Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைக்குழுந்தைகளாக  எம்  பிள்ளைகள் எம்  கையில்  தவளத்தொடங்குவதாலோ என்னவோ

அவர்களை என்றும் அவ்வாறே  நாம் கணக்கிடுகின்றோமா??

அவர்களுக்கான  படிப்பு  சார்ந்து

அல்லது  அவர்களின் வயது  சார்ந்து 

அல்லது  எமது  கல்வி அல்லது  கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள்  மேல்  செலுத்துவது சார்ந்து

அதை நாமும்  அவர்களும் எவ்வாறு  கிரகிக்கக்கூடும்  என்று  நாம்  எந்தளவுக்கு கரிசனை  கொள்கின்றோம்

அதிலும் உடலின் சில  அந்தரங்க  உறுப்புக்கள்  அல்லது  உடலுறவு  சார்ந்து

எமக்கும்  அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்??

அநேகமான  பெற்றோர் பிள்ளைகளின்  முன்

முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது  பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில்

அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது???

ஆனால்  பிள்ளைகளுடன் நண்பர்களாக  பழகும்  போது 

அவர்களிடமிருந்து வரும் சில  விடயங்கள்

எம்  அனுபவங்களை 

அவர்கள் பற்றிய எமது அளவுகோளை  

பொய்யாக்கி 

நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை  மற்றும் கூச்சமற்ற தெளிவு

எம்மை தலைகுனிய  செய்து  விடும்

ஒர் இனச்சேர்க்கை  சார்ந்து

வயது கூடியவர்களை  திருமணம் செய்வது சார்ந்து

கூடி  வாழ்தல் சார்ந்து

தனியே  வாழ்தல்  சார்ந்து.......

அவர்களது  பார்வையும்  கல்வியும் பக்குவமும்

எமது பார்வையும் கல்வியும் அனுபவங்களும் ஒட்டாத  தண்டவாளங்களின்  நிலை  தான்.

அந்தவகையில் என் பிள்ளைகளிடம்  ஆரம்பத்திலிருந்தே நண்பனாக  பழகுபவன் என்றரீதியில் 

இப்படியான  நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு

எனது  மகளது பிறந்த நாள் அன்று  அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது

அவள் சாதாரணமாக  சொன்னாள்

அப்பா என்னை  அம்மாவிடம் தை  முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று)  நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்

அதனால் தான் நான் புரட்டாதி  ஒன்றில் பிறந்தேன்  என.

எனக்கு உடம்பெல்லாம் குறுகி  விட்டது

ஏனெனில் இதை  சொல்லும்போது அவளுக்கு அன்று  தான் 12 வயது.

முற்றும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

ஏனெனில் இதை  சொல்லும்போது அவளுக்கு அன்று  தான் 12 வயது.

ஒரு காலத்தில் மணப்பெண்ணை கணவனுடன் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி முதலிரவுக்கு அனுப்பினார்கள்.
எண்ணிப் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கைக்குழுந்தைகளாக  எம்  பிள்ளைகள் எம்  கையில்  தவளத்தொடங்குவதாலோ என்னவோ

அவர்களை என்றும் அவ்வாறே  நாம் கணக்கிடுகின்றோமா??

அவர்களுக்கான  படிப்பு  சார்ந்து

அல்லது  அவர்களின் வயது  சார்ந்து 

அல்லது  எமது  கல்வி அல்லது  கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள்  மேல்  செலுத்துவது சார்ந்து

அதை நாமும்  அவர்களும் எவ்வாறு  கிரகிக்கக்கூடும்  என்று  நாம்  எந்தளவுக்கு கரிசனை  கொள்கின்றோம்

அதிலும் உடலின் சில  அந்தரங்க  உறுப்புக்கள்  அல்லது  உடலுறவு  சார்ந்து

எமக்கும்  அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்??

அநேகமான  பெற்றோர் பிள்ளைகளின்  முன்

முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது  பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில்

அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது???

ஆனால்  பிள்ளைகளுடன் நண்பர்களாக  பழகும்  போது 

அவர்களிடமிருந்து வரும் சில  விடயங்கள்

எம்  அனுபவங்களை 

அவர்கள் பற்றிய எமது அளவுகோளை  

பொய்யாக்கி 

நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை  மற்றும் கூச்சமற்ற தெளிவு

எம்மை தலைகுனிய  செய்து  விடும்

ஒர் இனச்சேர்க்கை  சார்ந்து

வயது கூடியவர்களை  திருமணம் செய்வது சார்ந்து

கூடி  வாழ்தல் சார்ந்து

 

இப்படியான  நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு

எனது  மகளது பிறந்த நாள் அன்று  அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது

அவள் சாதாரணமாக  சொன்னாள்

அப்பா என்னை  அம்மாவிடம் தை  முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று)  நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்

அதனால் தான் நான் புரட்டாதி  ஒன்றில் பிறந்தேன்  என.

எனக்கு உடம்பெல்லாம் குறுகி  விட்டது

ஏனெனில் இதை  சொல்லும்போது அவளுக்கு அன்று  தான் 12 வயது.

முற்றும்.

 

பிள்ளை உருவாக்குதல், கலவி,  பாலியல்  உறுப்புக்கள் என்பவற்றை எமது சமூகத்தில்  சிதம்பர ரகசியம் போல் வைத்திருக்கின்றார்கள். இங்கு பதின்ம வயது(Teen age) தொடங்க முன்னர் அவைகளைப்பற்றிய  விளக்கம் பாடசாலையில் கொடுப்பார்கள். 
 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பெற்ற பிள்ளைகள் உண்மையிலேயே நல்ல முற்போக்கான சிந்தனைகளுடன் வளர்க்கப் படுகிறார்கள்.எங்களைப்போல் புறங்கூறுதல் வஞ்சனை பொருளாசை போன்ற தீய குணங்களற்றவர்களாகவும் சாதி சமயம் குலம் கோத்திரம் போன்றவற்றிற்கு மதிப்பு  கொடுக்காதவர்களாகவும் எதையும் துணிவுடன் நேருக்கு நேர் பேசக்கூடியவர்களாகவும்  பிள்ளைகள் வாழ்விற்காய் தம்மையே தியாகம் செய்த எம் பெற்றவர்களைப்போல் நாம் இருக்கக்கூடாது என  அறிவுரை கூறுபவர்களாகவும் சில சமயம் எமக்கு ஆசானாகவும் இருக்கிறார்கள். 
அவர்களது பார்வையும் பக்குவமும் பலமுறை எம்மை பிரமிக்க வைப்பதாய் இருக்கும். கனடாவில்
மூன்றாம் வகுப்பு சமயப் புத்தகத்திலேயே குழந்தை உருவாவது பிறப்பது குடும்ப உறவு போன்ற பாடங்களை பார்த்து திகைத்த காலம் ஒன்றுண்டு.
எமது காலத்தில் பெரியவர்கள் பேசுமிடத்தில்கூட எமக்கு இருக்க அனுமதி கிடைப்பதில்லை.
ஆனால் இன்றோ எமது பிள்ளைகள் வளரும் காலத்தில் எதைப்பற்றியும் வெளிப்படையாக பெற்றவர்களுடனும் சகோதரர்களுடனும் பேசுவதைப்பார்க்க வியப்பாயிருக்கும்.
அவர்களது சிந்தனைகளும் செயற்பாடுகளும் வித்தியாசமானவை. அதற்கேற்ப நாம் மாறினால்தான் எம்மால் சந்தோசமாக வாழமுடியும். அவர்களை எம்மைப்போல் மாற்ற முயற்சித்தால் எமது வாழ்க்கையின் சந்தோசங்களை இழக்கவேண்டி ஏற்படலாம். 
வளர்ந்த பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு விளங்கும். தலைப்பிற்கு நன்றிகள் விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு ஏற்ற ஒரு பதிவு....!

நாங்களும் கால மாற்றங்களுடன் பயணிக்காதவிடத்துக்....காலம் நம்மை விட்டு விட்டு வெகு தூரம் பயணித்து விடும்...!

கூனிக் குறுக இங்கு எதுவுமே இல்லையே!

ஒரு வேளை  வருசப் பிறப்பு அண்டைக்குக் கொஞ்சம் ஆசாரமாக இருந்திருக்கலாமோ....என்னமோ?🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.