Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் – ஞானசாரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் – ஞானசாரர்

 
%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%
 4 Views

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்று கருதியே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தவேண்டும் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் மாத்திரம் சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை பிரதமருக்கும், பாராளுமன்றத்துக்கும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் அறிக்கை குறித்து சமூகத்தின் மத்தியில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கையை அறிந்துகொள்ளநாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். அறிக்கையின் உண்மை தன்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தும் பொறுப்பு அரச தலைவருக்கு உண்டு. பாதுகாக்கப்படவேண்டிய இரகசிய தகவல்களை தவிர்த்து ஏனையவற்றை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

பொதுபல சேனா அமைப்பை தடைசெய்யப்பட வேண்டும் என்றும் எமக்கு எதிராக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தாகஒரு ஊடகம் மாத்திரம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் குறித்து ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம்.

பௌத்த உரிமையையும்,நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்க பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்துள்ளது. 2010 தொடக்கம் 2019 ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இடம் பெறும் வரை இஸ்லாமியஅடிப்படைவாதம் குறித்து கருத்துரைத்தோம். நாம் குறிப்பிட்ட கருத்தை சிங்கள அரச தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் கருத்திற் கொள்ளவில்லை.

மாறாக குறுகிய அரசியல் நோக்கிற்காக எம்மை இனவாதியாக விமர்சித்ததார்கள். இறுதியில் ஏப்ரல் 21 தாக்கத்துடன் அனைத்தும் உண்மை என வெளியானது. பொதுபல சேனா அமைப்பை தடைசெய்யும் முயற்சியை முறியடிக்கும் அணுகுமுறையை நன்கு அறிவோம். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிக்கப்படவில்லை” என்றார்.

 

https://www.ilakku.org/?p=42484

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்க தயார் -பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

 

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்க தயார் -பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

 
1-8-696x485.png
 14 Views

“குற்றங்களை மன்னிக்கலாம் எனினும் இனியும் இவ்வாறான கொடூர சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பது அவசியம். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் திட்டமிடப்பட்ட ஒன்று. சில குழுக்களால் அல்லது வெளிநாட்டு சக்திகளினால் அது திட்டமிடப்பட்டிருக்கலாம்” என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

திருநீற்றுப் புதன் சிறப்பு வழிபாடு  கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் மறையுரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”புதிய கலாசாரம் ஒன்றை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும். சர்வதேச சக்திகள் எமது நாட்டுக்குள் தலையிடுவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. இந்த தவக்காலத்தில் பல்வேறு ஒறுத்தல் முயற்சிகளோடு கிறிஸ்தவர்கள் அதற்காக விஷேடமாக இறைவனிடம் மன்றாட வேண்டும்.

இன, மத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதற்கு வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.

பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் என்றில்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். இந்த நாட்டை பாதுகாக்குமாறு நாம் அனைவரும் கடவுளிடம் மன்றாடுவோம்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே தவக்காலத்தை நாம் நிறைவுசெய்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகும் போதே கொடூரமான குண்டுத் தாக்குதல் மூலம் மக்கள் இதே ஆலயத்தில் திருப்பலியின் போது பலர் கொல்லப்பட்டனர்.

அது ஒரு திட்டமிடப்பட்ட சம்பவம். அந்த திட்டமிடப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் நீதியை கோருகின்றோம். குற்றங்கள் மன்னிக்கப்படலாம் எனினும் குற்றங்கள் மறைக்கப்பட்டு விடக்கூடாது.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நாம் திருப்திபடும் வகையில் இல்லை. அது தொடர்பில் நாம் இறைவனிடம் முறையிடுவோம். அவரது நீதிமன்றத்திற்கு செல்வோம். சுயநல செயற்பாடுகளால் இந்த நாடு பின்னோக்கி செல்ல விடக்கூடாது.

நூற்றுக்கணக்கான பேரை பலி கொண்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நீதிபெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அது ஒரு தேசிய பொறுப்பாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

குற்றங்களை மன்னிக்கலாம் எனினும் இனியும் இவ்வாறான கொடூர சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பது அவசியம். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் திட்டமிடப்பட்ட ஒன்று. சில குழுக்களால் அல்லது வெளிநாட்டு சக்திகளினால் அது திட்டமிடப்பட்டிருக்கலாம்.

எமது தாய் நாட்டில் இன, மதங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு சக்திகள் மேற்கொண்ட முயற்சியாகவும் இருக்கலாம். அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு எமது நாட்டைப் பாதுகாப்பதற்காக கடவுளிடம் மன்றாடுவோம்.

இதனை நாட்டில் வாழும் அனைத்து இன, மத மக்களுக்கும் நான் ஒரு வேண்டுகோளாக விடுக்கிறேன். இது எம் அனைவரினதும் நாடு. நாம் அனைவரும் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் சுயாதீனமாகவும் இந்த நாட்டில் வாழ வேண்டும்.

புதிய கலாசாரம் ஒன்றை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும். சர்வதேச சக்திகள் எமது நாட்டுக்குள் தலையிடுவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. இந்த தவக்காலத்தில் பல்வேறு ஒறுத்தல் முயற்சிகளோடு கிறிஸ்தவர்கள் அதற்காக விஷேடமாக இறைவனிடம் மன்றாட வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=42509

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் மாத்திரம் சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை பிரதமருக்கும், பாராளுமன்றத்துக்கும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

 

23 minutes ago, உடையார் said:

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்க தயார்

 

24 minutes ago, உடையார் said:

சர்வதேச சக்திகள் எமது நாட்டுக்குள் தலையிடுவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.

இரண்டு நாளைக்கு முன்தான்  சொன்னாரே சர்வதேச நீதிமன்றத்தை நாடப்போகிறேன் என்று, அதற்குள் இவருக்கு என்ன நடந்தது? தன் தோழன் தான் குண்டுதாரியின் சூத்திரதாரி என்று  தெரிந்து விட்டாரா? இதை சர்வதேசத்துக்கு கொண்டுபோனால் நிலைமை  மேலும் சிக்கலாகிவிடும் என்று யோசிக்கிறார் போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.