Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகள் உதவ வேண்டும் – உற்பத்தியாளர்கள் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகள் உதவ வேண்டும் – உற்பத்தியாளர்கள் கோரிக்கை

 
IMG_20210519_133456-696x522.jpg
 11 Views

பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகளே உதவுங்கள்  என மன்னார் மாவட்ட பனை கைப்பணி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மன்னார் தலைமன்னார் மாந்தை மற்றும் நானாட்டான் போன்ற பிரதேசங்களில்  நீண்ட காலமாக  பனை ஓலை மூலமாக செய்யப்படுகின்ற கைவினை பொருட்களை சிறு வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றோம். ஆனால் இதன் மூலமாக சொல்லிக்கொள்ளும்படியான வருமானங்களை இன்னும் நாங்கள் பெறவில்லை.

IMG_20210516_113703.jpg

ஆனாலும் நாங்கள் சோர்ந்துவிடாமல் தொடர்ச்சியாக இந்த தொழிலை செய்து வருகின்றோம்.உள்ளூர் உற்பத்திகளாக நாங்கள் செய்து கொண்டு வருவதால் எமக்கான வருமானம் மிகவும் குறைவாக இருக்கின்றது. மேலும் இந்த கொரோனா பயணத் தடை காரணமாக எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

IMG_20210519_133749.jpg

எனவே புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற எமது உறவுகள் தாயகத்தில் செய்யப்படுகின்ற இவ்வாறான பொருட்களை பெற்று நீங்கள் அதை சந்தைப் படுத்தினால் எமக்கு  பெரிய உதவியாக இருக்கும்” என்றனர்.

 

 

https://www.ilakku.org/?p=52324

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ம் பொறுங்கோ இப்ப நாங்கள் உங்கடை விசையமாய்த்தான் வலு பிசியாக இருக்குறம்.நேரம் இருந்தால் உதைப்பற்றி யோசிப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

கொஞ்ம் பொறுங்கோ இப்ப நாங்கள் உங்கடை விசையமாய்த்தான் வலு பிசியாக இருக்குறம்.நேரம் இருந்தால் உதைப்பற்றி யோசிப்பம்.

2009க்கு பின் இன்னுமொரு ஒழுங்கான அரசியல் தலைமையை உருவாக்கியிருந்தால் சகலதும் சுகமாகவே நடந்துகொண்டிருக்கும். எமது மக்களுக்கு உதவ பலர் இருக்கின்றார்கள். முன்னரைப்போல் ஒழுங்கான கட்டமைப்பை உத்தியோக  பூர்வமாக உருவாக்குங்கள்.

நானும் தான் அவ்வப்போது உதவி செய்கின்றேன். படங்களும் கடிதங்களும் அனுப்புகின்றார்கள்.  இருந்தாலும் அன்று போல் இருந்த நம்பிக்கை இன்றில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை கைவினை பொருட்களாக ஓரளவுக்கு மேல் சந்தை படுத்த முடியாது.

ஆனால் இப்போ தானே அழியும் பைகளுக்கு நல்ல கிராக்கி உண்டு. பனை ஓலையை கூழாக்கி தடித்த காகித பைகள் போல பைகள் செய்ய முடியாதா?

3 hours ago, சுவைப்பிரியன் said:

கொஞ்ம் பொறுங்கோ இப்ப நாங்கள் உங்கடை விசையமாய்த்தான் வலு பிசியாக இருக்குறம்.நேரம் இருந்தால் உதைப்பற்றி யோசிப்பம்.

 

2 minutes ago, குமாரசாமி said:

2009க்கு பின் இன்னுமொரு ஒழுங்கான அரசியல் தலைமையை உருவாக்கியிருந்தால் சகலதும் சுகமாகவே நடந்துகொண்டிருக்கும். எமது மக்களுக்கு உதவ பலர் இருக்கின்றார்கள். முன்னரைப்போல் ஒழுங்கான கட்டமைப்பை உத்தியோக  பூர்வமாக உருவாக்குங்கள்.

நானும் தான் அவ்வப்போது உதவி செய்கின்றேன். படங்களும் கடிதங்களும் அனுப்புகின்றார்கள்.  இருந்தாலும் அன்று போல் இருந்த நம்பிக்கை இன்றில்லை.

இங்கே குமாரசாமி அண்ணை சொன்னது மிக சரியானது. நம்பி கொடுக்க ஒரு கட்டமைப்பு இல்லை எனும் போது அவரவர் இயலுமைக்கு ஏற்ப சிறுகத்தான் செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, goshan_che said:

இவற்றை கைவினை பொருட்களாக ஓரளவுக்கு மேல் சந்தை படுத்த முடியாது.

ஆனால் இப்போ தானே அழியும் பைகளுக்கு நல்ல கிராக்கி உண்டு. பனை ஓலையை கூழாக்கி தடித்த காகித பைகள் போல பைகள் செய்ய முடியாதா?

 

இங்கே குமாரசாமி அண்ணை சொன்னது மிக சரியானது. நம்பி கொடுக்க ஒரு கட்டமைப்பு இல்லை எனும் போது அவரவர் இயலுமைக்கு ஏற்ப சிறுகத்தான் செய்ய முடியும்.

இந்த விடயத்தில் நான் விக்கியரை நூற்றுக்கு நூறு வீதம் நம்பியிருந்தேன்.கடைசியிலை அதுவும் கூழ்முட்டை ஆகிப்போச்சுது. 🙃

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இந்த விடயத்தில் நான் விக்கியரை நூற்றுக்கு நூறு வீதம் நம்பியிருந்தேன்.கடைசியிலை அதுவும் கூழ்முட்டை ஆகிப்போச்சுது. 🙃

நானும்தான்.

அவர் மாகாணசபை மூலம் ஒரு நிதியம் ஆரம்பிக்க முயன்றார். முடியவில்லை.

தனியாக அவர் தலைமையில் ஒரு அறகட்டளையாவது தொடங்கி இருக்கலாம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

தனியாக அவர் தலைமையில் ஒரு அறகட்டளையாவது தொடங்கி இருக்கலாம்.

அப்படி தொடங்கியிருந்தாலும் தெற்கு பகுதியினர் சும்மா விட்டிருக்க மாட்டார்கள் என்பது எனது அனுமானம்.

ஏனெனில் அது விருட்சமாகி வேறு வழியை உருவாக்கி விடும் எனும் அச்சம் அவர்களுக்கு வரலாம். வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இந்த விடயத்தில் நான் விக்கியரை நூற்றுக்கு நூறு வீதம் நம்பியிருந்தேன்.கடைசியிலை அதுவும் கூழ்முட்டை ஆகிப்போச்சுது. 🙃

நானும் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.