Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை 40 வீதம் வீழ்ச்சி காணலாம்: ஹிந்துஸ்தான் ரைம்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை 40 வீதம் வீழ்ச்சி காணலாம்: ஹிந்துஸ்தான் ரைம்ஸ்

சிறிலங்கா அரசுக்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித்தரும் உல்லாசப் பயணத்துறை இந்த வருடத்தின் இறுதியில் 40 வீதம் வீழ்ச்சியடையும் நிலையை அடைந்துள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளேட்டில் எழுதப்பட்ட பத்தியில் ஆய்வாளர் பி.கே.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதன் முழு விபரம் வருமாறு:

நடைபெற்று வரும் போர் மற்றும் தலைநகரத்தின் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மீளும் பொருட்டு உடனடியாக அதிகளவான சலுகைகளை அளிக்கும் படி அரசிடம் உல்லாசப் பயணத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவும், பணியாளர்களுக்கு ஊதியங்களை வழங்குவதற்கு உதவியாகவும் தமக்கு வட்டிகள் அற்ற கடன் வசதிகள், இரு வருடங்களுக்குப் பிற்பாடு கடன்களை மீளச் செலுத்தும் சலுகை, வரி வழங்குவதில் தற்காலிக தள்ளுபடி போன்ற சலுகைகளை வழங்க வேண்டும் என உல்லாசப்பயணத்றை விதிகள் சபை, உள்ளூர் உல்லாசப் பயணத்துறை ஏற்பாட்டாளர் சபை போன்றவை உல்லாசப் பயணத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

கொழும்பில் உள்ள விடுதிகளின் (3,209 அறைகளில்) 40 தொடக்கம் 46 வீதமானவற்றிலேயே பயணிகள் தங்கியுள்ளனர். அதை சூழ உள்ள விடுதிகளில் 25-க்கும் 40 வீதத்திற்கும் இடைப்பட்ட அண்ணளவான வீதத்திலேயே பயணிகள் தங்கியுள்ளனர். உல்லாசப் பயணிகளை கவர்வதற்காக பல விடுதிகள் தமது விலையை குறைத்துள்ளன. கொழும்பில் இருந்து காலி வரையிலான தெற்குக் கரையில் அமைந்துள்ளவற்றில் சில விடுதிகள் வார இறுதி நாட்களில் மட்டும் இயங்குகின்றன.

உல்லாசப் பயணத்துறையினால் ஈட்டப்படும் வரிகளும் 20 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரையிலான காலப்பகுதியில் புராதன கலாச்சார பகுதிகளுக்கான நுழைவுக்கட்டண வரி அறவீடுகளும் 2006 ஆம் வருடத்துடன் ஒப்பிடும் போது 48 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 1,500 விடுதி பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர். 2004 ஆம் வருடம் ஏற்பட்ட ஆழிப்பேரலை பேரனர்த்தத்தின் போது உல்லாசப்பயணத்துறை பேரழிவை சந்தித்திருந்தது. எனினும் அது 7.5 பில்லியன் ரூபாய்கள் செலவீட்டில் புனரமைக்கப்பட்டது.

ஆனால், அது நன்மையை அடைவதற்கு முன்னர் போர் ஆரம்பமாகி விட்டது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகிய போர் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இருந்த போதும் விடுதி மற்றும் உல்லாசப் பயணத்துறை ஏற்பாட்டாளர் சபையினர் போரை நிறுத்தும் படி கோரவில்லை நிதி உதவிகளை அளிக்கும் படியே கோரியுள்ளனர். ஆழிப்பேரலைக்கு பின்னர் இந்த துறையின் பாதிப்புக்கு பிரதான காரணம் போரே என்றால் அதனை மறுக்க முடியாது.

அமைதிக்கான வருடங்களில் லாபமடைந்த இந்த துறை தற்போது போரினால் பாதிப்படைந்துள்ளது. 2002 ஆம் வருடம், போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்தான பின்னரான முதலாவது வருடத்தில் உல்லாசப் பயணத்துறை 31 வீத வளர்ச்சியை அடைந்ததாக பார்ட்லீற் மலோறி பங்கு தரகர் நிறுவனம் தனது இறுதியான அறிக்கையில் தெரிவித்துள்ளது. 500,000 உல்லாசப் பிரயாணிகள் 2003 ஆம் வருடம் வருகை தந்தது அதுவே முதற்தடவையாகும். இந்த வளர்ச்சி 65 வீதம் வரை எட்டியிருந்தது. 2006 ஆம் வருடம் இந்த துறையின் வருமானம் 410 மில்லியன் டொலர்களாகும்.

இருந்த போதும் நாட்டின் தற்போதைய நிலை இந்த துறையில் கடுமையான பாதிப்பை எற்படுத்தியுள்ளது. கடந்த 5 வருடங்களில் இந்த வருடம் விடுதிகளில் பயணிகளின் பதிவுகள் மிகவும் குறைவான நிலையை அடைந்துள்ளன. 2006 ஆம் வருடம் 1.6 வீத வளர்ச்சியை அது கண்டிருந்தது. ஆனால் 2007 ஆம் வருடம் அது 23.3 வீத வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வருடத்தின் முடிவில் 40 வீத வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

40 வீத பயணிகளின் தங்கும் நிலையிலும் தம்மால் இயங்க முடியும் என பெரிய விடுதிகள் எண்ணுகின்ற போதிலும், சிறிய விடுதிகளின் நிலமை மோசமாக உள்ளது. பல சிறிய விடுதிகள் தமது பணியாளர்களுக்கு சம்பளங்களை கொடுப்பதற்கு கடன்களை பெற்று வருகின்றன.

ஆழிப்பேரலையினாலும், போரினாலும் கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான தெற்கு கரையோரத்தில் உல்லாசப் பயணத்துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தப் பகுதியில் ஏற்படும் தாக்கம் கணிசமானது ஏனெனில் தீவில் உள்ள 14,218 அறைகளில் (2006 ஆம் வருட கணக்கெடுப்பு) தெற்கு கரையோரம் 5,112 அறைகளை அது கொண்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.