Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவனயீர்ப்புப் போராட்டங்கள்: பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் இயக்கம் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவனயீர்ப்புப் போராட்டங்கள்: பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் இயக்கம் அழைப்பு

 
1-122.jpg
 15 Views
தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கில் தொடர்ச்சி யாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்.நல்லூரிலும், மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங் களுக்கு ஆதரவளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.
 
இது தொடர்பில் அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
“தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ். நல்லூர் – கிட்டுப் பூங்காவிலிருந்து நாளை 17ஆம் திகதி புதன் கிழமை காலை 10 மணிக்கும், பொத்துவில்
தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
கீ ழ் வ ரு ம் இ ர ண் டு முதன்மைக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
 
01) இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்.
02) தமிழர்களுடைய மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற நீண்டகால அடிப்படை உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
 
தமிழ் மக்களின் நீதி மற்றும் உரிமைகளுக்கான இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்குமாறு மதத் தலைவர்கள், தமிழ்த் தேசிய கட்சிகள், சிவில் சமூக
அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரிடமும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

புர்கா தடை பற்றிய பேச்சும் அடிபடுவதால்... நிறைய முஸ்லீம்களும் கலந்து கொள்வார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாளை கிட்டு பூங்காவிலும் 19ம் திகதி காந்தி பூங்காவிலும் ‘சர்வதேச விசாரணை’ கோரி பேரணி!

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – கிட்டு பூங்காவிலிருந்து நாளை 17ம் திகதி காலை 10 மணிக்கும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு – காந்தி பூங்காவிலிருந்து 19ம் திகதி காலை 9 மணிக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

கீழ்வரும் பிரதான கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

1. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்.

2. தமிழர்களுடைய மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் மக்களின் நீண்டகால அடிப்படை உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் நீதி மற்றும் உரிமைகளுக்கான இப் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்குமாறு மதத்தலைவர்கள், தமிழ்த்தேசிய கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரிடமும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான (பொ2பொ) மக்கள் பேரெழுச்சி இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளை கிட்டு பூங்காவிலும் 19ம் திகதி காந்தி பூங்காவிலும் ‘சர்வதேச விசாரணை’ கோரி பேரணி! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.