Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் இறுதிப் போர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் இறுதிப் போர்!

-விதுரன்-

தெற்கில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடிகளை தவிர்க்க, அரசு தனது முழுக் கவனத்தையும் கிழக்கில் யுத்தமுனையில் செலுத்தியுள்ளது. அரசை கவிழ்ப்பதென்ற நோக்குடன் எதிரணிகள் ஒன்றுபட்டு வருகையில் யுத்தமுனையில் கிடைக்கும் சில வெற்றிகள் மூலம் அந்த எதிர்ப்புகளை சமாளித்து மக்கள் கவனத்தை திசை திருப்ப அரசு முற்படுகிறது.

குடும்பிமலையையும் (தொப்பிகல) புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றி விடுவதன் மூலம் கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக விரட்டிவிடுவோமென அரசு பெரும் பிரசாரம் செய்து வருகிறது. கிழக்கில் புலிகள் வசமிருக்கும் நிலப் பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் புலிகளை கிழக்கிலிருந்து முற்றாக அகற்றிவிட முடியுமெனவும் அரசு கருதுகிறது.

தெற்கில் அரசுக்கெதிராக எதிரணிகள் ஒன்று திரண்டு ஆட்சியை கவிழ்க்க முனைகையில் தென்பகுதி மக்களது கவனமும் அந்தப் பக்கமே திரும்பியுள்ளது. மக்களின் இந்தக் கவனத்தை திசை திருப்ப வேண்டுமானால் யுத்தமுனையில் சில அவசர வெற்றிகளைப் பெற்றுவிட வேண்டுமென அரசு தீவிரம் காட்டுகிறது.

கிழக்கில் தற்போது குடும்பிமலைப் பகுதியிலேயே புலிகள் நிலைகொண்டுள்ளனர். புலிகளிருக்கும் பகுதியிலிருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தூரத்தில் படையினர் நிலைகொண்டுள்ளனர். தெற்கில் அரசுக்கெதிராக எதிரணிகளின் நடவடிக்கைகள் தீவிரமடையும் போது கிழக்கில் படை நடவடிக்கைகளும் தீவிரமடைகிறது.

தற்போதைய நிலையில் வடக்கில் பாரிய படைநகர்வுகளை மேற்கொள்வதென்பது சாத்தியப்படாததொன்று. கடந்த மாதம் (ஜூன் 2 ஆம் திகதி) வவுனியாவுக்கு மேற்கே விளாத்திக்குளம் பகுதியில் நடைபெற்ற சமரில் படையினர் பேரிழப்பைச் சந்தித்தனர். இந்தச் சமரில் ஒரு பட்டாலியன் படையே (800 இற்கும் மேற்பட்டோர்) களமுனையிலிருந்து அகற்றப்பட்டதால் வடக்கில் மீண்டும் பாரிய இழப்புகளுக்காக அரசு அவசரப்படமாட்டாது.

ஆனால், கிழக்கில் குடும்பிமலையையும் கைப்பற்றிவிட்டால் கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக அகற்றிவிட்டதாக தெற்கில் பெரும் பிரசாரங்களை மேற்கொள்ள முடியும். அத்துடன், கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தலையும் நடத்தி அதன் மூலம் தமிழ் தரப்பை பலவீனமடையச் செய்துவிட வேண்டுமென்பதில் அரசு அக்கறை கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில் அரசுக்கெதிராக, எதிரணிகள் ஒன்று திரளத் தொடங்கியிருக்கையில் அரசியல் தோல்விகளைத் தவிர்க்கவும் மக்களது கவனத்தை திசை திருப்பவும் அரசுக்கு இராணுவ வெற்றிகள் அவசியமாகிறது. இதனாலேயே குடும்பிமலையை, கைப்பற்றும் தாக்குதலை அரசு தீவிரப்படுத்தி வருவதுடன் அதுகுறித்த பிரசாரங்களும் பெருமளவில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குடும்பிமலையையும் படையினர் கைப்பற்றிவிட்டால் கிழக்கில் தேர்தல்களை நடத்த முடியும். அந்தத் தேர்தல்கள் மூலம் கிழக்கை வடக்கிலிருந்து பிரித்துவிட்டதாகவும் இதன் மூலம் தமிழீழமென்ற புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை இந்த அரசு முற்றாகவே நிராகரித்து, இலங்கையில் பிரிவினையை இல்லாது செய்துவிட்டதாகவும் மார்தட்ட முடியுமெனவும் அரசு தரப்பினர் கருதுகின்றனர்.

தெற்கில் எழுந்துவரும் தீவிர எதிர்ப்பலைகளைச் சமாளிக்க வடக்கு - கிழக்கில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதனால் தான் குடும்பிமலைச் சமருக்கு அரசு பெரும் முக்கியத்துவம் கொடுத்தும் வருகிறது.

வடக்கு போர்முனை படையினருக்கு மட்டுமன்றி அரசுக்கும் வாய்ப்பின்றியே உள்ளது. ஆனால், கிழக்கை கைப்பற்றிவிட்டால், இனி வடக்கை கைப்பற்றும் முயற்சிகளில் அரசு இறங்கப்போகின்றது. வடக்கையும் கைப்பற்றும் சாத்தியமேற்பட்டால் இலங்கை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாமென பெரும் பிரசாரங்களை மேற்கொள்ளவும் அரசு முயற்சிக்கிறது.

கிழக்கில் குடும்பிமலை பகுதியில் நிலைகொண்டுள்ள புலிகள் ஆட்லறி மற்றும் நீண்ட தூர மோட்டார்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில் புலிகள் வசமுள்ள நீண்டதூர ஆயுதங்களை செயலிழக்கச் செய்வதன் மூலமே கிழக்கில் புலிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியுமென அரசு கருதுகிறது.

இதனால், புலிகள் வசமுள்ள நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றி விடுவதன் மூலம் புலிகள் வசமுள்ள கனரக ஆயுதங்களை இல்லாதொழித்து அவற்றால் ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்த்து விட வேண்டுமென அரசு முனைகிறது.

கிழக்கில் கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி மாவிலாறு பகுதியில் பாரிய படை நடவடிக்கை தொடங்கும் முன் கிழக்கில் மிகப்பெரும் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் கடற்புலிகள் பல தளங்களுடன் மிகவும் வலுவாயிருந்தனர். திருமலை துறைமுகத்தையும் கடற்படைத் தளத்தையும் எந்த நேரமும் அச்சுறுத்தும் வகையில் புலிகளின் ஆட்லறித் தளங்களும் சம்பூரில் இருந்தன.

ஆனால், அதன் பின்னரான படை நடவடிக்கைகள் மூலம் புலிகள் வசமிருந்த நிலப்பிரதேசங்களை படையினர் கைப்பற்ற, திருமலையில் மட்டுமல்லாது பின்னர் மட்டக்களப்பிலிருந்தும் கடற்புலிகளின் தளங்களும் கனரக ஆயுதத் தளங்களும் இல்லாது போய்விட்டன.

அத்துடன், கிழக்கில் பெருமளவு நிலப்பிரதேசம் புலிகள் வசமிருந்த போது, புலிகள் மரபுவழிச் சமரிலீடுபடும் படையணியுடனிருந்தனர். புலிகள் வசமிருந்த நிலப்பிரதேசங்களை கைப்பற்றியதும் புலிகள் இன்று அங்கு, மரபுவழிச் சமருக்கான படையணி என்ற நிலையிலிருந்து மாறி கெரில்லா படையணியாகிவிட்டனர்.

இதன் மூலம் கிழக்கில் அவர்களால் இனிமேல் பெருமெடுப்பில் செயற்பட முடியாதெனவும் கனரக ஆயுதங்கள் அவர்களிடமில்லையெனவும் படைமுகாம்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வல்லமை இல்லையெனவும் கருதும் அரசு, புலிகளின் கெரில்லா பாணித் தாக்குதலை சமாளித்துவிட்டால் போதுமென நினைக்கிறது.

கிழக்கில் புலிகள் வசமிருந்த நிலப்பிரதேசங்களை கைப்பற்றியதன் மூலம் கிழக்கிலிருந்து கடற்புலிகளை முற்றாக இல்லாது செய்தது போல் வடக்கிலும் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றிவிட்டால் கடற்புலிகளை முழுமையாகவே இல்லாது செய்துவிடலாமெனவும் கடற்புலிகள் இல்லையேல், புலிகளுக்கான ஆயுத விநியோகமும் இல்லாது போய்விடுமெனவும் அரசு சிந்திக்கத் தொடங்கியுள்ளது.

புலிகள் வசம் நிலப்பிரதேசங்களிருக்கும் போதுதான் அவர்கள் மரபுவழிப் படையணியாகச் செயற்பட முடியும். அவர்களது பிடியிலுள்ள நிலப்பிரதேசங்களை கைப்பற்றிவிட்டால் அவர்கள் கெரில்லாப் படையணியாகிவிடுவதுடன் தற்போது அவர்கள் வசமிருக்கும் கடற்படையும் விமானப்படையும் பீரங்கிப் படையணிகளும் இல்லாது போய்விடுமெனவும் அரசு கருதுகிறது.

இதனாலேயே, நாட்டில் அபிவிருத்திப் பணிகளையெல்லாம் சில காலத்திற்கு நிறுத்திவிட்டு ஐம்பதாயிரம் படையினரை முப்படைகளுக்கும் சேர்த்து அதன் மூலம், புலிகளிடமிருந்து கைப்பற்றும் நிலப்பிரதேசங்களை தக்க வைப்பதுடன் தொடர்ந்தும் பாரிய இராணுவ நடவடிக்கைகள் மூலம் புலிகள் வசமுள்ள நிலப்பிரதேசங்களை கைப்பற்றிவிட முடியுமெனவும் அரசு கனவு காண்கிறது.

ஐம்பதாயிரம் படையினரை சேர்த்துவிட முனையும் அரசு, கடந்த இரண்டு வருடத்தில் பத்தாயிரம் இராணுவத்தினரை இழந்துள்ளது. இந்தப் பத்தாயிரம் பேரும் இராணுவத்தை விட்டு தப்பியோடியுள்ளனர். ஒருபுறம் படைகளுக்கு ஆட்களை சேர்க்க முயலும் அதேநேரம், மறுபுறம் படைகளிலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இராணுவத்தில் ஒரு வருடம் சேருவோரின் தொகையை விட தப்பியோடுவோரின் தொகை அதிகமென்பது அரசுக்கு மிகவும் கசப்பான செய்தியாகும்.

இந்த நிலையில் கிழக்கில் தற்போது தனது முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ள அரசு கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிவிட்டால் அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த முயலும். கிழக்கில் எந்தவொரு தேர்தலையும் நடத்தக் கூடிய சூழ்நிலை தற்போதில்லையென்பது தேர்தல் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக வடக்கு - கிழக்கு இணைந்த தீர்வொன்றை முன்வைப்பதை அல்லது அவ்வாறான தீர்வொன்றைக் காண்பதை தடுக்க வேண்டுமானால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதனை தனி நிர்வாகமாக்கிவிட வேண்டுமென்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது.

அதேநேரம், கிழக்கில் தேர்தல் நடைபெறும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் அது வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்துவதாயிருக்குமென்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கில் படையினரை பெரும் பொறிக்குள் சிக்கவைத்து விட்டதாகவே புலிகள் கூறுகின்றனர். அடுத்த படை நடவடிக்கையும் அதற்கான தங்கள் பதில் நடவடிக்கையும் எப்படியிருக்குமென்பதையும் அவர்கள் விரைவில் உணர்த்துவார்களென்பதே உண்மை.

எது எங்கே எப்போது

10 000 படையினர் படையிலிருந்து தப்பியோடியதாக கொழும்பு ஊடகம் தெரிவித்திருந்தது. இவர்கள் இனைவரும் இறந்திருப்பார்களென்றே இப்பகுதியில் கருத்தெழுதியிருந்தேன். இந்தக் கட்டுரையைப் வாசிக்கும்போது அது உண்மையாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். இறுதிப்போர் எங்கு என்பதை எவரும் ஆமூரூடம் கூற முடியாது. அதைத் தீர்மானிப்பது ஒரேஒரு சக்திதான். சூழ்நிலைகள் அவ்வாறானதொரு தேற்றப்பாட்டை ஏற்படுத்துவது போன்று காணப்படுவதால் இறுதிப்போர் அங்கு நடைபெறும் என்று கருதிவிட முடியாது. இறுதிப்போர் அதற்கான களச்சூழ்நிலை எங்கோ ஒரு இடத்தில் தோற்றுவிக்கப்படும். அதுவே இறுதிப்போராக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.