண்டும்.எல்லாமே சரியானதென்று எதுகுமே இல்லை.சரிகளோடும் பிழைகளோடும் பயணித்த விடுதலைப் புலிகளுக்கு பின் சரியானதோர் தலைமை இன்றி இருக்கும் நிலைமை இன்று வரை நீடிக்கிறது.பலம் மிக்க இனவாதத்தோடு பிளவு பட்டுக் கிடக்கும் இலங்கைத் தீவில் உள் நாட்டுத் தீர்வு என்பது எப்போதுமே சாத்தியம் இல்லை.சம பலம் இல்லாத ஈழத் தமிழரிடையே எந்த தீர்வையும் அரசியல் ரீதியாக பேரம் பேசி பெற்று விட முடியாது.

ஆதலால் மீண்டும் மீண்டும் அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருப்பதில் எந்த பயனும் எந்தத் தீர்வும் எட்டப்போவதில்லை.நோர்வே வேண்டாம், அமெரிக்க வேண்டாம் ,இந்தியா வேண்டாம் ,ஐ.நா.வேண்டாம் ,பாராளுமன்றம் வேண்டாம், அங்கு போய் எதையும் பேசவும் கதைக்கவும் வேண்டாம் என்று இருந்தால் எதுகுமே நகராது முன்பு போலவே மீண்டும் நாம் எந்த தீர்வையும் எட்டி விட முடியாது.எதை எல்லாம் இப்போது எமக்காக எம் நலன் சார்ந்து அவர்களுடன் உறவுகளை பேணி போவதே நமக்கு முன் இப்போது இருக்கும் தெரிவாகவே இருக்க முடியும்.

பலம் மிக்க படைகளோடும் நாம் இருந்தும் எம் அரசியல் நகர்வுகள் மாறி வந்த உலக ஒழுங்குக்கு அமைய அமையாததால் நாம் சர்வதேச சக்திகளிடம் இருந்து தனிமைப் படுத்தப் பட்டு அவர்களாலேயே அவர்கள் சொந்த நலனோடு தமிழர் போராட்ட வலு தோற்கடிக்கப்பட்டது.இனி வரும் காலங்களில் இந்த யதார்த்தத்தை உணர்ந்து தமிழர் பயணிக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் குண்டு சட்டியில் குதிரை ஒட்டக் கூடாது.

இந்து சமுத்திரத்தில் இருண்ட பாதை ஒன்று காத்திருக்கிறது.அரபு தேசங்களில் அமைதி திரும்புவதாகவில்லை.சீனா என்ற பெரிய றகன் ஒன்று ஐரோப்பிய அமெரிக்க அரசியல் பொருளாதார ஆதிக்கத்தின் 200 வருட மேலாதிக்கத்தை மாற்றி புதிய ஒரு பனிப் போரோடும் கொரோனாவுக்கு பின்னரான ஓர் புதிய உலக ஒழுங்கோடும் உலகை விழுங்க காத்திருக்கிறது.தத்துவார்த்த சிந்தனைகள் மறைந்து இன்று பொருளாதர சுய நலன் சார்ந்தே எல்லா ஆதிக்க சக்திகளும் சந்திக்கும் ஒரு பொருளாதார உலகாக இன்று உலகம் மாறி வருகிறது.சிறு பான்மை இனத்தின் சுய நிர்ணய தேசியப் போராட்டங்கள் எல்லாம் கத்தலோனிய தொடங்கி பாலஸ்தீனம் தமிழர் போராட்டம் எல்லாம் திட்டமிட்டு ஆதிக்க சக்திகளால் அழிக்கப்பட்டு இன்னும் முடிவில்லாமல் தொடர்கிறது.

கொரோனாவின் அவலத்தோடு சேர்ந்தே மனித உரிமை,ஜனநாயகம்,தனி மனித சுதந்திரம்,எழுத்துரிமை,பேச்சுரிமை என்பன ஏதோ ஒரு வகையில் பறிக்கப்பட்டு அடக்கப்பட்டு கொரோனாவுக்கு பின்னான அரசியல் மாற்றங்களோடு புதிய வருடம் பிறந்திருக்கிறது.கொரோனாவுக்கு பின்னரான உலக நகர்வுகள் அரசியல் பொருளாதார ரீதியாகவு இன்னும் பல நெருக்கடிகளை சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.இருந்த போதிலும் இன்று இருக்கும் இந்த அவலம் நீங்கி இனி வரும் காலம் அமைதியாகவும் சமாதானத்தோடும் உலகம் தர்மத்தின் அச்சில் உருளவேண்டும் என்பதே உலக மானிடத்தின் நம்பிக்கை கனவுகளாகும்.


பா.உதயன் ✍️
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.