Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களை அனுமதிக்க டக்ளஸ் தேவானந்தா புதிய யோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிடம் முன்வைத்துள்ளார்.

சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அனுமதி பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க தான் யோசனை முன்வைத்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த அனுமதி பத்திர நடைமுறையானது, நாட்டு படகுகளுக்கு மாத்திரமே செலுப்படியாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போட்டம் ட்ரோலரிங் படகுகளுக்கு இந்த அனுமதி பத்திர நடைமுறை செலுப்படியாகாது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதைத் தவிர மேலும் பல யோசனைகள் காணப்படுவதாக கூறிய அவர், அவற்றில் இந்த அனுமதி பத்திர நடைமுறை ஒரு யோசனை எனவும் குறிப்பிட்டார்.

இந்த யோசனையின் கீழ், இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் மாத்திரமே இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்க யோசித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.

டக்ளஸ் தேவானந்தா

இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் முழுமையான கட்டுப்பாடுகளின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்க யோசனையை தான் முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.

நாட்டு படகுகளின் தடை செய்யப்பட்ட விதிமுறைகளின் கீழ் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் கூறுகின்றார்.

அதேவேளை, பாட்டம் ட்ராலிங் மீன்பிடி நடவடிக்கை முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை மீனவர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையிலேயே இந்த திட்டத்தை முன்னெடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

இலங்கை இந்திய மீனவப் பிரச்னை தொடர்பில், இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களை அனுமதிக்க டக்ளஸ் தேவானந்தா புதிய யோசனை - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் இப்படிக் கூறிக்கொண்டு இன்னொரு பக்கத்தில் உள்ளூர் மீனவர்களைக் கொண்டே இதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களையும் கதவடைப்புக்களையும் மேற்கொள்வார். 

தமிழர்களின் கடற்பகுதியில் மட்டும் மீன் பிடிக்க அனுமதி ஏன். அப்பாதுதான் தமிழ்நாட்டு மீனவர்களையும் ஈழ மீனவர்களையும் மோதவிட்டு நிரந்தர பகைவர்களாக்கலாம்.. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு தென்பகுதி மீன்பிடியாளருக்கும் வடக்கில் அனுமதி வழங்கப்படும். அவர் என்ன செய்வார் பாவம்? அவருக்கு தெரிந்ததை, கொடுக்கப்பட்டதைத்தானே சொல்லவும், செய்யவும் முடியும். (பிரித்தாளும் வேலை).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி என்ற தகவல் போலி – உதய கம்மன்பில

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி செயற்பாடுகளில் ஈடுபட அனுமதியளிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்தியா , பங்களாதேஷ் மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் கைது செய்யப்படுகின்ற மீனவர்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறானதொரு கொள்கை ரீதியான தீர்மானத்தை அமைச்சரொருவரால் தனித்து எடுக்க முடியாது. அமைச்சரவையே இது குறித்து தீர்மானிக்க வேண்டும். எனினும் அரசாங்கம் என்ற ரீதியில் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.

2.jpg

கடல் எல்லை தொடர்பான அறியாமையினால் தேசிய கடற்பரப்பில் மீன் பிடி செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற மீனவர்கள் தொடர்பில் சகல நாடுகளும் சாதகமான அடிப்படையிலேயே செயற்படுகின்றன. இலங்கை மீனவர்கள் இந்தியா , பங்களாதேஷ் மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த நாடுகளுடன் கலந்துரையாடி வழக்கு தாக்கல் செய்யாமல் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதே போன்று இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது சில சந்தர்பங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான சந்தர்பங்களில் வழக்கு தொடராமலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய வழக்கு தொடராமல் தண்டப்பணம் செலுத்தி இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களுக்கு இவ்வாறான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்காலத்திலும் இதே போன்ற சுமூகமான தீர்வினையே எதிர்பார்க்கின்றோம்.

மியன்மார் அரசாங்கத்துடன் அந்நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் அந்நாட்டு சட்ட விதிகளின் படி நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சலுகை பெற்றுக் கொள்ள முடிந்தால் மாத்திரமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய மியன்மார் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அங்கு கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் நலன்சார் மற்றும் சட்ட ரீதியான தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது என்றார்.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி என்ற தகவல் போலி – உதய கம்மன்பில | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்து பாத்தா இந்தியா தெரியுமா? இலங்கை மீனவரின் நேர்கானல்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.