Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மங்கள சமரவீர அணிக்கு காலம் பிந்திப் பிறந்த ஞானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-23

மங்கள சமரவீர அணிக்கு காலம் பிந்திப் பிறந்த ஞானம்

காலம் பிந்திப் பிறக்கும் ஞானம் குறித்து விளக்குவதற்கு தமிழில் நல்ல பழமொழிகள் உண்டு. "கண்கெட்ட பின் சூரிய நமஸ் காரம்', "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடுவது' என்று பல உள்ளன.

முன்னாள் அமைச்சரும் தற்போது "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு' என்ற கட்சியை உருவாக்கியவருமான மங்கள சமரவீர தற்சமயம் கூறும் கருத்துக்களைக் கவனத்தில் எடுக்கும்போது இந்தப் பழமொழிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றன.

மங்கள சமரவீர தற்போதைய அரசையும், அரசுத்தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் மிக மோசமாக விமர்சித்திருக்கின்றார்.

தமது அரசியல் வாழ்க்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைப்போல ஒரு மோசமான அரசைத் தாம் இதற்கு முன் ஒருபோதும் கண்டதில்லை என்று அந்த மூத்த அரசியல்வாதி விமர்சித்திருக்கின்றார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் கவனிக்கத் தக்கவை.

ஒன்று ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்குத் தாம் உழைத்தமைக்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்கின்றார்.

மற்றது ""உண்மையைக் கூறப்போனால் மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குக் கிடைத்த நல்ல ஜனாதிபதி. புலிகள் தங்களின் செயற்பாட்டை விஸ்தரித்துச் செல்ல மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தான் சரியானது, பொருத்தமானது.'' என்ற அவரது கூற்று.

இந்த இரண்டு கருத்துரைகளுமே காலம் பிந்தி அவருக்குப் பிறந்த ஞானத்தின் வெளிப்பாடுகள்தாம்.

தமிழரின் தேசிய தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களுக்கு நியாயமாக உரியதை விட்டுக்கொடுத்து, அவர்களை அரவணைத்துச் செல்ல சிங்கள தேசம் எப்போதுமே மறுத்தே வந்திருக்கின்றது.

இந்தப் பின்னணியிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கத் தமிழ்மக்கள் தலைப்பட்டனர். சுமார் ஆறு தசாப்த காலமாக அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டு, வேண்டத்தகாத இனமாக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, புறந்தள்ளி வைக்கப்பட்ட தமிழ் இனம், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகார பீடத்தையும் அடியோடு புறக்கணித்து ஒதுக்கத்தலைப்பட்டது.

தமிழர் தாயகப் பிரதேசம் கடந்த ஜனாதிபதித் தேர்தலை புறம் ஒதுக்கிப் பகிஷ்கரித்ததன் பின்புலம் இதுதான்.

தென்னிலங்கையின் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் வாக்குப்பலம் தமிழர்களிடமே இருந்தது. இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அவர்களிடமே இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பைத் தமிழர்கள் பயன்படுத்தவில்லை. சிங்களம் தன்னுடைய தலைமையைத் தானே தேர்ந்தெடுக்க இடமளித்துத் தமிழ்த் தேசம் ஒதுங்கி நின்றது.

இந்தத் தேர்தல் பகிஷ்கரிப்பை முன்னின்று முன்னெடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். அதற்காக இந்த நடவடிக்கையை அத் தேர்தலில் போட்டியிட்ட இரு முக்கிய சிங்களத் தலைவர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தொடர்பில் விடுதலைப் புலிகளுக்கு இருந்த தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின் அடிப் படையில் புரிந்துகொள்ள முயல்வதோ அல்லது வியாக்கியானம் செய்வதோ தவறானது.

ஒட்டுமொத்த சிங்கள ஆட்சியமைப்பில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஆழமான விரக்தியினதும், பெரும் நம்பிக்கையீனத்தினதும் வெளிப்பாடாகவே இதனைக் கருதவேண்டும்; நோக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வென்று சரியாக பத்து நாள்கள் கடந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தாம் ஆற்றிய வருடாந்த மாவீரர் தின உரையில் மஹிந்த ராஜபக்ஷவின் தெரிவு எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதை தெட்டத் தெளிவாக மதிப்பீடு செய்து பகிரங்கப்படுத்தியிருந்தார்.

""சிங்களத் தேசமானது ஒரு புதிய தேசத் தலைவனைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது. அந்தத் தலைவனின் கீழ் ஒரு புதிய ஆட்சிபீடம் பதவி ஏறியுள்ளது. இந்த ஆட்சியமைப்பானது பிரத்தியேகமாகச் சிங்களப் பெரும்பான்மை மக்களால், அவர்களது வாக்குப்பலத்தால் நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த ஆட்சியமைப்பில் சிறுபான்மைத் தேசிய இனத்தவரின் பங்களிப்பு இருக்கவில்லை. இது முற்றுமுழுதாகவே ஒரு சிங்கள பௌத்த ஆட்சி பீடமாகும். இதனால் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை வாழ்மக்கள் சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்

நாம் துப்பாக்கிச் சன்னங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம்: மங்கள சமரவீர.

சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் குரல்களை அடக்குவதற்காக துப்பாக்கிச் சன்னங்கள் கூட பயன்படுத்தப்படலாம் என்பதனை நாம் எதிர்பார்க்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஹொரகொல்லவில் பண்டாரநாயக்காவின் சமாதியில் நேற்று வெள்ளிக்கிழமை மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த அரசாங்கத்தின் அடையாளம் தாக்குதல்களும், பழிவாங்கல்களும் தான்.

சுதந்திரக்கட்சி பொதுவாக ஒரு ஜனநாயக கட்சியாக இருந்த போதும், தற்போதைய நிர்வாகத்தின் கீழ் அங்கு ஜனநாயகம் இல்லை.

அரசையோ அல்லது ராஜபக்சக்களையோ யாரும் விமர்சிக்க முடியாது. நாம் அடுத்த வாரத்தில் இருந்து எமது வேலைத்திட்டங்களை தொடங்கும்போது எம்மீது சேறடிப்புக்கள், அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம் என்பதுடன் சிறைக்கும் செல்ல நேரிடலாம்.

மேலும் எம்மை அடக்குவதற்காக துப்பாக்கிச் சன்னங்களும் பயன்படுத்தப்படலாம் என்பதனை நாம் எதிர்பார்க்க வேண்டும்.

எனினும் எமது இலட்சியத்தை அடையும் வரை நாம் எமது பயணத்தை நிறுத்தப்போவதில்லை. எம் முன்பாக தற்போது இரு சவால்கள் உள்ளன. ஒன்று நாட்டை பாதுகாப்பது மற்றையது கட்சியை பாதுகாப்பது. கட்சி இருப்பதற்கு நாடு முக்கியமானது.

நாம் மட்டுமல்லாது நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் சந்திரிகாவை எமது கட்சியின் தலைவராகவே கருதுகின்றனர். அவரது பெற்றோரால் உருவாக்கப்பட்ட கட்சியை பாதுகாக்க அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன்.

திறமையற்ற, செயற்திறனற்ற நபர்களே இன்று நாட்டை ஆட்சி செய்கின்றனர். மகிந்தவை அரச தலைவராக்க உழைத்த நாமும் ஜேவிபியும் இன்று எதிர்த்தரப்பில் உள்ளோம். ஆனால் மகிந்தவை விமர்சித்த கரு ஜெயசூர்ய, ஹேமகுமார நாணயக்காரா போன்றோர் இன்று அரசில் உள்ளனர்.

மகிந்தவை ஆட்சிக்கு கொண்டுவர எமது சுதந்திரக்கட்சி தொண்டர்கள் தமது உயிராபத்தையும் பாராது வேலை செய்தனர். எனினும் எமது எதிர்த்தரப்பான ஐக்கிய தேசியக் கட்சி தற்போது அரசில் பதவிகளைப் பிடித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் பதவிகளை அனுபவிப்பதற்காகவா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்கள் வாக்களித்தனர்? என்றார் மங்கள சமரவீர.

-Puthinam-

மங்களவுக்கு ஞானம் பிறந்துவிட்டதாக அதாவது நாட்டின் இன்றைய பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு நீதியான வழியில் தீர்வுகளைக் கண்டறியவேண்டும் என்ற பக்குவமான உணர்வு வந்துவிட்டதாக நான் எண்ணவில்லை. இது சிங்கள அரசியல்வாதிகளுக்கே உரித்தான கபடத்தன்மை (hypocrisy) என்பது தான் உண்மை.

ஆட்சியை பிடிக்கும் மட்டும் இப்படி பல ஞானம் வரும்

எதிர்கட்சியில் இருக்கும்போது மட்டும் இந்த ஞானம் வரும். ஆட்சிக்கு வந்துவிட்டால் பட்டென்று மறைந்துபோகும்.

இது என்ன அஞ்ஞானமா? இல்லை இவங்கடை விஞ்ஞானமா? :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.