Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியட்நாம், ஈராக்கில் கையாளப்பட்ட மனோதத்துவ உத்திகளை கையாளும் புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம், ஈராக்கில் கையாளப்பட்ட மனோதத்துவ உத்திகளை கையாளும் புலிகள்

[26 - June - 2007]

கிழக்கில் படுதோல்வியை அடைந்திருக்கும் புலிகள் இயக்கம் அண்மைக்காலங்களில் நேரடி யுத்த உத்திகளைக் கைவிட்டு யுத்தம் சம்பந்தப்பட்ட மனோதத்துவ உத்திகளைக் கையாண்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கம் போலியான பிரசார உத்தி (False Propaganda Stratergy), போலியான அடையாளம் காணல் உத்தி (False Identity Stratergy) ஆகிய இரண்டு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். இதில் போலியான பிரசார உத்தி படையினர் மனதில் முற்றிலும் மனோதத்துவப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளதுடன், போலியான அடையாளம் காணல் உத்தி, படையினர்களிடையே அரசாங்கம், யுத்தம், பாதுகாப்பு பற்றிய தவறான கருத்துக்களை உருவாக்கி மனோநிலையைப் பாதிப்பதாக உள்ளது. இவை இரண்டு யுத்தகளம் சம்பந்தப்பட்ட போலியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். இவ்வாறு யுத்தகளம் சம்பந்தப்பட்ட உண்மையான தகவல்களைப் பெற நீண்டகாலம் எடுப்பதால் மேற்படி போலியான தகவல்கள் அடிப்படையிலாயான உத்திகளை எவ்வாறு நீண்டகாலம் திறமையாகக் கையாள முடியும்.

இவற்றில் போலியான அடையாளம் காணல் உத்தி (False Identity Stratergy) யுத்தகளத்தில் மிகவும் பாதிக்கக்கூடியதாகப் பயன்படுத்தப்பட்டதற்கு ஈராக் யுத்தகளத்தில் ஏற்ற எடுத்துக்காட்டுகள் உண்டு. கடந்த 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கப் படையினரின் மனோ உறுதியையும், யுத்த ஊக்கத்தையும் சீரழிப்பதற்காக மேற்படி போலியான அடையாளம் காணல் உத்தியை வடக்கு ஈராக்கில் அமெரிக்கப் படையினருடன் தீவிர யுத்தத்தில் ஈடுபட்டிருந்த "தமிஹிட்வால்" எனப்படும் ஈராக் போராளிகள் குழு பயன்படுத்தியுள்ளது.

அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களால் கொல்லப்பட்ட 25 அமெரிக்கப் படையினரின் சடலங்களை அடையாளம் காணமுடியாதபடி சிதைந்த நிலையில் அவர்கள் அவற்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைப்பதற்காகக் கொடுத்தனர். ஆனால், அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அவற்றை ஏற்க மறுத்துவிட்டனர். இதற்குக் காரணம் அடையாளம் காணமுடியாதவாறு அமெரிக்கப் படையினரின் சடலங்கள் சிதைக்கப்பட்டிருந்ததே.

இதைத் தொடர்ந்து இவ்வாறு அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அமெரிக்கப் படையினரின் சடலங்களை ஏற்க மறுத்ததை காரணமாக வைத்து மேற்படி "தமிஹிட்வால்" அமைப்பினர் பெரும் பிரசார நடவடிக்கைகளைச் செய்தனர். அமெரிக்க இராணுவம் யுத்தத்தில் இறந்த சிப்பாய்களின் சடலங்களைக்கூடப் பொறுப்பெடுக்கவில்லை என்ற ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க வீரர்களின் சதி இதுதான் என்று எச்சரிக்கும் விதத்தில் பிரசாரம் செய்யப்பட்டது. இதன்மூலம் அமெரிக்கப் படையினரிடையே பெரும் மனக் குழப்பத்தையும், சோர்வையும் கவலைகளையும் மேற்படி `தமிஹிட்வால்' அமைப்பு ஏற்படுத்தி அமெரிக்கர்களின் யுத்த ஆற்றலையும் உற்சாகத்தையும் பெருமளவில் குறைத்துவிட்டது.

இவ்வாறு இதற்குச் சமமான சம்பவம் ஷ்ரீலங்காவில் வடக்கு கிழக்கு யுத்த முனையிலும் கடந்த 4 ஆம் திகதி நிகழ்ந்திருப்பதை காணலாம். இந்தச் சம்பவத்தின் போதும் மேற்படி போலியான அடையாளம் காணல் உத்தியை (False Identity Stratergy) புலிகள் இயக்கத்தினர் ஷ்ரீலங்கா படையினருக்கு எதிராகப் பயன்படுத்தி பல பிரசாரம் செய்தனர். இந்தச் சம்பவத்தின் போது வவுனியா பிரதேசத்தில் ஓமந்தைப் பகுதியில் வைத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் இறந்த சடலங்கள் பலவற்றைப் பாதுகாப்புப் படையினரிடம் கொடுக்கும்படி ஒப்படைத்தனர். இந்தச் சடலங்களும் அடையாளம் காணமுடியாதவாறு புலிகள் இயக்கத்தினரால் சிதைக்கப்பட்டிருந்தன. இதனால், உரிய பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்தச் சடலங்களை செஞ்சிலுவைச் சங்கத்தினரிடமிருந்து ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். உடனே இதனைக் காரணமாக வைத்து ஷ்ரீலங்கா இராணுவ அதிகாரிகள் உயிரிழந்த இராணுவ வீரர்களின் சடலங்களைக் கூட ஏற்கவில்லை என்று புலிகள் இயக்கம் பிரசாரம் செய்தது.

இந்தச் சம்பவம் இராணுவத்தினரிடையே மனோதத்துவரீதியில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களின் உற்சாகத்தைக் குறைத்தது. மேலும், இவ்வாறே புலிகள் இயக்கத்தினரால் பெருந்தொகையில் இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள் என்பது போன்ற போலியான கருத்தை உருவாக்கி அவர்களை யுத்த களத்திலிருந்து பின்வாங்கச் செய்வதே புலிகள் இயக்கத்தின் நோக்கமாக இருந்தது.

இவ்வாறான போலியான அடையாளம் காணல் உத்தி சம்பந்தப்பட்ட பல உதாரணங்களை முன்னைய வியட்நாம் யுத்த வரலாற்றிலும் எடுத்துக்காட்ட முடியும். வியட்நாம் யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் வியட்கொங் கெரில்லாப் படையினர் பிரான்ஸ் படையினருடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த சமயம், பிரான்ஸ் படையினரின் தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாமல் பின்வாங்கிக் கொண்டிருந்த வியட்கொங்படையினர் ஒரு உத்தியைக் கையாண்டனர். முன்னேறிவந்த பிரான்ஸ் படையினரிடம் கெரில்லாக்களில் ஒரு குழுவினர் பிரான்ஸ் மொழியில் பேசிக்கொண்டு அவர்களை அணுகினார்கள். பிரான்ஸ் படையினர் அவர்கள் எதிரிகள் இல்லை என நினைத்து தமது தாக்குதலை நிறுத்தினர். உடனே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வியட்கொங் கெரில்லாக்கள் பிரான்ஸ் படையினர் மீது திடீரென்று அதிரடித் தாக்குதலை நடத்தி பிரான்ஸ் படையினர் தரப்பில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன் அவர்களின் ஆயுதங்களையும் பெருந்தொகையில் அபகரித்துச் சென்றனர். இவ்வாறு கெரில்லாக்கள் பிரான்ஸ் மொழியில் பேசி தம்மை நண்பர்கள் போல், போலியான அடையாளம் காட்டி குறித்த யுத்தமுனையில் பிரான்ஸ் படையினரைத் தாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்வாறே வவுனியாவிலுள்ள புளியங்குளம் பகுதியிலும் சிங்கள இளைஞர்கள், யுவதிகள் போல வேடமிட்டு வந்து, படையினரை புலிகள் இயக்கத்தினர் தாக்கிய சம்பவம் கடந்த 11 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இந்த உதாரண சம்பவங்களைக் கொண்டு பாதுகாப்பு ரீதியில் ஆராய்ந்து பார்த்தால் ஆயுதப்போர் உத்தியில் படையினரிடம் படுதோல்விகளை அடைந்துவரும் புலிகள் இயக்கத்தினர் தற்போது படையினரிடம் பாதுகாப்பு ரீதியிலான தவறான அபிப்பிராயம், மனப்பயம், விரக்தி போன்ற மனோதத்துவப் பாதிப்புகளை ஏற்படுத்தித் தாக்குதலை நடத்துவதும் நேரடி யுத்தம் அல்லாததுமான மோதல்களிலேயே ஈடுபட்டுவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

-லங்காதீப ரஜவீதிய விமர்சனம்: 21.06.2007-

நன்றி - தினக்குரல்

ஹி ஹி... :):)

சிங்களத்துக்கு இருக்கிற மிகப்பெரிய ஆதங்கம் என்னவென்றால், இந்த புலிகள் ஒரு வெட்டை வெளியில் நேருக்கு நேர் கைகலப்பில் ஈடுபட வருகிறார்கள் இல்லை. தந்திரமான தாக்குதல்களை முன்னெடுக்கிறார்கள் என்பதுதான். :D:lol:

இவர்கள் பழங்காலத்தைப் போல், மனிதர்களின் எண்ணிக்கையில் போர் தங்கியுள்ளது என்று நினைக்கிறார்கள் போலும். இந்த மனப் பிறள்வின் வெளிப்பாடு தான் எவ்வளவுக்கெவ்வளவு தமிழரை கொல்கிறோமோ அவ்வளவிற்கவ்வளவு போரில் வெற்றி என்ற அவர்களின் நம்பிக்கை. இவர்கள் என்றைக்குமே இதிலிருந்து மீளப்போவதில்லை. :angry: :angry:

அப்ப அமெரிக்கா காறன் செய்ததுகளைப்போல சிங்களவனும் "ஏஜன்ற் ஒரேஞ்சையும்' ஏஜன்ற்புளூவையும்' கொண்டுவந்து ஊத்தப்போகினம் எண்டுறீங்கள்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.