Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசுக்கு பல்வேறு நிலைகளில் சவால்களை தோற்றுவிக்கக்கூடிய அரசியல் நிகழ்வுப் போக்குகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசுக்கு பல்வேறு நிலைகளில் சவால்களை தோற்றுவிக்கக்கூடிய அரசியல் நிகழ்வுப் போக்குகள்

[30 - June - 2007]

* அரசுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமடைந்திருக்கின்ற போதிலும் மக்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்களே தவிர, பங்காளிகளாக இல்லை. ஐ.தே.க. ஆட்சிக்கால அனுபவங்களே அதற்குக் காரணம்

* அரசியலில் மங்கிப்போன மூன்றாவது அணிக்கு மீண்டும் சாயம் பூசும் முயற்சிகளில் ஜே.வி.பி.

இந்த வாரத்தில் இடம்பெற்ற சில அரசியல் நிகழ்வுகள் நாட்டில் உருவாகப்போகும் முக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு புதிய சமிக்ஞைகளைக் காட்டியுள்ளன. இவற்றின் வளர்ச்சியானது மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு பல்வேறு நிலைகளிலான சவால்களைத் தோற்றுவிக் கவே செய்யும்.

ஏற்கனவே, ஐக்கிய தேசியக் கட்சியானது அரசாங்கத்திற்கு எதிரான பிரசார இயக்கத்தைத் தொடக்கியுள்ளது. பாராளுமன்றத்திற்கு உள்ளே எழுப்பிய பிரச்சினைகள் அரசாங்கத்தை திக்குமுக்காட வைத்துள்ளன. அதேவேளை, வெளியே ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தைத் திரட்டி மக்களிடையே பிரசாரத்தை நடாத்தியும் வருகின்றது. குடும்ப ஆட்சி என்றும் சகோதரர்களின் ஆட்சி என்றும் உரத்துப் பிரசாரம் செய்து மகிந்த சிந்தனை என்பதனை மழுங்கடிக்க ஐ.தே.க. முனைந்து செயல்படுகின்றது. அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் என்றுமில்லாதவாறு வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருகின்றார். அப்பிரயாணங்கள் அரசியல் காய் நகர்த்தல்களுடன் சம்பந்தம் அற்றவை என்று கூறிவிட முடியாது.

தங்களது பக்கத்திலிருந்து பதினெட்டுப் பேரை அரசாங்கத்தரப்பிற்குப் பறிகொடுத்த பின்பும் தாங்கள் நாற்பத்தியெட்டு இலட்சம் வாக்குகளை மக்களிடமிருந்து பெற்ற கட்சி என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி தமது பலத்தின் பெறுமதியை எடுத்துக்காட்டி பிரசாரத்தை ஐ.தே.க. வினர் முன்னெடுக்கின்றனர். வெளி மாவட்டங்களில் நடாத்திவரும் இந்த அரசாங்க எதிர்ப்புப் பிரசாரங்களை மக்கள் பார்வையாளர்களாக இருந்து அவதானித்து வருகிறார்களே தவிர, பங்காளர்களாக மாறவில்லை. காரணம் ஐக்கிய தேசியக் கட்சி ஏதோ பாராளுமன்ற அரசியலுக்கு புதிதாக வந்த கட்சியல்ல. பல தடவைகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி மட்டுமன்றி, பல்வேறுபட்ட மக்கள் விரோத செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி அடக்குமுறைகளையும் கையாண்ட கட்சி என்பதை மக்கள் நன்கு அறிவர்.

அத்துடன், எதிர்க்கட்சியில் இருக்கும்போது மக்கள் சார்பாகவும் அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பது பாராளுமன்ற அரசியலில் புதுமையான விடயமல்ல. அதே கட்சி அரசு கட்டில் ஏறியதும் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு பின் நிற்பதில்லை. அதேவேளை, எதிர்த்தரப்பிற்கு வந்த முன்னைய ஆளும் கட்சி மக்களுக்காக அழுது விழுந்து எதிர்ப்பிரசாரம் நடத்தும். கடந்த 60 வருடகால பாராளுமன்ற ஆட்சியில் இடம்பெற்று வந்த சங்கீதக் கதிரை விளையாட்டுத்தான் இப்பொழுதும் தொடர்கிறது. நமது நாட்டு மக்களைப் பொறுத்தவரை இந்த விளையாட்டுக்கு நன்கு பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள்.

ஐயா போனால் அம்மா, அம்மா போனால் ஐயா என்ற நிலை இப்போது மாறி இந்த ஐயா போனால் அடுத்த ஐயா வரவேண்டும் என்ற அரசியல் மாயைக்குள் தான் மக்கள் இப்போதும் சிக்குண்டு எதிர்பார்ப்புக்களுடன் இருந்து வருகின்றனர். இந்நிலை ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் உள்ள அனைவருக்கும் வாய்ப்பும் வசதியானதுமாகும்.

இந்தத் துணிவும் நம்பிக்கையும் தான் ஐக்கிய தேசியக் கட்சியை அரசியல் களத்தில் இறங்கி அரசாங்க எதிர்ப்புப் பிரசாரங்களுடன் மக்கள் மத்திக்குச் செல்ல வைத்துள்ளது. அவர்களது செயற்பாட்டிற்கு மேலும் வலுச் சேர்ப்பது போன்று அரசாங்கத் தரப்பிலிருந்து முக்கிய அமைச்சுப் பதவி வகித்த மங்கள சமரவீரவும் ஷ்ரீபதி சூரியாராச்சியும் வெளியே வந்து மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி நிற்கின்றனர். ஆரம்பத்தில் அவர்களது வெளியேற்றத்தை ஜனாதிபதியும் ஆளும் பிரதான கட்சியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. புதிய கட்சி அமைத்து தீவிரமாகச் செயல்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி (மக்கள் பிரிவு) என்ற கட்சியைத் தொடங்கியமை சிந்திக்க வைத்துள்ளது. இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதியும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முதுச உரித்துடையவருமான சந்திரிகா அம்மையார் இருப்பாரேயானால் அது ஜனாதிபதியின் எதிர்பார்ப்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். அதனை முன் உணர்ந்தே ஜனாதிபதி சந்திரிகாவை குளிர்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதில் ஒன்று அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் பரிவாரங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டபோது ஜனாதிபதி தலையிட்டு அதனை தடுத்து உரிய எண்ணிக்கைக்கு உத்தரவிட்டார் என்பது குறிப் பிடத்தக்கது.

எவ்வாறாயினும் மங்கள - சூரியாராச்சியின் அரசியல் பயணம் ரணிலுடன் கைகோர்த்துச் செல்லும் ஒன்றாக விருத்திபெற்று நிற்கிறது. இரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாகச் சந்தித்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் செயல்பட ஒப்புக்கொண்டு அதற்கான வேலைகளை முன்னெடுக்க இணங்கியுள்ளனர். மங்கள - சூரியாராச்சி அணி திரும்பி வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போய்விட்டது. இதனால், அரசாங்கத்தரப்பில் சற்று சலசலப்பு அதிகரித்துள்ளது. ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை யாராலும் அசைக்க முடியாது என்றும் இப்படி வெளியேறுவது வழமை என்றும் அப்பக்கத்தில் குரல் வைக்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீரவின் தந்தையாரான மகாநாம சமரவீரவும் முன்பு இவ்வாறு தான் பிரிந்து சென்றவர் என்ற வரலாற்றுக் குறிப்பையும் அரசாங்கத்தரப்பு சுட்டிக்காட்டுகின்றது.

இவற்றுடன், ஜனாதிபதி கூறும்போது இனிமேலும் யாராவது அரசாங்கத்தை விட்டு வெளியேறாதவாறு பார்த்துக்கொள்வதற்காக பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடாத்த வேண்டி வரும் என்ற ஒரு சிறிய குண்டையும் போட்டு வைத்துள்ளார். உள்ளதையும் இழக்க வேண்டி வந்திடுமோ என்ற அச்சத்திலும் அனுபவிக்கும் சுகங்களிலும் மண்விழுந்து விடும் என்பதாலும் எதிர்த்தரப்புப் பற்றி அரசாங்கத் தரப்பினர் நினைக்க மறுக்கும் நிலையே காணப்படுகின்றது. மங்கள - ரணில் கூட்டணி எந்தளவிற்கு முன் செல்லப் போகின்றது என்பதும் அரசாங்கமும் ஜனாதிபதியும் எடுக்கும் எதிர் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்து கொள்ளப் போகின்றது என்பதும் சற்றுப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியதொன்றாகும்.

அதேவேளை, மகிந்த சிந்தனைக்கு வடிவம் கொடுத்த ஜே.வி.பி. இப்போது தன்னை முற்று முழுதாக அரசாங்கத்திடமிருந்து வேறுபடுத்தி மக்கள் இரட்சகனாகக் காட்சி கொடுக்க ஆரம்பித்து விட்டது. புதிய தேசிய முன்னணி (நவ ஜாதிக பெரமுனை) என பெயரிட்டு தனது தலைமையின் கீழ் ஆட்சி அமைக்க வருமாறு அறை கூவி அழைத்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நாட்டை வழி நடாத்தமாட்டாது எனக் கூறும் ஜே.வி.பி. எத்தகைய ஆட்சியை நடாத்தப் போகின்றது என்பது புரியாத புதிரல்ல. மகிந்த சிந்தனை மூலம் ஒற்றை ஆட்சியையும் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வின்மையையும் வற்புறுத்திய ஜே.வி.பி. நாட்டை எவ்வாறு கொண்டு செல்லும் என்பது மக்கள் கேட்கும் கேள்வியாகும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு முன்னணியை அமைப்பதும் சந்தர்ப்பவாதக் கூட்டுச் சேர்வதும் ஜே.வி.பி.க்கு பழக்கப்பட்ட ஒன்றேயாகும். ஆனால், தான் அணிந்துள்ள இடதுசாரி வேடத்திற்கு ஏற்றவாறான ஒரு குறைந்த பட்சக் கொள்கைகளையாவது கொண்டிருப்பது அவர்களிடம் இல்லாத ஒன்றாகும்.

அத்தகையவர்களால் மூன்றாவது அணி எனக் கூறி அரசியலில் மங்கிப் போன நிறத்திற்கு மீளச் சாயம் ஊட்ட முற்படுவது கேலிக் குரியதாகும்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் கட்சிகள் தங்களுக்குள் பிளவுபட்டிருந்தாலும், தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டைச் சிதைப்பதில் என்றுமே ஒன்றுபட்டுத்தான் உள்ளனர். எனவே சிங்கள அரசாங்கங்களில் யார் வந்தாலும் தமிழர் நிலையில் பெரும் மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.