Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தை செல்வாவின் 44ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வாவின் 44ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

(சி.எல்.சிசில்)

யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

selva-1-720x375-1.jpg

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

Thanthai-Selva-300x300.jpg

இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

selva-2.jpg

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரெட்ணம் அடிகளார், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சிவில் சமூகத்தினர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

https://thinakkural.lk/article/119407

 

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வாவின் 44வது நினைவு தினம் இன்று -மட்டக்களப்பில் அஞ்சலி

IMG_0125-696x464.jpg
 60 Views

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான தந்தை செல்வாவின் 44வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

தந்தை செல்வாவின் 44வது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் தந்தை செல்வாவின் 44வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

IMG_0116-1.jpg

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு நினைவுதினம் மட்டும் சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு நடாத்தப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

IMG_0137.jpg

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

 

https://www.ilakku.org/?p=48272

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.