Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விநாயகரை பிள்ளையார் என்றும் கணபதி என்றும் ஆனை முகத்தோன் என்றும் ஐங்கரன் என்றும் பலவித நாமம் கொண்டு துதிப்பதுண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விநாயகருக்கு உகந்த நாள் விநாயக சதூர்த்தியாகும். ஆவணி மாதத்தில் வளர் பிறையில் வருகின்ற சதூத்தி மிக சிறந்த நாளாகும். விநாயகரை அறுகம் புல்லும் வெள்ளெருக்கம் பூவும் கொண்டு பூஐpத்தால் அவரது அருளை பெற முடியும் என்பதே நம்பிக்கை.

விநாயகரை பிள்ளையார் என்றும் கணபதி என்றும் ஆனை முகத்தோன் என்றும் ஐங்கரன் என்றும் பலவித நாமம் கொண்டு துதிப்பதுண்டு

இவருக்கு பிடித்தமான நிவேதனங்கள் மோதகமும் பருப்பு நெய் சாதமும் அப்ளம் கரும்பு இவைகளாகும்

இப் பொருட்களை நெய் வேத்திய பொருளாக வைத்து அவரை வழி படுதல் அவசியமாகும் இதனை ஒரு பாடல் நமக்கு விளக்குகிறது.

'கைதல நிறை கன்னி

அப்ப மொடவல் பொரி

கப்பிய கரி முகன் அடிபேணி"


அதனாலே விநாயகருக்கு நெய்வேத்தியம் விருப்பமான ஒன்று என்பதை நாம் அறிவோமாக விநாயகர் துதி பாடி பூசை முடித்த பின் அந்த நெய்வேத்தியத்தை ஒரு ஏழைக்கு முதலில் உண்ண கொடுத்து அவனது பசி ஆறிய பின்னர் தான் நாம் உண்ண வேண்டும் என்பது பூசையின் வழி பாட்டு முறையாகும்.

விநாயகர் பூசையை விநாயகசதூர்த்தி நாளிலும் வெள்ளி கிழமைகளிலும் கோயிலில் ஆவது வீட்டு பூசை அறையிலாவது

செய்வதன் முலம் நல்ல அருளை பெற முடியும் என விநாயகர் வழி பாட்டு முறை கூறுகிறது

எந்த கடவுளையும் வழி படும் முன்பும் விநாயகரை வழி பட்டு அதன் பிறகுதான் மற்றய தெய்வங்களை வழி பட வேணும் என்பது இந்து மத கோட்பாடாகும்

இதனாலேயே பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து தான் எல்லா நல்ல காரியம் கூட இந்துக்கள் ஆரம்பிப்பது உண்டு

ஏதாவது எழுதும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத ஆரம்பிப்பது வழக்கமாயிருந்தது

விநாயகரை மதித்து வழி பட்டால் தான் மற்ற தெய்வங்களின் அநுக்கிரகமும் கிட்டும் என இந்து மதத்தில் நம்பப் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அன்புத்தம்பி said:

விநாயகரை பிள்ளையார் என்றும் கணபதி என்றும் ஆனை முகத்தோன் என்றும் ஐங்கரன் என்றும் பலவித நாமம் கொண்டு துதிப்பதுண்டு

ஆமாம் அன்புத்தம்பி, இங்குள்ள அனைத்து நாமங்களையும் சொல்லி அழைத்தால் விநாயகரின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.:100_pray:

1 கணேசன் 2 ஏகதந்தன் 3 கணபதி 4 ஏரம்பன் 5 விநாயகன் 6 கணநாதன் 7 கங்கைபெற்றோன் 8 அங்குசதாரி 9 டுண்டிராஜன் 10 பிள்ளையார் 11 ஒற்றைக்கொம்பன் 12 கயமுகன் 13 மயூரேசன் 14 பரசுபாணி 15 கசானனன் 16 லம்போதரன் 17 அங்குசபாசதரன் 18 கஜானனன் 19 ஒற்றைமருப்பினன் 20 ஹேரம்பன் 21 பாசாங்குசதரன் 22 அங்குசபாணி 23 வக்ர துண்டன் 24 அத்திமுகத்தோன் 25 ஜேஷ்டராஜன் 26 நிஜஸ்திதி 27 முறக்கன்னன் 28 அம்பிகைதனயன் 29 ஆசாபூரன் 30 ஆகுயர்த்தோன் 31 கணாதிபன் 32 வரதன் 33 ஆகீசன் 34 விகடராஜன் 35 வல்லவைமன் 36 முன்னோன் 37 மகா வித்யா கணபதி 38 விக்கினநாயகன் 39 நிதி கணபதி 40 சித்தி புத்தி விநாயகர் 41 மகோதரன் 42 சயன கணபதி 43 வத்திரதுண்டன் 44 சந்தான லட்சுமி கணபதி 45 க்ஷிப்ர ப்ரஸாத கணபதி 46 தரணிதரன் 47 விக்கினராசன் 48 சித்திகணபதி 49 சித்தி - புத்தி பதி 50 விகடசக்கரன் 51 பிரும்மணஸ்தபதி 52 ஆனைமுகத்தோன் 53 வேழமுகத்தான் 54 ருணஹரள கணபதி 55 மோதகப்பிரியன் 56 தும்பிக்கை ஆழ்வார் 57 நர்த்தன கணபதி 58 மாங்கல்யேசர் 59 லக்ஷ்மி கணபதி 60 விக்கினேசுவரன் 61 பார்ப்பதிபுதல்வன் 62 கௌரிமைந்தன் 63 திரியம்பகன் 64 மகா கணபதி 65 மூத்தோன் 66 சர்வ பூஜ்யர் 67 வினைதீர்த்தான் 68 அரிமருகன் 69 விக்கினேசன் 70 விக்னராஜன் 71 ப்ரம்மண கணபதி 72 குரு கணபதி 73 வாமன கணபதி 74 சங்கடஹர கணபதி 75 குமார கணபதி 76 ஊர்த்துவ கணபதி 77 அர்க கணபதி 78 சக்தி கணபதி 79 உத்தண்ட கணபதி 80 ஹரித்ரா கணபதி 81 உச்சிட்ட கணபதி 82 சிங்க கணபதி 83 மும்முக கணபதி 84 சிருஷ்டி கணபதி 85 துவிமுக கணபதி 86 யோக கணபதி 87 துர்க்கா கணபதி 88 வீரகணபதி 89 புஷ்ப கணபதி 90 ரணமோசன கணபதி 91 ஆலம்பட்டா 92 அனந்தசித்ரூபயமம் 93 வெயிலுக்குகந்த விநாயகர் 94 சர்வ சக்தி கணபதி 95 பிரளயங்காத்த விநாயகர் 96 படிக்காசு விநாயகர் 97 பொள்ளாப்பிள்ளையார் 98 விகடசக்கர விநாயகர் 99 மணக்குள விநாயகர் 100 ஐங்கரன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எட்டு நாமங்கள் சொல்லி 108 ஆக்கலாமே.....!

101  --  கொண்டலடிப் பிள்ளையார்.

102  --  நீராவிடிப் பிள்ளையார்.

103  -- உச்சிப் பிள்ளையார்.

104  --  தான்தோன்றிப் பிள்ளையார்.

105  --  சிற்றம்பலப் பிள்ளையார்.

106  --  கள்ளவாரணப் பிள்ளையார்.

107  -- பொன்னம்பலப் பிள்ளையார்.

108  --  கைலாச விநாயகர்........!   🌹

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

இன்னும் எட்டு நாமங்கள் சொல்லி 108 ஆக்கலாமே.....!

101  --  கொண்டலடிப் பிள்ளையார்.

102  --  நீராவிடிப் பிள்ளையார்.

103  -- உச்சிப் பிள்ளையார்.

104  --  தான்தோன்றிப் பிள்ளையார்.

105  --  சிற்றம்பலப் பிள்ளையார்.

106  --  கள்ளவாரணப் பிள்ளையார்.

107  -- பொன்னம்பலப் பிள்ளையார்.

108  --  கைலாச விநாயகர்........!   🌹

ஆமாம் சுவி, பிள்ளையார் இல்லாமல் சிங்களப் புத்தர்களுக்கு வெசாக் பண்டிகை இல்லை. அவர்களும் பிள்ளையாரைப் போற்றும் 108 போற்றிகளைச் சொல்லி அருளைப் பெறட்டும். அப்பனே பிள்ளையாரே! :100_pray:

1. ஓம் அத்தி முகனே போற்றி 

2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி 

3. ஓம் அம்மையே அப்பா போற்றி 

4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி 

5. ஓம் அமரர்கள்  கோனே போற்றி 

6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி 

7. ஓம் அங்குச பாஸா போற்றி 

8. ஓம் அரு உருவானாய் போற்றி 

9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி 

10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி 

11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி 

12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி 

13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி 

14. ஓம் ஆதி மூலமே போற்றி 

15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி 

16. ஓம் ஆரா அமுதா போற்றி 

17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி 

18. ஓம் இடையூறு களைவாய் போற்றி 

19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி 

20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி 

21. ஓம் ஈசனார் மகனே போற்றி 

22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி 

23. ஓம் உத்தமக் குணாளா போற்றி 

24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி 

25. ஓம் உண்மை நெறியாளா போற்றி 

26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி 

27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி 

28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி 

29. ஓம் என்றுமே  திகழ்வாய் போற்றி 

30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி 

31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி 

32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி 

33. ஓம் எண்குண சீலா போற்றி 

34. ஓம் எழு பிறப்பறுப்பாய்  போற்றி 

35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி 

36. ஓம் ஏக நாயகனே போற்றி 

37. ஓம் எழில் மிகு தேவே போற்றி 

38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி 

39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி 

40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி 

41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி 

42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி 

43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி 

44. ஓம் முழு முதற் பொருளே போற்றி 

45. ஓம் ஒளி மிகு தேவே  போற்றி 

46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி 

47. ஓம் கணத்து நாயகனே போற்றி 

48 . ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி 

49. ஓம் கலைஞானக் குருவே போற்றி 

50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி 

51. ஓம் கற்பக களிறே போற்றி 

52. ஓம் கண்கண்ட தேவே போற்றி 

53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி 

54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி 

55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி 

56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி 

57. ஓம் சர்வ லோகேசா போற்றி 

58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி 

59. ஓம் சுருதியின் முடிவே போற்றி 

60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி 

61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி 

62. ஓம் நாதனே ,கீதா போற்றி 

63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி 

64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி 

65. ஓம் தரும குணாளா போற்றி 

66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி 

67. ஓம் தூயவர் துணைவா போற்றி 

68. ஓம் துறவிகள் பொருளே போற்றி 

69. ஓம் நித்தனே ,நிமலா போற்றி 

70. ஓம் நீதி சால் துரையே போற்றி 

71. ஒம் நீல மேனியனே போற்றி 

72. ஓம் நிர்மலி வேனியா போற்றி 

73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி 

74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி 

75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி 

76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி 

77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி 

78 . ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி 

79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி 

80. ஓம் முத்தியை தருவாய் போற்றி 

81. ஓம் வேழ முகத்தாய் போற்றி 

82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி 

83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி 

84. ஓம் வேதாந்த விமலா போற்றி 

85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி 

86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி 

87. ஓம் செல்வம் தருவாய் போற்றி 

88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி 

89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி 

90. ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி 

91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி 

92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி 

93. ஓம் ஒளவியம்  அகற்றுவாய் போற்றி 

94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி 

95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி 

96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி 

97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி 

98. ஓம் அமிர்த கணேசா போற்றி 

99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி 

100 ஓம் வலம்புரி விநாயகா போற்றி

101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி 

102. ஓம் சித்தி விநாயகா போற்றி 

101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி 

104. ஓம் சுந்தர  விநாயகா போற்றி 

105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி 

106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி 

107. ஓம் ஆபத் சகாயா போற்றி 

108. ஓம் அமிர்த கணேசா போற்றி. 😌

  • கருத்துக்கள உறவுகள்

page109-728px-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.pdf.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.