Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டை பிரித்தாவது இனப்பிரச்சினையை தீர்க்குமாறு சர்வதேசம் கூறும் நிலை உருவாகும்: ரணில் எச்சரிக்கை.

Featured Replies

நாட்டை பிரித்தாவது இனப்பிரச்சினையை தீர்க்குமாறு சர்வதேசம் கூறும் நிலை உருவாகும்: ரணில் எச்சரிக்கை.

இலங்கையின் இன்றைய நிலைமைகளை அவதானிக்கும்போது சர்வதேசம் வெறுப் படையும் போக்கே காணமுடிகிறது. இந்த நிலை தொடர்ந்தால் எமக்கு எதிர்காலம் இல்லாத நிலை உருவாகலாமெனத் தெரிவித் திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போகிற போக்கைப் பார்த்தால் ஒருநாள் சர்வதேசம் நாட்டை பிரித்துக் கொடுத்தேனும் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கட்டாயப் படுத்தப்படலாமெனவும் சுட்டிக்காட்டி யுள்ளார்.

எதியோப்பியா, யூகோஸ்லாவியா, இந்தோனேசியாவின் திமோர் போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட நிலை எமது நாட்டுக் கும் ஏற்படக்கூடிய அபாய அச்சுறுத் தல் உருவாகலாமெனவும் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு இன்று அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. அதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரைச் சுற்றியிருக்கும் குழுவினருமே ஏற்க வேண்டும். என்றுமில்லாத விதத்தில் நாட்டில் இன்று ஊழலும் வன்முறையும் மனித உரிமை மீறல்களும் தலை விரித்தாடுகின்றன.

மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கமும் அதனுடன் இணைந்து செயற்படும் கருணா அணியும் பதில் கூற வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது. அதேசமயம் விடுதலைப் புலிகளும் ஒரு காரணமென்பதையும் எம்மால் மறுக்க முடியாதுள்ளது.

ஊழல், வன்முறை, அராஜகம், மனித உரிமை மீறல்களால் நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர விடுவதா அல்லது புத்திஜீவிகளான பொறுப்பு மிக்க நீங்கள் ஒன்றுபட்டு தடுத்து நிறுத்துவதா என்பதையிட்டு சிந்திக்க முன்வர வேண்டும்.

நாட்டின் இன்றைய அவலநிலையை பட்டியல் போட்டு சுட்டிக்காட்டினாலும் கூட அரசாங்கம் வாளாவிருக்கின்றது. பொறுப்புள்ள அரசு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதை தட்டிக் கேட்டால் அரசுக்கெதிரான தீய சக்திகள் என்று எம்மீது வசைபாட முற்படுகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. எனவே, மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை அரசுக்கு பிரதான பொறுப்புள்ளது. இன்று நடப்பதோ அந்த மனித உரிமைகள் சாசனத்தை உதாசீனம் செய்து அரசு தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருகிறது.

ஊழல், வன்முறைகளுக்கு எதிராகவும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேசிய மட்டத்தில் நடவடிக்கை இல்லையென்றால் அதனை சர்வதேச மட்டத்துக்குக் கொண்டு செல்வதில் என்ன தவறிருக்க முடியும் எனக் கேட்க விரும்புகின்றேன்.

ஐ.நா. உட்பட சர்வதேசம் இது விடயத்தில் தலையிடுவது தவறாகக் கருதவும் முடியாது.

மனித உரிமை மீறல்கள் இலங்கையில் மேலோங்கி வருவதை ஐ.நா. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டமை தவறானதெனக் கூறுவது வியப்பை அளிக்கின்றது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்றவரே மகிந்த ராஜபக்ஷதான். இந்த வழியை இலங்கைக்குக் காட்டித் தந்தவரே இன்று அதை மறந்து பேசுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாட்டில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறும் கோரியிருந்தது. அரசின் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு சர்வதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் நாளுக்கு நாள் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் கொண்டே போவதைத்தான் காண முடிகிறது.

இலங்கைக்கான உதவிகளை தடை செய்யுமாறு நாம் சர்வதேசத்தை வலியுறுத்தி வருவதாக அரசு மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. சர்வதேசம் கண்களை மூடிக்கொண்டு செயற்படவில்லை. இலங்கையின் இன்றைய நிலைமைகளை நன்கு அவதானித்த பின்னரே அழுத்தங்களை கொடுக்க முனைந்துள்ளது.

உதவி வழங்கும் நாடுகள் மட்டுமல்ல, உதவி வழங்காத நாடுகள் கூட இலங்கை குறித்து கேள்வி கேட்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் நான் பூட்டான் சென்றிருந்தபோது அந்த நாடு கூட இலங்கையில் என்ன நடக்கின்றது என்ற கேள்வியைத்தான் என்னிடம் கேட்டது.

அராஜகப்போக்கிலிருந்து தேசத்தைப் பாதுகாக்க அனைத்துச் சக்திகளையும் ஒன்று திரட்டி செயற்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம். எமக்கிடையேயான கருத்து முரண்பாடுகளைத் தவிர்த்து அழிவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஒன்றுபடுவதே இன்றைய அவசர தேவையாகும்.

இக்கூட்டத்தில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஜனாதிபதி சட்டத்தரணி சிறிநாத் பெரேரா, டி.எம். சுவாமிநாதன் ஆகியோரும் கருத்துகளை வெளியிட்டனர்.

-Puthinam-

இது சம்பந்தமான அறிவுறுத்தலை இரணிலுக்கு சர்வதேசம் விட்டு இருக்கும்....! தனக்கு வேண்டிய தீர்வு திணிப்பை சர்வதேசத்தை கொண்டு ஏற்படுத்த இருந்த ஜே. ஆரின் மருமகன் இரணிலை ஜனாதிபதியாக்காமல் வெளியேற்றியது தமிழர் செய்த சிறப்பான விடயங்களில் ஒண்று....

நாடு பிரிந்தே ஆக வேண்டும் மாற்று தீர்வுக்கு இடம் இல்லை.

புலிக்கொடி தாய் மண்ணில் சிங்க கொடியோடு சமமாக இலங்கை என்ற தீவில் பறக்கும்.

இப்போ இந்தோனேசியா கொடியுடன் தீமோர் தேசியக்கொடி சமமாக பறக்கவில்லையா? இந்தோனேசிய இராணுவத்தை விடவா சிங்கள இராணுவம் வலிமை பொருந்தியது?

அனைத்து வளங்களையும் ஒருமுகப்படுத்தி வெல்வோம் .

Edited by நேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.