Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்பமேளாவில் கொரோனா வைரஸுக்கு அஞ்சாமல் குவியும் பக்தர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா முழுக்க கொரோனா மிகக் கடுமையாக பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கும்பமேளா திருவிழாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராட ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருக்கின்றனர்.

வட இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் கும்பமேளா திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.

இத்திருவிழாவில் புனித நீராட, இன்று (ஏப்ரல் 12 திங்கட்கிழமை) மக்கள் லட்சக் கணக்கில் குவிந்துள்ளனர்.

மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர்

கங்கையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தியாவில், கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று (ஏப்ரல் 12) காலை 8 மணிக்கு இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,68,912 பேருக்கு கோவிட்-19 தொற்று உண்டாகியுள்ளது.

இந்நிலையில் ஹரித்வார் நகரத்தில் கும்பமேளா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

மருத்துவ நிபுணர்கள் கும்பமேளா கொண்டாட்டத்தை ரத்து செய்யுமாறு கூறினார். ஆனால் அரசு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்படிக்கப்படும் என கூறி கும்பமேளா கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.

நதிக்கரையில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக ஏ.என்.ஐ செ

"நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் அதிகப்படியான கூட்டம் இருப்பதால் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்க முடியவில்லை. எதார்த்தத்தில் அது சாத்தியமும் இல்லை" என ஐஜி சஞ்சய் குஞ்சியால் கூறியுள்ளார்.

இந்த இரண்டு மாத கும்பமேளா கொண்டாட்டத்தில் ஏப்ரல் 12 திங்கட்கிழமை சோம்வதி அமாவாசை நாள் தான், மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இன்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருப்பவர்கள் மட்டுமே கும்பமேளா திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என அரசு கூறியது. கடுமையான கொரோனா விதிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி போன்றவைகள் கடைபிடிக்கப்படும் என கூறப்பட்டது

Haridwar: Crowds surging at India's Kumbh Mela amid deadly Covid wave

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

இந்தக் கூட்டத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வைப்பது கடினமாக உள்ளது என்கின்றர் காவல் அதிகாரிகள்.

ஆனால் சில முக்கிய சாமியார்களுக்கும், திருவிழாவில் பங்கெடுத்த சில பக்தர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

எனவே திங்கட்கிழமை புனித நீராட்டத்தில் கொரோனா இன்னும் அதிவேகமாக பக்தர்களுக்கு பரவும் என்கிற பயம் அதிகரித்திருக்கிறது.

அதோடு இக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களில் சிலர் கொரோனா வைரஸை தங்கள் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல கூட வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகக் கடுமையாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அனுமதிக்கப்பட போதுமான படுக்கைகள் இல்லை எனவும், உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகத் தொடங்கி இருக்கின்றன.

இந்தியாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்படுபட்டவர்கள் எண்ணிக்கையில், 30 - 40 சதவீதம் பேர் மகாராஷ்டிரத்தில் உள்ளது. இரவு நேர ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசு, கும்பமேளா திருவிழாவுக்கு அனுமதி கொடுத்தது நிபுணர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் நிலைமை இன்னும் மோசமடையும் எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள். இதில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதும் அடக்கம்.

இதுவரை இந்தியாவில் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள், மக்களுக்குச் செலுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் கொரோனா பரவலைத் தடுக்க, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா வைரஸுக்கு அஞ்சாமல் குவியும் பக்தர்கள்: கங்கையில் நீராடும் பல்லாயிரம் பேர் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

கும்பமேளா: காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!

spacer.png

கும்பமேளா நடைபெற்று வரும் ஹரித்வார் நகரில் வெறும் 48 மணி நேரத்தில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கொரோனா பரவல் அதிகரித்து கொண்டிருக்கிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 1027 பேர் உயிரிழந்தனர். இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு, தடுப்பூசி போடும் பணி என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரின் கங்கை நதிக்கரையில் கடந்த 1 ஆம் தேதி முதல் கும்பமேளா திருவிழா நடைபெற்று வருகிறது. வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிற கும்பமேளாவில், கடந்த 12, 14 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புனித நீராடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா அதிகரித்து வருவதால், கும்பமேளாவுக்கு வருபவர்கள் கொரோனா நெக்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், கும்பமேளாவிற்கு வரும் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்ட நெரிசலில் சென்று வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல், இன்று நடந்த புனித நீராடலின்போது 31 லட்சம் பேர் நதியில் நீராடியதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

இதையடுத்து, 50,000 மாதிரிகளை சோதனை செய்ததில், கடந்த திங்கள் அன்று 408 பேருக்கும், நேற்று புதிதாக 594 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட 102 பக்தர்கள், 20 சாமியார்களுக்கும் இதுவரை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகையில், கும்பமேளா திருவிழாவிற்கு அரசு அனுமதி அளித்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கும்பமேளா விழா ஏற்பாடு குழுவில் உள்ள ஒருவரான சித்தார்த் சக்ரபாணி கூறுகையில், “எங்களுக்கு, எங்கள் நம்பிக்கை மிகப்பெரிய விஷயம். அந்த வலுவான நம்பிக்கையின் காரணமாகவே கங்கையில் நீராட இவ்வளவு பேர் இங்கு வந்துள்ளனர். கங்கை தாய் கொரோனாவிலிருந்து அவர்களை காப்பாற்றும் என நம்புகிறார்கள் ”என்று கூறினார்.

இதன் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்,”தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/politics/2021/04/14/58/1000-people-tested-positives-in-kumbhamela-festival-in-haridwar

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.