Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் “நினைவுக் கல்” கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் “நினைவுக் கல்” கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம்

May 12, 2021
2-696x536.jpg

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்த வளாகத்தில் நாட்டுவதற்காக நினைவுக் கல் ஒன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினரால் அங்கு கொண்டுவரப்பட்ட நிலையில் படைத்தரப்பினருக்கும் அருட் தந்தையர்கள் தலைமையிலான பொதுக்கட்டமைப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

3.jpg

இதையடுத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி காவல்துறையினரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=49358

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நாட்டுவதற்கு கொண்டுவரபட்ட பொது நினைவுக்கல் !

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நிறுவுவதற்காக பொது நினைவுக்கல் நினைவேந்தல் பொது கட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட நிலையில் இராணுவம் பொலிஸார் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

IMG_8415.jpg

எதிர்வரும் மே 18 அன்று நினைவேந்தல் திட்டமிட்டபடி சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என பொது கட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாசகம் பொறிக்கப்பட்ட பொது நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்படுவதற்க்காக கொண்டுவரப்பட்டது.

இன்று மாலை 6 மணியளவில் நினைவேந்தல் கட்டமைப்பினரால் 6.5 அடி உயரமான பாரிய நினைவு கல்  முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரபட்டுள்ள நிலையில் இராணுவம் வருகை தந்து  அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்கிடம் விசாரணையில் ஈடுபட்டனர். 

பின்னர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் வருகை தந்து விசாரணைகளில் ஈடுபட்டதோடு பொலிஸாரிடம் அனுமதி பெற்றே முள்ளிவாய்க்காலில் எதுவாக இருந்தாலும் செய்யமுடியும் என நினைவேந்தல் பொதுக்குழுவினரிடம் தெரிவித்து இங்கு எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தனர்.  

முள்ளிவாய்க்கால் பொது கட்டமைப்பை சேர்ந்த 6 பேர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நின்ற நிலையில் பொலிஸ் இராணுவம் 50க்கும் மேற்பட்டவர்கள் குவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

365F7D08-AB09-442E-8888-C2661A34FA53.jpg

IMG_6993.jpg

IMG_6994.jpg

IMG_6995.jpg

IMG_7002.jpg

BD5D2908-3860-4663-8CB5-9EF8C7DADBA2.jpg

IMG_7004.jpg

IMG_8400.jpg

IMG_8401.jpg

IMG_8404.jpg

IMG_8413.jpg

 

https://www.virakesari.lk/article/105408

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கிலிருந்து பிக்குகள், இராணுவத்தினர், ஆடல் பாடல் குழுவினர் வடக்கிற்கு படையெடுத்து, புத்தர் சிலை நிறுவலாம், விகாரை அமைக்கலாம். ஆனால் நாங்கள் எங்கள் மண்ணில், எங்களுக்காக இறந்த எங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து  கண்ணீர் விட்டு, ஆறுதலைடைய தடை. கொரோனா சொல்லிச்சா இல்லை புத்தர்தான் சொன்னாரா நான் இங்கே இவர்களுக்குள்தான் வருவேன், இங்கேதான் குடி இருப்பேன் என்று? இது சுகாதாரமும் இல்லை, பக்தியும் இல்லை, வீம்பு. நீங்கள்  போகிற போக்கில் போய் உங்களையே அழித்துக்கொள்ளுங்கள் என்று கடவுளும் இவர்களை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டார். சீனாவை நம்பி இவர்கள் ஆடுற ஆட்டத்தில் சீனாவும் சேர்ந்து குப்புற விழப்போகுதோ தெரியேல்லை. காலம் மாற எதுவும் மாறும். பிறருக்கு வெட்டிய குழியில் பலர் தாமே விழுந்திருக்கிறார்கள். இது கண்ட அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்ட்டவர்களுக்காக நான் கொடுக்கும் வரப்பிரசாதங்களையும் நீயே எடுத்துக்கொள், உன்னை கட்டுப்படுத்த நான் விடும் தடைகளையும் நீ தண்டிக்க விரும்புபவர்களுக்காக திருப்பி விடு. உன்  ஆட்டத்தை தொடர் ஆனால் முடிவு மட்டும் என்கையில் என்று விடுவிட்டார் கடவுள். இப்போ ஆட்டம் விதி முறைகளை கடந்து சென்று விட்டது,  இவர்களே நினைத்தாலும் இனி ஆட்டத்தை  நிறுத்தமுடியாத கட்டத்தை அடைந்து விட்டது. தன்னை மட்டுமல்ல முறைகேடான ஆட்டத்தால் இவர்களின் ஆட்டத்தை பார்த்து  ரசித்தவர்களும், துணைபோனவர்களும் சேர்ந்து  ஏமாற்றமடையப்போகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.