Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனம் தளராத "விக்கிரமாதித்ய' மாப்பிள்ளை தனது ஜோடியை தேடிப்பிடித்த ருசிகரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணப்பெண்ணை தேடித்தேடி அலுத்துப் போன சென்னை மாப்பிள்ளையும் திருமண கனவோடு காத்திருந்த திருவாரூர் பெண்ணும் தடைகளை மீறி ஒன்று சேர்ந்தனர்.

சென்னையை அடுத்த நங்கநல்லுõர், தில்லைகங்கா நகரை சேர்ந்த ராமநாதனின் மகன் பாலாஜி(38). வடபழனியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக உள்ளார். பத்து ஆண்டுகளாக இவருக்கு பெண் பார்த்து வந்தனர். பெண் அமைந்தபாடில்லை.வெறுத்துப் போன பாலாஜி, தானே மணமகளை தேடினார். திருவாரூரை சேர்ந்த பத்மநாதனின் மகள் ஹேமலதா (37)க்கு வரன் பார்ப்பது அறிந்து அங்கு சென்றார். பாலாஜி போலவே ஹேமலதாவுக்கும் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சமைத்து போட வேண்டும் என்பதற்காகவே ஹேமலதாவின் திருமணத்தை அவரின் சகோதரர்கள் தள்ளிக் கொண்டே போனதாக கூறப்படுகிறது. எந்த வரனாக இருந்தாலும் பரவாயில்லை, திருமணம் நடந்தால் சரி என்ற எண்ணத்தோடு ஹேமலதாவும் இருந்தார். ஹேமலதாவை பெண் பார்த்த பாலாஜிக்கு, அவரை மிகவும் பிடித்துவிட்டது. ஹேமலதாவுக்கும் பாலாஜியை பிடித்துப் போனது. பாலாஜியை திருமணம் செய்து கொள்ள உடனேயே சம்மதம் கொடுத்தார். ஆனால்,"மாப்பிள்ளையை பிடிக்கவில்லை,' என்று கூறிவிட்டார் ஹேமலதாவின் சகோதரர் பசுபதி.

"அடப்பாவிகளா, பெண்ணே ஒப்புக் கொண்ட பிறகும், திருமணத்துக்கு தடை போடுகிறார்களே' என்று அச்சமடைந்த பாலாஜி, திருவாரூரிலேயே ஒரு லாட்ஜில் தங்கினார். யாருக்கும் தெரியாமல் ஹேமலதாவை சந்தித்து, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள சம்மதம் பெற்றார். இந்த திட்டத்தின்படி, ஹேமலதா வீட்டை விட்டு வெளியேறி பாலாஜியுடன் புறப்பட்டார். இருவரும் அவசரமாக சென்னை திரும்பினர். தி.நகரில் உள்ள ஒரு கோவிலில் ஹேமலதாவை பாலாஜி திருமணம் செய்து கொண்டார்.ஹேமலதாவை உறவினர்கள் தேடுவது தெரிந்ததும் பாலாஜியும், ஹேமலதாவும் ஆதம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் மதியழகன், எஸ்.ஐ., ராஜேந்திரன் ஆகியோர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், பெண் வீட்டாருக்கு அறிவுரை கூறி, ஹேமலதாவை பாலாஜியுடன் அனுப்பி வைத்தனர்.

Sundhal news service SNS

உங்க news சூப்பர் sns

அடபாவிகளா இப்படியும் சொந்தச் சகோதரர்கள் இருப்பார்களா?

சுண்டல் போஸ்சோ உது நல்லா இல்லை நானிருக்கிறேன் பிறகு நீங்க எப்படி............. :angry: :angry:

அது சரி மெயில் புல்லா இருக்கு அனுப்ப ஏலாம இருக்கு சுண்டு :icon_idea:

சுண்டல் எங்கதான் இதெல்லாம் தேடி பிடிக்கிறீங்க?

சுண்டல் எங்கதான் இதெல்லாம் தேடி பிடிக்கிறீங்க?

எல்லாம் துங்காபியில தான்

:icon_idea::lol: :P :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.