Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்கா அரச படையினருக்கு உதவும் முயற்சியில் இந்தியா தீவிரம்.

Featured Replies

சிறீலங்கா அரச படையினருக்கு உதவும் முயற்சியில் இந்தியா தீவிரம்.

சிறீலங்கா அரசுக்கு உதவும் வகையில் இந்திய மத்திய அரசு பாக்கு நீரிணையில் சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவரும் அதேசமயம் தமிழ் நாட்டுக் கரையோரங்களில் புதிய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பொருத்தி வருவதாக கூறப்படுகிறது.

கடல் ரோந்துகளை அதிகரிப்பது, புதிய ராடார்களை நிறுவுவது, தமிழ்நாட்டு கரையோரங்களில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை பொருத்துவது என்பது தொடர்பாக இந்தியாவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பு கூட்டம் ஒன்றை தமிழ்நாட்டில் மேற்கொண்டிருந்தனர். இந்த கூட்டம் நடைபெற்ற சில தினங்களில் இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி தலமையில் மற்றுமொரு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் கிழக்கு பிராந்திய தலைமையகமான அரக்கோணம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாக்கு நீரிணையில் மேலதிகமான பீரங்கிக் கப்பல்களை ரோந்தில் ஈடுபடுத்துவது தொடர்பாக கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி கலந்துரையாடியுள்ளார்.

சிறீலங்கா அரசுக்கு உதவும் பொருட்டு இந்தி மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் இந்த பலப்படுத்தல்களின் ஓரங்கமாக இராமேஸ்வரம் கரையோரங்களில் வான்படையின் 8 ராடார் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 4 புதிய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இதனிடையே வங்காளா விரிகுடா, பாக்குநீரிணை, மன்னார் வளைகுடா போன்ற கடற்பகுதிகளில் இந்தியா 6 போர்க் கப்பல்களை நிறுத்தியுள்ளதுடன், ஆளில்லாத உளவுவிமானங்கள் பலவற்றையும் பாக்குநீரிணையின் மேலாக ரோந்தில் ஈடுபடுத்தி வருகின்றது.

மேலும் இந்தியா கடற்படையினர் சிறீலங்கா கடற்படையினருடன் இணைந்து பாக்கு நீரிணையில் ரோந்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

-Puthinam-

a fool with a tool still a fool :blink:

சூரியனே மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பது சாத்தியம் என்றால், தமிழீழம் மலர்வதும் நிச்சயம் தான். காலத்தின் கட்டளை புரியாமல் ஆதிக்கவெறியில் ஒரு சிலர் அறிவிழந்து செய்யும் செய்கைகள் தமிழீழம் நடத்தி வரும் விடுதலை வேள்வியை அணைத்து விடாது.

தமிழீழம் எங்கள் தனியுரிமை - அதன்

விடுதலை எங்கள் பிறப்புரிமை.

ஈழத் தமிழினம் கேட்பது வாழ்வுரிமை

அதை சிதைத்திட நினைப்பது மிகச்சிறுமை

Edited by vettri-vel

சூரியனே மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பது சாத்தியம் என்றால், தமிழீழம் மலர்வதும் நிச்சயம் தான். காலத்தின் கட்டளை புரியாமல் ஆதிக்கவெறியில் ஒரு சிலர் அறிவிழந்து செய்யும் செய்கைகள் தமிழீழம் நடத்தி வரும் விடுதலை வேள்வியை அணைத்து விடாது.

அங்க ஒன்றும் சுதந்திரம் போராடிப்பெறவில்லை சும்மா வெள்ளையன் தனக்கு நெருக்குதல் வருகிறது என்று விட்டு வெளியேறியவன்.

உப்பு சத்தியாக்கிரகம் செய்து சுதந்திரம் பெறுவது எவ்வளவு இலகுவான சுதந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உடன் படுகிறேன்:பல காரணங்கள் இதற்கு-

1. அந்தச் சூழ்நிலையில் பிரிட்டிஷ் காரர்களுக்கு இருந்த நெருக்கடி சத்தியாக் கிரகத்தாலேயே சுதந்திரம் வெல்லப் பட உதவியது.

2. இந்திய சிறிலங்கா அரசுத் தலைவர்களை விட பிரிட்டிஷ் தலைவர்கள் கொஞ்சமாவது கனவான்களாக இருந்தார்கள் (இது கீழ் நிலைச் சிப்பாய்களுக்குப் பொருந்தாது!).

இப்போது சத்தியாக் கிரகம், விடுதலை, சமாதான வழி என்றாலே என்ன என்று புரியாமல் விழிக்கின்றன இந்தியாவும் சிறிலங்காவும். இப்போது அவர்களுக்குப் புரியும் மொழி அடி ஒன்று தான். எல்லா இடமும் வல்லரசு ஷோ காட்ட முனையும் இந்தியா, சீனாவுடன் மட்டும் வாலைச் சுருட்டிக் கொண்டிருப்பதும் (60 களிலிருந்து) இதனால் தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா அரச படையினருக்கு உதவும் முயற்சியில் இந்தியா தீவிரம்.

சிறீலங்கா அரசுக்கு உதவும் வகையில் இந்திய மத்திய அரசு பாக்கு நீரிணையில் சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவரும் அதேசமயம் தமிழ் நாட்டுக் கரையோரங்களில் புதிய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பொருத்தி வருவதாக கூறப்படுகிறது.

கடல் ரோந்துகளை அதிகரிப்பது, புதிய ராடார்களை நிறுவுவது, தமிழ்நாட்டு கரையோரங்களில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை பொருத்துவது என்பது தொடர்பாக இந்தியாவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பு கூட்டம் ஒன்றை தமிழ்நாட்டில் மேற்கொண்டிருந்தனர். இந்த கூட்டம் நடைபெற்ற சில தினங்களில் இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி தலமையில் மற்றுமொரு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் கிழக்கு பிராந்திய தலைமையகமான அரக்கோணம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாக்கு நீரிணையில் மேலதிகமான பீரங்கிக் கப்பல்களை ரோந்தில் ஈடுபடுத்துவது தொடர்பாக கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி கலந்துரையாடியுள்ளார்.

சிறீலங்கா அரசுக்கு உதவும் பொருட்டு இந்தி மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் இந்த பலப்படுத்தல்களின் ஓரங்கமாக இராமேஸ்வரம் கரையோரங்களில் வான்படையின் 8 ராடார் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 4 புதிய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இதனிடையே வங்காளா விரிகுடா, பாக்குநீரிணை, மன்னார் வளைகுடா போன்ற கடற்பகுதிகளில் இந்தியா 6 போர்க் கப்பல்களை நிறுத்தியுள்ளதுடன், ஆளில்லாத உளவுவிமானங்கள் பலவற்றையும் பாக்குநீரிணையின் மேலாக ரோந்தில் ஈடுபடுத்தி வருகின்றது.

மேலும் இந்தியா கடற்படையினர் சிறீலங்கா கடற்படையினருடன் இணைந்து பாக்கு நீரிணையில் ரோந்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

-Puthinam-

ஆனால் இது தமிழர்களுக்கு பெரும் இக்கட்டையும் பின்னடைவையும் கொடுக்கும் என்பது என்னுடய அபிப்பிராயம்.

கவலைக்குரிய விடயம் என்னவெனில் தமிழ்நாடு கூட மத்திய அரசின் போக்கிற்கு அனுகூலமாகவும் தலை ஆட்டிகளாகவும் இருக்கின்றார்கள். புலம்பெயர் வாழ் தமிழர்களே உங்களுக்கு இருக்கும் உண்மயான உணர்வை தமிழ்நாட்டில் எதிபார்த்தால் அங்கெ நாம் ஏமாற்றத்தயும் வேதனையையும் தான் தரும். உண்மயான தமிழ் சகோதரத்துவ உணர்வு அவர்களிடம் இருந்திருந்தால் அவர்களின் எதிர்புக்கு மதிய அரசு ஆட்டம் கண்டிருக்கும்.

கொஞ்சமாவது மனிதத்தன்மை உள்ளவரிடம் அற வழிப்போர் வெற்றி பெறும்.... ஆனால் சிங்களர் இன்னும் மனிதருக்கு முந்தைய நிலையிலேயே உள்ளனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.