Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் - நேரில் சென்று பார்வையிட்ட கலையரசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை, திருக்கோவில் பகுதியில் இறந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகளை நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் திருக்கோவில் பிரதேச பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

பண்ணையாளர்கள் ஏதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து றூபஸ் குள பகுதிக்கு இன்று சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

திருக்கோவில் பிரதேச மேய்ச்சல் தரை விடயம் தொடர்பாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க அவர்களை சந்தித்து பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியபோது விரைவில் தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.

காலாகாலமாக ஜீவனோபாய தொழிலாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்டு வரும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பண்ணையாளர்கள் மனதில் எதிர்காலத்தில் இவ் இழப்பினை எவ்வாறு ஈடுகொடுக்க போகின்றோம் என்ற ஏக்கம் உள்ளது.

வட்டமடு மேய்ச்சல் தரை விவகாரம் நீதிமன்ற வழக்காக உள்ள நிலையில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளை பராமரிப்பதற்கு மேய்ச்சல் தரை இன்மையால் குறுகிய பரப்பினுள் வைத்திருப்பதால் புதிய வகை நோய் தாக்கத்தினால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து கிடக்கின்றது பல கால்நடைகள் இறக்கும் நிலையில் உள்ளது.

இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் அவசர கூட்டமொன்றை ஏற்படுத்தி கால்நடை வைத்தியர் , உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து கால்நடை இறப்பிற்கான காரணம் என்னவென்பதை அறிவதோடு மேய்ச்சல் தரையை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கால்நடை பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கு ஒரு வகையான நோய் தாக்கத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

1980-ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் தற்போது வரை மேய்ச்சல் தரை இல்லாததால் குறுகிய பகுதிக்குள் கால்நடைகளை பராமரிப்பதால் கால்நடைகளுக்கு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட திருக்கோயில் பிரதேசத்துக்கு உட்பட்ட திருக்கோயில் விநாயகபுரம் தங்கவேலாயுதம் கஞ்சிகுடிச்சாறு மற்றும் தாண்டியடி. மண்டானை குடியிருப்பு முனை காஞ்சிரங்குடா போன்ற கிராமங்களில் உள்ள பண்ணையாளர்களின் இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/267484?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

தனி, என்ன நோயாம்? திடீரென்று சாகின்றன என்றால் black quarter ஆகத் தான் இருக்கும். நதீர் நானா என்ன சொல்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

தனி, என்ன நோயாம்? திடீரென்று சாகின்றன என்றால் black quarter ஆகத் தான் இருக்கும். நதீர் நானா என்ன சொல்கிறார்?

கால்நடைகள் இறக்க காரணம் மாடுகளில் ஒரு வகை கொப்பளங்கள் வந்து வெடிக்கின்றன அந்த இடத்தில் ஈ,இலையான்கள் மொய்க்க காயங்கள் அழுக ஆரம்பித்து பின்னர் இறந்து விடுகிறது.தற்போது மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் எனவும் அறிவித்தல் கொடுத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கால்நடைகள் இறக்க காரணம் மாடுகளில் ஒரு வகை கொப்பளங்கள் வந்து வெடிக்கின்றன அந்த இடத்தில் ஈ,இலையான்கள் மொய்க்க காயங்கள் அழுக ஆரம்பித்து பின்னர் இறந்து விடுகிறது.தற்போது மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் எனவும் அறிவித்தல் கொடுத்துள்ளது.

இது அம்மை நோயை உருவாக்கும் pox வைரஸ் குடும்பத்திற்குரிய இன்னொரு வைரசால் உருவாகிறது. Lumpy skin disease என்று சிறிலங்காச் செய்திகளில் வந்திருக்கிறது. 

பொக்குளம் உடையும் போது பக்ரீரியா தொற்றாமல் பார்த்துக் கொண்டால் இறப்பைக் கணிசமான அளவு குறைக்கலாம்.

பொக்குளம் வந்த மாடுகளைப் பட்டியில் அடைத்து வைத்து povidone-iodine ஸ்பிறே பாவிக்கலாம். 

உங்களுக்குத் தெரிந்த பண்ணையாளர்களுக்குத் தெரியப் படுத்தி விடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இது அம்மை நோயை உருவாக்கும் pox வைரஸ் குடும்பத்திற்குரிய இன்னொரு வைரசால் உருவாகிறது. Lumpy skin disease என்று சிறிலங்காச் செய்திகளில் வந்திருக்கிறது. 

பொக்குளம் உடையும் போது பக்ரீரியா தொற்றாமல் பார்த்துக் கொண்டால் இறப்பைக் கணிசமான அளவு குறைக்கலாம்.

பொக்குளம் வந்த மாடுகளைப் பட்டியில் அடைத்து வைத்து povidone-iodine ஸ்பிறே பாவிக்கலாம். 

உங்களுக்குத் தெரிந்த பண்ணையாளர்களுக்குத் தெரியப் படுத்தி விடுங்கள்!

பல நூறு மாடுகளுக்கு வந்துள்ளது ஊசி போடுகிறார்கள்   நீங்கள் சொன்ன ஸ்பிறே இங்க கிடைக்குமோ தெரியல எனது நண்பனும் மாட்டைக்கட்டி வைத்துள்ளார் இரு  கொப்பளங்கள் வந்துள்ளது மாட்டுக்கு கால்நடை வைத்தியர் வந்து பார்த்து சென்றுள்ளார் வந்தவர் மாட்டை வெளியே விட வேண்டாம் எனவும் சொன்னதாக  சொன்னார் 

உங்கள் தகவலுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பல நூறு மாடுகளுக்கு வந்துள்ளது ஊசி போடுகிறார்கள்   நீங்கள் சொன்ன ஸ்பிறே இங்க கிடைக்குமோ தெரியல எனது நண்பனும் மாட்டைக்கட்டி வைத்துள்ளார் இரு  கொப்பளங்கள் வந்துள்ளது மாட்டுக்கு கால்நடை வைத்தியர் வந்து பார்த்து சென்றுள்ளார் வந்தவர் மாட்டை வெளியே விட வேண்டாம் எனவும் சொன்னதாக  சொன்னார் 

உங்கள் தகவலுக்கு நன்றி 

Povidone Iodine என்பது பரவலாகக் கிடைக்கக் கூடியது தனி! ஸ்பிறேயாக இல்லாவிட்டால் திரவமாக கிடைக்கக் கூடும். சுத்தமான துணியினால் பொக்குளங்கள் மேல் தடவி விடலாம்! 

ஈ மொய்க்காமலிருக்க ஒரு நாளைக்கு இரு தடவைகள் பொக்குளத்தின்  மேல் வேப்பெண்ணையைத் தடவி விடலாம்!

சாப்பாடும் தண்ணீரும் முக்கியம்! சாப்பாடு குறைந்தால், சோர்ந்தால் விற்றமின் பி கொம்ப்ளக்ஸ் ஊசி போட முடியுமா என்று மிருக வைத்தியரை நோண்டிப் பாருங்கள்! 

(உங்கள் ஊர் மிருகவைத்தியர் வத்சலாவா, பசீகாவா?😎

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Justin said:

Povidone Iodine என்பது பரவலாகக் கிடைக்கக் கூடியது தனி! ஸ்பிறேயாக இல்லாவிட்டால் திரவமாக கிடைக்கக் கூடும். சுத்தமான துணியினால் பொக்குளங்கள் மேல் தடவி விடலாம்! 

ஈ மொய்க்காமலிருக்க ஒரு நாளைக்கு இரு தடவைகள் பொக்குளத்தின்  மேல் வேப்பெண்ணையைத் தடவி விடலாம்!

சாப்பாடும் தண்ணீரும் முக்கியம்! சாப்பாடு குறைந்தால், சோர்ந்தால் விற்றமின் பி கொம்ப்ளக்ஸ் ஊசி போட முடியுமா என்று மிருக வைத்தியரை நோண்டிப் பாருங்கள்! 

(உங்கள் ஊர் மிருகவைத்தியர் வத்சலாவா, பசீகாவா?😎

தற்போது யார் என தெரியல வைத்தியர்  அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் பெயர் தெரியாமல் உள்ளது வேப்பெண்ணைதானாம் தற்போது தடவி இருக்கிறார்கள் கன பேர் அதிகமான மாடுகள் வைத்திருப்பவர்கள் நிலைதான் கொஞ்சம் பரிதாபம் வடக்கிலும் இறந்து கிடந்த படங்களை காண முடிந்தது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.