Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைதீவில் இரு இடங்களில் மக்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கொரோனா" தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை  இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணைதீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வியாழக்கிழமை  இரணைதீவு பகுதியில் இரண்டு இடங்களின் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

p1.jpg

 

 

இரணைதீவு பிரதான இறங்கு துரை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள்  தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

p3.jpg

 

நேற்றைய தினம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினர்க்கு இரணை தீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது இரணை  தீவு பகுதியிலே மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படாத நிலையில் மக்கள் இன்றைய தினம் மேற்படி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

 

p2.jpg

 

அதே நேரத்தில் இரணை தீவு பகுதிக்கு செல்லும் மக்களிடன் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்கு செல்வதற்கு முன் அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இரணைதீவில் இரு இடங்களில் மக்கள் போராட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இரணைதீவில் ஜனாசா புதைப்பு – தமிழ் முஸ்லிம் மக்களிடையே உருவாகிவரும் ஐக்கியத்தை உடைக்கும் சூழ்ச்சி

 
1-39-696x377.jpg
 20 Views
இரணைதீவில் ஜனாசா புதைப்பு  முயற்சி தமிழ் முஸ்லிம் மக்களிடையே உருவாகிவரும் ஐக்கியத்தை உடைக்கும் பேரினவாத ஆளும் வர்க்க சூழ்ச்சி என குற்றம் சுமத்தியுள்ளது சி.கா.செந்திவேல்.
 

மேலும் முஸ்லிம் மக்களைப் பழிவாங்கி இழிவுபடுத்தி ஒடுக்கும் அரசாங்கத்தின் மற்றொரு தீர்மானமே கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவில் கொரோனாவினால் இறந்த முஸ்லிம் ஜனாசாக்களைப் புதைக்கும்  முட்டாள்தனமான முடிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இது போரினால் தொழில்களை இழந்து இடம்பெயர்ந்து கடும் பாதிப்படைந்த சிறிய நிலப்பரப்புடைய இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார தொழில் முயற்சிகள், இயல்பு வாழ்வு என்பனவற்றுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் அச்சுறுத்தலாகும்.

அத்துடன் இஸ்லாமிய மக்கள் எவரும் வசிக்காத இரணைதீவில் கொரோனாவால் இறந்த இஸ்லாமிய மக்களின் ஜனசாக்களைப் புதைக்கும் முயற்சி தமிழ் முஸ்லிம் மக்களிடையே உருவாகிவரும் புரிந்துணர்வு, ஐக்கியத்தை உடைக்கும் பேரினவாத ஆளும் வர்க்கச் சூழ்ச்சியுமாகும்.

எனவே இத்தகைய அடாத்தான செயற்பாடுகளை விடுத்து அரசாங்கம், இஸ்லாமிய மக்களின் விருப்பத்தை மதித்து அவர்களின் மையவாடிகளில் போதிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து ஜனாசா அடக்கத்தை மேற்கொள்ளவேண்டும். இரணைதீவு மக்களோடும் தமிழ் முஸ்லிம் மக்களோடும் இணைந்து  ‘இரணைதீவைப் புதைகுழியாக்காதே’ எனும் மக்கள் இயக்கத்திற்கு எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி (NDMLP) முழு ஆதரவையும் வழங்குகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இரணைதீவில் உடல்கள் அடக்கம் – இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி 

 
1-23-696x521.jpg
 32 Views
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வது குறித்த அரசாங்கத்தின் முடிவு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இஸ்லாமிய அமைப்புகள் இது குறித்து சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளிற்கு கடிதங்களை அனுப்பவுள்ளன.
 
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இது குறித்த கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்லாமிய நிலையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
 
உடல்களை அடக்கம் செய்வதற்கு கௌரவமான இடமொன்றை ஒதுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என இஸ்லாமிய நிலையம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது.
 
உலக முஸ்லீம் காங்கிரசின் உறுப்பினரான இஸ்லாமிய நிலையம் உலக அமைப்புகளிற்கு இந்த விவகாரம் குறித்த தனது கரிசனையை முன்வைக்கவுள்ளதுடன் ஜெனீவாவில் உள்ள உலக முஸ்லீம் காங்கிரசின் அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவு குறித்துகடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள முஸ்லீம் அதிகாரிகள் நாட்டின் வேறு பகுதிகளில் பொருத்தமான இடங்களை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரணைதீவு கெடுபிடிகளை சுமுகமாக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெடுபிடிகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.

 

daklas.jpg

 

இன்று(05.02.2021) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இரணைதீவிற்கு பொது மக்கள் சென்று வருவதற்கு கடற்படையினரினால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுத்தப்படுவதாக சுடடிக்காட்டப்பட்டது.

இதுதொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், இரணைதீவில் பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது எனவும், அதன்பின்னர் தேவையற்ற கெடுபிடிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொறோனா காரணமாக இஸ்லாமிய சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லையென ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ள நிலையில், இன்றைய ஒருங்கிணைப்புக் குழுவிலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இரணைதீவு கெடுபிடிகளை சுமுகமாக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.