Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ராஜகிரிய கிளைமோர்" நபர் விடுதியில் கைது - அதனால் தமிழர்கள் வெளியேற்றமும் சரியே: கேகலிய ரம்புக்வெல

Featured Replies

"ராஜகிரிய கிளைமோர்" நபர் விடுதியில் கைது - அதனால் தமிழர்கள் வெளியேற்றமும் சரியே: கேகலிய ரம்புக்வெல.

ராஜகிரியவில் கிளைமோரைப் பதுக்கியவர்கள் கொழும்பு விடுதிகளில்தான் தங்கியிருந்தனர் என்றும் இத்தகைய செயற்பாடுகளினால்தான் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அந்நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அல்ல என்றும் சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்ததாவது:

தொப்பிக்கல பிரதேசத்தை கைப்பற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கிழக்கில் 99 விழுக்காடு பிரதேசத்தை அரசாங்கம் கைப்பற்றியுள்ளது.

கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டவே இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ராஜகிரிய ஒபயசேகரபுர என்ற இடத்திலிருந்து பொரளை நேற்று மீட்கப்பட்ட 20 கிலோ கிராம் நிறையுடைய அதிசக்தி வாய்ந்த கிளைமோரை கொழும்புக்கு கடத்திவந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய சந்தேக நபர் கொழுப்பில் உள்ள விடுதி ஒன்றிலிருந்தே கைதானார். இவரைத் தனது மகன் என்று சொல்லவும் இவர் தொழில் வாய்ப்புத் தேடி கொழும்புக்கு வந்தார் என்று கூறவும் அந்த விடுதியில் போலித் தாயொருவர் தங்க வைக்கப்பட்டிருந்தார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கிளைமோரை கிளிநொச்சியில் இருந்து கடத்தி வந்த டபிள் கப் வாகனத்தின் சாரதியை லண்டனிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பொன்று வழிநடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. யார் யாரின் உதவிகள் பெறப்படவேண்டும் கிளைமோரை எங்கே மறைத்து வைக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் அந்த தொலைபேசித் தொடர்பின் மூலமே வழங்கப்பட்டதாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த விசாரணைகள் தொடர்பான முழு விபரங்களையும் இறுவட்டுகளில் பதிவு செய்து ஊடகங்களுக்கு விரைவில் வழங்குவோம்.

கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை பல்வேறு தரப்பினரும் சாடினர். இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதால்தான் நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன்தான் தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். அது மனித உரிமை மீறலோ இனச்சுத்திகரிப்போ அல்ல.

அத்துடன் உரிய நேரத்தில் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கி பேரழிவொன்றைத் தவிர்க்க உதவிய பொது மகனுக்கு பாதுகாப்புப் படையினரின் நன்றியைத் தொரிவித்துக் கொள்கிறோம் என்றார் கேகலிய.

-Puthinam-

  • தொடங்கியவர்

இராஜகிரியவில் கிளேமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளதையடுத்து 300 பேர் கைது.

கொழும்பில் நேற்று கிளேமோர் கொண்டுன்று மீட்க்கப்பட்டுள்ளதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கிளேமோர் கொண்டுன்று எண்ணெய் தாங்கியொன்றினுள் வைத்து கொண்டுவரப்பட்டதாகவும் இவ்வாகனம் வடக்கு விடுதலைப்புலிகலின் கட்டுப்பாட்டு பகுதியில் கடைமையாற்றும் அதிகாரியொருவருக்கு சொந்தமானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.குண்டு மீட்க்கப்படதையடுத்து ஆயுதம் தாங்கிய பொலிஸார் குறித்த பகுதியில் சுறி வளைப்பு தாடுதலைனை மேற்கொண்டனர் இதில் 300 பேர் சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 200 பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் ஈடுப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

-Virekesari-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுபடியும் முட்டாள்கள் என்பதை நிருபித்துள்ளது சிங்களம்.

  • தொடங்கியவர்

விடுதிகளிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுவது நியாயமானது: கெகலிய ரப்புக்வெல.

kekaliob6.jpgkekaliob6.jpg

கொழும்பிலுள்ள விடுதிகளில் தமிழர்கள் வெளியேற்றப்படுவது நியாயமானது என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும் அமைச்சருமான கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நேற்று இராஜகிரியப் பகுதியில் 20 கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே கெகலிய ரப்புக்வெல இக்கருத்தை இன்று வெளியிட்டுள்ளார்.

இன்று கொழும்பில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராஜகிரிப் பகுதியில் கிளைமோர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர் விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இக்கைது நடவடிக்கையை ஆதாரம் காட்டி கொழும்பு விடுதிகளில் தேடுதல் நடத்துவதும், தமிழர்கள் கைது செய்யப்படுவதும், தமிழர்கள் விடுதிகளிலிருந்து வெளியேற்றபடுவதும் நியாயபூர்வமானது என அமைச்சர் கெகலிய ரப்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

-Pathivu-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 27-06-2007 18:23 மணி தமிழீழம் [முகிலன்]

ராஜகிரிய கைது செய்யப்பட்ட 252 பேரில் 8 பேர் தொடர்தும் தடுத்துவைப்பு

ராஜகிரிய ஒபயசேகரபுர என்ற இடத்திலிருந்து பொரல்லை பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்ட 20 கிலோ கிராம் நிறையுடைய அதிசக்தி வாய்ந்த கிளேமோரை கொழும்புக்கு கடத்திவந்த சம்பவம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட 252 பேரில் 8 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கூறியதாவது :

இச்சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கொழுப்பிலுள்ள லொட்ஜ் ஒன்றிலிருந்தே கைதானார். இவரைத் தனது மகன் என்று சொல்லவும் இவர் தொழில் வாய்ப்புத் தேடி கொழும்புக்கு வந்தார் என்று கூறவும் அந்த லொட்ஜில் போலித் தாயொருவர் தங்கவைக்கப்பட்டிருந்தார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கிளேமோரை கிளிநொச்சியில் இருந்து கடத்தி வந்த டபள் கெப் வாகனத்தின் சாரதியை லண்டனிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பொன்று வழிநடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. யார் யாரின் உதவிகள் பெறப்படவேண்டும் கிளேமோரை எங்கே மறைத்து வைக்கவேண்டும் போன்ற உத்தரவுகள் அந்த தொலைபேசித் தொடர்பின் மூலமே வழங்கப்பட்டதாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த விசாரணைகள் தொடர்பான முழு விபரங்களையும் சீ டீக்களில் பதிவு செய்து ஊடகங்களுக்கு விரைவில் வழங்குவோம்.

அத்துடன் உரிய நேரத்தில் பொலிஸாருக்குத தகவல் வழங்கி பேரழிவொன்றைத் தவிர்க்க உதவிய பொது மகனுக்கு பாதுகாப்புப் படையினரின் நன்றியைத் தொரிவித்துக் கொள்கிறேம் என்றும் அமைச்சர் கூறினார்.

பதிவு

அரசாங்கம் ஒட்டுகுழுக்களை பயன்படுத்தி கிளைமோரை பதுக்கிவிட்டுவும் அவர்களை விடுதியில் இருத்திவிட்டும் தாம் சந்தேக நபர்களை விடுதியிலிருந்து கைது செய்ததாக வெளிநாடுகளுக்கு கூறி தமிழர்களை விடுதியிலிருந்து வெளியேற்றியதை நியாயப்படுத்துவதற்கு முயல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களின் தகவலினால்பாரிய தாக்குதல் முறியடிப்பு

வீரகேசரி நாளேடு

லொட்ஜ் நாடகத்தை அம்பலப்படுத்துவோம் என்கிறார் கெஹெலிய

படையினருக்கு பொதுமக்கள் தகவல்களை வழங்குவதன் மூலமாக சாதாரண பொது மக்களும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு தலைமையேற்றுவருகின்றனர்.பயங்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.