Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் புர்காவுக்கு தடை - உத்தரவில் கையெழுத்திட்டார் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் புர்காவுக்கு தடை - உத்தரவில் கையெழுத்திட்டார் வீரசேகர

இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புர்காவை தடை செய்வது தொடர்பான யோசனையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

adada.jpg

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு, புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே புர்காவை தடை செய்வதற்கான உத்தரவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/102029

 

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒரு 40 வது சட்ட திருத்த மூலத்துக்கு 10 முசுலிம் எம்பிக்கள் கை உயர்த்தினால்....சிலவேளை புர்க்கா தடை எடுபடும்...😁

  • கருத்துக்கள உறவுகள்

புர்காவை தடைசெய்வதால் பிரச்சினைகள் தீவிரமடையுமே தவிர தணியப்போவதில்லை - முஜிபுர் ரஹ்மான்

(நா.தனுஜா)

இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம் இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் புர்காவை தடைசெய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையுமே தவிர, அவை தணியப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிபீடமேறியது. எனினும் அவற்றை நிறைவேற்ற முடியாததன் காரணமாகவே இப்போது புர்காவை தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.

14.jpg

இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம் இருக்கின்றது. எனவே புர்கா அணிவது அல்லது அணியாமல் இருப்பது குறித்து தீர்மானம் எடுப்பது நாட்டுமக்களின் உரிமையாகும். அவ்வாறான மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும். அரசாங்கத்தின் தீர்மானங்கள் நாட்டிலுள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கு வழிசெய்யும் என்று எமக்குத் தோன்றவில்லை என்று குறிப்பிட்டார்.

அதேவேளை புர்கா என்பது மதரீதியான தீவிரவாதப்போக்கின் அடையாளமாக இருப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவியபோது அதற்குப் பதிலளித்த முஜிபுர் ரகுமான்,

அதுகுறித்து சரத் வீரசேகர தீர்மானம் எடுக்கமுடியாது. என்னுடைய பார்வையில் அவர்தான் தீவிரவாதப்போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது. அவர் விரும்பும் ஆடையையே நாட்டுமக்கள் அணியவேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் தமது மதரீதியான நம்பிக்கையின்படி அணியும் ஆடைகளைத் தடைசெய்வதே தீவிரவாதப்போக்குடைய சிந்தனையாகும் என்று குறிப்பிட்டார். 

புர்காவை தடைசெய்வதால் பிரச்சினைகள் தீவிரமடையுமே தவிர தணியப்போவதில்லை - முஜிபுர் ரஹ்மான் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.