Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்(து)த திருமிகு. வேலன் சுவாமிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களாக தற்போது வேலன் “சுவாமி” சின்மயா மிசன் என்றும் இந்து அடிப்படைவாத அமைப்பினால் பயிற்றப்பட்டபின் ஜக்ரட் “சைதன்யா” பிரம்மச்சாரி (அல்லது “சுவாமி” சிடகஸசானந்தா ) அறியப்படும் யாகரன் சிவபாலகனேசன் (யாழ் இந்து கொழும்பு இந்து – மொரட்டுவை பொறியியல் – இடையில் நிறுத்திவிட்டார்)   பற்றிய குறிப்பை முகநூலில் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. அதில் தெரிந்தோ தெரியாமலோ யாகரனின் சின்மயா மிசன் பற்றிய பகுதி தவிர்க்கப்ட்டிருந்தது.

SAMY

2000களில் இந்த மிசனரிகளில் இருந்த கடுப்பில் இந்து கல்லுரியில் இருந்த ஒரு மாணவனும் இப்படி மாறிவிட்டதாக அறிந்த போது எம்முள்ளும் இப்படி தீவிர மதவாதம் ஆழமாக வேரூண்டிவிட்டதே என்ற கவலை இருந்ததது.

விவிலிய மிசனரிகளை விட இந்த மிசனரிகள் பற்றி கடுமையான விமர்சனம் என்னிடம் உண்டு. நீரோ மன்னன் போல ஊரே பற்றி எரிய கம்பன் விழா நடத்தி தெருவெங்கும் கொண்டாடும் இந்த குழுவின் அலப்பரை கொழும்பில் இருந்த பலருக்கு தெரிந்திருக்கும். வள்ளுவனையும் கம்பனையும் கோயிலுள் சிலையாக வைத்து  பூசை செய்யும் அறப்படித்தவர்களினதும் அப்படி எண்ணிக்கொள்ளுபவர்களின் கூடாரம் அது.

இதில் ஒன்றை குறிப்பிடவேண்டும் விவிலிய மிசனறிகள் ஒரு விதத்தில் அப்பாவிகள். தங்களுக்கு யாரவது ஊசி குத்தினால் அமரிக்காவும் இஸ்ரேலும் அணுகுண்டு வீசி அழித்துவிடும் எனும் புத்திசாலிக்கூட்டம்.  ஆனால் இந்த இந்து மத அடிப்படைவாத மிசனரிகள் கொஞ்சம் தெளிவான கும்பல்.

அப்படி ஒரு மிசனறியின் உற்பத்தியான சக மாணவன்(junior)  யாகரன் இன்று சைவம் தமிழ் தேசியம் பேசி திருநீற்றுடன் முன்நிற்கிறான் என்ற போது ஆச்சரியமாக இருந்தது. நூலறுந்த பட்டம் போல தள்ளாடும் தமிழ் மக்களின் இன்றய நம்பிக்கை நட்சத்திரமான யாகரனின் முகநூலில் உள்சென்று பார்த்தால் இன்னும் சின்மயா மிசனின் பதிவுகள். அதிலொன்றில் ஈழத்து திருந்செந்தூர் “ஆலய” பிரதம குரு ஒரு “சைத்தன்யா” என்றிருந்தது. முற்றிலும் இந்துத்தவத்தின் நால் வேதத்தை மையப்படுத்தி தயானந்த சரசுவதி அவர்களினால் உருவாக்கப்ட்டு இயங்கும் சின்மயா மிசனின் உற்பத்தி ஒன்றிடம் ஈழத்து யாழ்ப்பாணத்து சைவசமய பழங்கள் ஒரு கோயிலையே ஒப்படைந்திருந்ததையிட்டு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.

யாகரன் என்ற பெயரில் இருந்து சைத்தன்யாஆகி பின் ஆனந்தாவாகி நான்காவதாக இன்று பூண்டுள்ள வேலன் வேடம் உண்மையில் சைவ நெறியை மட்டும் பின்பற்றும் தமிழ் தேசியத்திற்கு உண்மையான ஒரு சராசரி மனிதனாக இருந்தால் யாகரனுக்கு சொல்வது எனது நன்றியும் மன்னிப்பும்.

மற்றும் படி 2009க்கு பின் அண்ணன் எப்ப சாவன் திண்னை எப்போ கிடைக்கும் என்பவர்களின் வரிசையில் இன்னொருவனாக இருக்கலாம் இந்த சகமாணவன் யாகரன். அப்படியாக இருந்தால் இப்பவே வடகிழக்கு மக்கள் இப்போதே தங்கள் பிழைப்பைப் பார்க்கலாம்.

கானொளி: யாகரன்  சின்மயா மிசன் உற்பத்தியாக ஜக்ரன் சைத்தன்யாவாக தாயகத்தில் செய்யவுள்ளதை பற்றி சொல்வது

பின்னுட்டத்தில்: அதே யாகரன் தமிழ்நெற்றுக்கு வேலன் ஆக கருத்திடுவது.

யாகரனின் முகநூலில் இருந்து எடுக்கப்பட்ட ஈழத்து திருச்செந்தூர் பற்றிய படம்

(கடவுளுக்கும் மனிதனுக்கும்* நடுவே யாரும் தேவையில்லை/இல்லை என கருதுவதால் பட்டங்களை தவிர்த்துள்ளேன்)

*மனிதனும் அவனும் கடவுளே-தத்துவமசி

பி.கு: எமது கல்லூரிமாணவன் சைவன் என்று கம்பு சுத்துபவர்கள் ஓரமாய் போய் விளையாடவும்.

யார் இந்(து)த திருமிகு. வேலன் சுவாமிகள்.-திரு-

https://www.thamizharkural.site/யார்-இந்துத-திருமிகு-வேல/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

5.40களில்  சொல்கிறார் நல்லூர் முருகன் தானாம்  வேலன்  சுவாமி பெயர் சூட்டியது .😀

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆன்மீகத்திற்குள் தான் அரசியல் இருக்கிறது

😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி மொறட்டுவையாம் சுவாமிக்கு சிஷ்யர்கள் வேணுமாம் யாழிலும்  முன்னாள் மொரட்டுவ இருக்கினம் 😀

பிஜேபி கொண்டையை மறைக்க  படாத பாடு  படுகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2021 at 10:47, பெருமாள் said:

கடந்த சில நாட்களாக தற்போது வேலன் “சுவாமி” சின்மயா மிசன் என்றும் இந்து அடிப்படைவாத அமைப்பினால் பயிற்றப்பட்டபின் ஜக்ரட் “சைதன்யா” பிரம்மச்சாரி (அல்லது “சுவாமி” சிடகஸசானந்தா ) அறியப்படும் யாகரன் சிவபாலகனேசன் (யாழ் இந்து கொழும்பு இந்து – மொரட்டுவை பொறியியல் – இடையில் நிறுத்திவிட்டார்)   

----

விவிலிய மிசனரிகளை விட இந்த மிசனரிகள் பற்றி கடுமையான விமர்சனம் என்னிடம் உண்டு. நீரோ மன்னன் போல ஊரே பற்றி எரிய கம்பன் விழா நடத்தி தெருவெங்கும் கொண்டாடும் இந்த குழுவின் அலப்பரை கொழும்பில் இருந்த பலருக்கு தெரிந்திருக்கும். வள்ளுவனையும் கம்பனையும் கோயிலுள் சிலையாக வைத்து  பூசை செய்யும் அறப்படித்தவர்களினதும் அப்படி எண்ணிக்கொள்ளுபவர்களின் கூடாரம் அது.

இதில் ஒன்றை குறிப்பிடவேண்டும் விவிலிய மிசனறிகள் ஒரு விதத்தில் அப்பாவிகள். தங்களுக்கு யாரவது ஊசி குத்தினால் அமரிக்காவும் இஸ்ரேலும் அணுகுண்டு வீசி அழித்துவிடும் எனும் புத்திசாலிக்கூட்டம்.  ஆனால் இந்த இந்து மத அடிப்படைவாத மிசனரிகள் கொஞ்சம் தெளிவான கும்பல்.

 

13 minutes ago, பெருமாள் said:

சுவாமி மொறட்டுவையாம் சுவாமிக்கு சிஷ்யர்கள் வேணுமாம் யாழிலும்  முன்னாள் மொரட்டுவ இருக்கினம் 😀

அட.... யாழ். இந்துக் கல்லூரி தந்த,  இரண்டாவது சாமியார்.
வெள்ளிக்கிழமை.... பக்திப்  பதிவு என்று வந்து பார்த்தால்,
சிரிப்பையும், உள் குத்தையும் கலந்து அடித்த... செம பதிவு.   
பெருமாள்... பயங்கர வேலை பார்த்திருக்கிறார். 👍 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

 

அட.... யாழ். இந்துக் கல்லூரி தந்த,  இரண்டாவது சாமியார்.
வெள்ளிக்கிழமை.... பக்திப்  பதிவு என்று வந்து பார்த்தால்,
சிரிப்பையும், உள் குத்தையும் கலந்து அடித்த... செம பதிவு.   
பெருமாள்... பயங்கர வேலை பார்த்திருக்கிறார். 👍 🤣

யாழில் இருந்து நம்ம மொரட்டுவ சிங்கம் சிஸ்யராக போனால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன் புரைக்கேறி விட்டது .😀😆

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.