Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு பிரதான நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு பிரதான நிகழ்வு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரதான சுடர் ஏற்பட்டு விடுதலைப் பயணத்தில் உயிர் துறந்த அத்துணை உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

WhatsApp-Image-2021-05-18-at-00.30.43-30

போரின் வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் முல்லை மண், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளதோடு, முப்படையினரினதும், பொலிஸாரினதும், புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பு வளையத்திற்குள் நேற்று நள்ளிரவு முதல் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்திலும், பாதுகாப்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நிலைமைகள் சுமூகமில்லாத விடத்து மாற்று வழியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என்று ஏற்கனவே பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு இணங்க பிரத்தியேகமானதொரு இடத்தில் இரகசியமாக அந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://thinakkural.lk/article/121669

 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் -அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

 
received_1211519449299630-696x392.jpeg
 32 Views

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் முல்லைத்தீவிலும் சுடரேற்றி, மலர்தூவி அரசியல் பிரமுகர்கள் அகவணக்கம் செலுத்தி அஞ்சலித்துள்ளனர். 

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு நாளான 18.05.2021 இன்று, வடகிழக்குத் தாயகப் பரப்பிலுள்ள தமிழர்களாலும், புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்களாலும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தாயகத்தில் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன. இந் நிலையில் இவ்வாண்டு  கோவிட் – 19 அசாதாரண நிலையைக் காரணமாக, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவில்லை.

1621351301339_IMG-e95c070f5e07d8369d602f

அந்த வகையில்  அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும், மதத் தலைவர்கள், யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் என்பன இம்முறை நினைவேந்தலை வீட்டு முற்றங்களில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தன.

அதற்கமைய முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதிப் போரின்போது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைந்து சுடரேற்றி, பூத்தூவி தனது அஞ்சலிகளை மேற்கொண்டிருந்தார்.

IMG-20210518-WA0199.jpg

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.தவராசா தனது இல்லத்தில் சுடரேற்றி அகவணக்கம் செய்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் க.விஜிந்தன் தனது இல்லத்தில் சுடரேற்றி அகவணக்கம் செய்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்  சி.லோகேஸ்வரன் தனது இல்லத்தில் சுடரேற்றி  அகவணக்கம் செய்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=50031

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் வீடுகளில் விளக்கேற்றி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுகூரல்

 
IMG-20210518-WA0347-1-696x485.jpg
 43 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில்  காவல்துறையினரால் நீதிமன்றம் ஊடாக தடைவிதிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை வீடுகளில் விளக்கேற்றி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுகூரப்பட்டது.

IMG-20210518-WA0348.jpg

IMG-20210518-WA0246.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.