Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகம் மதச்சார்பின்மை பன்மைத்துவம்-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரிசமும்,அண்ணாயிசமும்,அம்பேத்காரிசமும் கற்றுத் தந்ததெல்லாம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமே.(Liberty, Equality, and fraternity). எப்போதும் இது தோற்கடிக்கக் கூடாது என்பது போல் எல்லா சாதிகளும் என் சாதியே என்று ரவீந்திரநாத் தாகூர் கூறியது போல் இவை சமூக நீதியோடு என்றும் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போல் எல்லா மதமும் இனமும் சமமே இவைகளே ஜனநாயகத்துக்குமான பண்புகள். மானிட மேம்பாடின் அடிப்படை அம்சங்களான (Democracy secularism and pluralism) ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் பாதுகாக்கப் பட்டு சொல்லில் மாத்திரம் இன்றி செயலிலும் இருக்க வேண்டும். இதுவே எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்.

இன்னும் தமிழ் நாட்டில் பெரிதாக ஊழல், குடும்ப ஆதிக்க அரசியல் இப்படி ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான சமூக விரோத கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை. உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நாடாக இந்தியாவை பார்த்தாலும் மக்கள் எந்தத் தடையும் இல்லாமல் சுயாதீனமாக வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. கோடி கணக்கில் பணம் கொடுத்து வாக்காளர்களை வாங்கும் ஊழலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினாலும் இந்திய ஜனநாயகம் திறம்பட இயங்குகிறதா என்ற கோள்வியும் எழாமல் இல்லை. 

பொருளாதார ரீதியாக முன்னேற்றம்  ஏற்பட்டாலும் அங்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படும் போது அங்கு அரசியல் ஸ்திரத்தன்மையின்மை தான் காணப்படும். ஐரோப்பிய தேசங்களில் தலைவர்கள் தப்பு செய்தாலோ அல்லது சிறு இலஞ்சம் வாங்கினாலோ அந்த தலைவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து காணாமல் போவது மாத்திரம் இன்றி நீதி விசாரணைகளோடு தண்டனைக்கும் உட்படுத்த படுவார்கள்.ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயக மறுப்பு,மனித உரிமை மீறல் இப்படி சமூக விரோத செயல்பாடுகள் அதிகரித்தே காணப்படுகின்றன.இவற்றுக்கு மத்தியில் பண அரசியலுக்கு கூட குறை இல்லாமல் தமிழ் நாட்டுத் தேர்தல் திராவிடமா, தேசியமா, இந்துத்துவாவ என்ற பெருத்த எதிர் பார்புகளுக்கு மத்தியில் நடை பெற இருக்கிறது.

சில மாற்று அரசியலையும் தமிழ் நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் நிராகரிக்க முடியாது. பெரிய திராவிட கட்சிகளே வெல்ல வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன் வைக்கிறார்கள்.எதிர் காலம் தான் இவைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும். மாற்றுக் கட்சிகள் எல்லாம் எதிர் காலத்தில் மாற்றத்தை கொண்டு வருமா எப்படி அமையப் போகின்றன என்பதை தமிழ் நாட்டு மக்கள் தீர்ப்பு சொல்லக் காத்திருக்கிறார்கள். சீமான் மற்றும் கமலை பொறுத்த வரையில் குறுகிய காலத்தில் சில வளர்ச்சி கண்டாலும் இவர்களை பொறுத்த வரையில் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். அதே வேளை இவர்களது கொள்கைகள் திட்டங்கள் இவர்கள் கூட்டு சேரும் கட்சிகளை வைத்தே இவர்கள் எதிர் கால வளர்ச்சியும் தங்கியுள்ளது. மாற்று கட்சிகள் வருவதற்கு இன்னும் காலம் எடுக்கலாம்.

அரை நூற்றாண்டு  மேலான திராவிட சிந்தனை கொண்ட ஆளும் திராவிட கட்சிகளை அவ்வளவு இலகுவாக யாரும் பின் தள்ள முடியாது .அண்மைகாலங்களில் ஐரோப்பிய அமெரிக்க பூகோள ரீதியாக (Brexit) பிரெக்ஸிட் அலை போல தேசியவாத சிந்தனைகள் கொண்ட சித்தார்ந்த பார்வை  போல சிறிய கட்சிகளிடையே வளர்ச்சி விகுதத்தை அதிகரிக்குமா என்பதும் முக்கிய கேள்வியாக அரசியல் அவதானிகள் மட்டத்தில் பார்க்கப் படுகின்றது.

இவை தவிர கொரோன தாக்கத்துக்கு பின் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களோடு விலை வாசி உயர்வு , வேலை இல்லாப் பிரச்சினை, இவற்றுக்கு மத்தியில் நடுத்த தர வர்க்கம் மிகுந்த துன்பத்தை எதிர் கொண்டு வருகின்றது. இவை கூட இத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமையலாம்.கோவிட் தொற்றுக்கு பின் ஏற்படக் கூடிய பொருளாதார சரிவுகளை சரி செய்யக் கூடிய சரியான தலைமையை  தமிழகம் தெரிவு செய்ய வேண்டிய தேவையும் உண்டு.எது எப்படி இருப்பினும் எமது  ஈழத்து தமிழர் நலனும் இதில் தங்கியிருக்கிறது என்பதையும் நாம் மறந்து விட முடியாது. மக்கள் தீர்ப்பை சில வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

பா.உதயன் ✍️

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, uthayakumar said:

பெரியாரிசமும்,அண்ணாயிசமும்,அம்பேத்காரிசமும் கற்றுத் தந்ததெல்லாம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமே.(Liberty, Equality, and fraternity). எப்போதும் இது தோற்கடிக்கக் கூடாது என்பது போல் எல்லா சாதிகளும் என் சாதியே என்று ரவீந்திரநாத் தாகூர் கூறியது போல் இவை சமூக நீதியோடு என்றும் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போல் எல்லா மதமும் இனமும் சமமே இவைகளே ஜனநாயகத்துக்குமான பண்புகள். மானிட மேம்பாடின் அடிப்படை அம்சங்களான (Democracy secularism and pluralism) ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் பாதுகாக்கப் பட்டு சொல்லில் மாத்திரம் இன்றி செயலிலும் இருக்க வேண்டும். இதுவே எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்.

இன்னும் தமிழ் நாட்டில் பெரிதாக ஊழல், குடும்ப ஆதிக்க அரசியல் இப்படி ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான சமூக விரோத கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை. உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நாடாக இந்தியாவை பார்த்தாலும் மக்கள் எந்தத் தடையும் இல்லாமல் சுயாதீனமாக வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. கோடி கணக்கில் பணம் கொடுத்து வாக்காளர்களை வாங்கும் ஊழலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினாலும் இந்திய ஜனநாயகம் திறம்பட இயங்குகிறதா என்ற கோள்வியும் எழாமல் இல்லை. 

பொருளாதார ரீதியாக முன்னேற்றம்  ஏற்பட்டாலும் அங்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படும் போது அங்கு அரசியல் ஸ்திரத்தன்மையின்மை தான் காணப்படும். ஐரோப்பிய தேசங்களில் தலைவர்கள் தப்பு செய்தாலோ அல்லது சிறு இலஞ்சம் வாங்கினாலோ அந்த தலைவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து காணாமல் போவது மாத்திரம் இன்றி நீதி விசாரணைகளோடு தண்டனைக்கும் உட்படுத்த படுவார்கள்.ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயக மறுப்பு,மனித உரிமை மீறல் இப்படி சமூக விரோத செயல்பாடுகள் அதிகரித்தே காணப்படுகின்றன.இவற்றுக்கு மத்தியில் பண அரசியலுக்கு கூட குறை இல்லாமல் தமிழ் நாட்டுத் தேர்தல் திராவிடமா, தேசியமா, இந்துத்துவாவ என்ற பெருத்த எதிர் பார்புகளுக்கு மத்தியில் நடை பெற இருக்கிறது.

சில மாற்று அரசியலையும் தமிழ் நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் நிராகரிக்க முடியாது. பெரிய திராவிட கட்சிகளே வெல்ல வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன் வைக்கிறார்கள்.எதிர் காலம் தான் இவைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும். மாற்றுக் கட்சிகள் எல்லாம் எதிர் காலத்தில் மாற்றத்தை கொண்டு வருமா எப்படி அமையப் போகின்றன என்பதை தமிழ் நாட்டு மக்கள் தீர்ப்பு சொல்லக் காத்திருக்கிறார்கள். சீமான் மற்றும் கமலை பொறுத்த வரையில் குறுகிய காலத்தில் சில வளர்ச்சி கண்டாலும் இவர்களை பொறுத்த வரையில் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். அதே வேளை இவர்களது கொள்கைகள் திட்டங்கள் இவர்கள் கூட்டு சேரும் கட்சிகளை வைத்தே இவர்கள் எதிர் கால வளர்ச்சியும் தங்கியுள்ளது. மாற்று கட்சிகள் வருவதற்கு இன்னும் காலம் எடுக்கலாம்.

அரை நூற்றாண்டு  மேலான திராவிட சிந்தனை கொண்ட ஆளும் திராவிட கட்சிகளை அவ்வளவு இலகுவாக யாரும் பின் தள்ள முடியாது .அண்மைகாலங்களில் ஐரோப்பிய அமெரிக்க பூகோள ரீதியாக (Brexit) பிரெக்ஸிட் அலை போல தேசியவாத சிந்தனைகள் கொண்ட சித்தார்ந்த பார்வை  போல சிறிய கட்சிகளிடையே வளர்ச்சி விகுதத்தை அதிகரிக்குமா என்பதும் முக்கிய கேள்வியாக அரசியல் அவதானிகள் மட்டத்தில் பார்க்கப் படுகின்றது.

இவை தவிர கொரோன தாக்கத்துக்கு பின் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களோடு விலை வாசி உயர்வு , வேலை இல்லாப் பிரச்சினை, இவற்றுக்கு மத்தியில் நடுத்த தர வர்க்கம் மிகுந்த துன்பத்தை எதிர் கொண்டு வருகின்றது. இவை கூட இத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமையலாம்.கோவிட் தொற்றுக்கு பின் ஏற்படக் கூடிய பொருளாதார சரிவுகளை சரி செய்யக் கூடிய சரியான தலைமையை  தமிழகம் தெரிவு செய்ய வேண்டிய தேவையும் உண்டு.எது எப்படி இருப்பினும் எமது  ஈழத்து தமிழர் நலனும் இதில் தங்கியிருக்கிறது என்பதையும் நாம் மறந்து விட முடியாது. மக்கள் தீர்ப்பை சில வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

பா.உதயன் ✍️

நல்லதொரு பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எப்போதும் தோற்கடிக்கக் கூடாது. ஜனநாயகம் மதச்சார்பின்மை பன்மைத்துவம் இந்தியாவில் பாதுகாக்கபட வேண்டும் நல்ல கருத்துக்கள் கொண்ட கட்டுரை 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

 

11 hours ago, விளங்க நினைப்பவன் said:

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எப்போதும் தோற்கடிக்கக் கூடாது. ஜனநாயகம் மதச்சார்பின்மை பன்மைத்துவம் இந்தியாவில் பாதுகாக்கபட வேண்டும் நல்ல கருத்துக்கள் கொண்ட கட்டுரை 👍

கருத்துக்கு நன்றிகள் புரட்சிக்கர தமிழுக்கும் விளங்கநினைப்பவனுக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.