Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கடற்படையால் சிறீலங்காவைச் சேர்ந்த படகுகள் பறிமுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்படையால் சிறீலங்காவைச் சேர்ந்த படகுகள் பறிமுதல்

 
1-15-1.jpg
 28 Views

அங்கீரகிக்கப்படாத தொலைதொடர்பு  உபகரணங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் மூன்று சிறீலங்கா படகுகள் இந்திய கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள விஜின்ஜாம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தி இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

அகர்ஷா துவ, சது ராணி 03 மற்றும் சாது ராணி 08 ஆகிய படகுகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 19 நபர்களுடன் மார்ச் 5 திகதி மினிக்காய் தீவிலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பரப்பில் பயணித்த இந்த மூன்று படகுகளும் ‘ வராஹா ‘ என்ற இந்திய கடற்படையினருக்கு சொந்தமான கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன் போது இந்திய காவல்படையினர் குறித்த மூன்று படகுகளையும் சோதனையிட்ட போது அனுமதிக்கப்படாத தகவல் தொடர்பு உபகரணங்கள், போதைப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அதன் பின்னர் விரிவான விசாரணைக்காக படகுகள் ஞாயிற்றுக்கிழமை விஜின்ஜாம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த படகுகளிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயினும் 60 கிராம் ஹாஷிஷ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=44038

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் படகு போலுள்ளது.

எப்படியும்.... இன்று மாலைக்குள், வெளியே விட்டு விடுவார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருட்களுடன் 3 இலங்கை படகுகள் இந்திய கரையோரப்படையால் கைது

(செ.தேன்மொழி)
போதைப் பொருட்களை கடத்திச் சென்ற இலங்கை படகுகள் மூன்றை இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதுடன், படகில் பயணித்த 12 பேரை கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் தெற்கு கரையோரப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கரையோர பாதுகாப்பு பிரிவினரால் சந்தேகத்திற்கிடமான படகுகள் மூன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனை சோதனைச் செய்த பாதுகாப்பு படையினர் படகில் மறைத்து எடுத்துவரப்பட்ட  200கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 60 கிலோ கிராம் ஹசீஸ் ரக போதைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

fsfsdf.jpg

இந்திய கரையோர பாதுகாப்பு படையின் வருஷா எனப்படும் கப்பலே இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதுடன், இதன்போது படகில் 19 பேர் வரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சொந்தமான ஆகர்ஷாதுவ, சதுராணி 3 மற்றும் சதுராணி 8 ஆகிய படகுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது ஆகர்ஷாதுவ படகில் பயணித்தவர்கள், லக்ஷாத் தீவுக்கு 400 கடல் மையில் தொலைவில் பாகிஸ்தானிய கப்பல் ஒன்றினால் இந்த போதைப்பொருள் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களும் , படகும் இந்தியாவின் திருவாந்திரபுரம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கரையோர பாதுகாப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போதைப்பொருட்களுடன் 3 இலங்கை படகுகள் இந்திய கரையோரப்படையால் கைது | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.