Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரப் பிரிவும் சமநிலை சட்ட வரையறையும்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


அதிகாரப் பிரிவும் சமநிலை சட்ட வரையறையும்-பா.உதயன் 
——————————————————————————————————————

நீதி, நிர்வாகம், சட்டம் என் கையை விட எவன் கையிலும் இல்லை.
ஆக்குவதும் நானே அழிப்பதுவும் நானே அந்த லூயிஸ் மன்னனும் நானே என்று  ஒரு கையில் எல்லா அதிகாரத்தையும் வைத்திருந்து சட்டம்,நீதி,நிர்வாகத்திற்கு (executive legislative and judiciary) இடையிலான அதிகாரப் பிரிவும் (separation of power) சமநிலை சட்ட வரையறையும்( checks and balances) இல்லாத விடத்தில் தனி நபர் சுதந்திரமும் இருக்கப் போவதில்லை. இவை அனைத்தும் ஒருவர் கையில் இருந்தால் இது ஓர் சர்வாதிகார ஆட்சியே. (authoritarianism ) ஒரு காலத்தில் அரசனுடைய அதிகாரத்தை குறைப்பதற்காகவும் இதை இல்லாமல் ஆக்குவதற்காகவும் அரசியலமைப்பு முடியாட்சி, பாராளுமன்ற முடியாட்சி அல்லது ஜனநாயக முடியாட்சி பின்பு முழுமையான மக்கள் ஆட்சி என்று அதிகாரங்கள் பகிரப்பட்டன.பெரிய பிருத்தானியாவில் ஏற்பட்ட மாற்றங்களும் பிரஞ்சுப் புரட்சியும் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

இந்த மூன்று துறைகளுக்கு இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பதற்கான நவீன கோட்பாட்டை முதல்  முறையான தோற்றுவித்தவர்  பிரெஞ்சு தத்துவவியலாளர்  மான்டெஸ்கியூ ஆவர். இவரே இந்தத் துறைகளுக்கு இடையிலான அதிகார பிரிவையும் அதிகார சம நிலையையும் இதன் முக்கிய பங்களிப்பையும் விளக்கினார்.அரசியல் விஞ்ஞானத்தில் ஆழமான தத்துவார்த்த சிந்தனை கொண்ட  மார்க்கிய வல்லி,தோமஸ் ஹோப்ஸ், ஜோன் லொக், ஜான் ஜாக் ரூசோ. வோல்ட்டயர், போன்ற அரசியல் வரலாற்றுத் தத்துவவியலாளர் போலவே மான்டெஸ்கியூ என்று அனைவராலும் அறியபட்டவர்.

 நீதியை மதிக்காவிடில் தனி நபர் பாதுகாப்பும் சுதந்திரமும் கேள்விக்குறியே. எந்த மக்களுக்கும் சமத்துவமான சட்டரீதியான நீதி கிடைகாது போனால் அது ஒரு தோல்வியான அரசு என்றே கூற முடியும்(Failed State). அதே வேளை அந்த மக்களின் நன் மதிப்பையும் எதிர் காலத்தில் இந்த அரசு இழந்துவிடும். குற்றம் செய்யாதவர்களை சிறையில் அடைப்பதும் கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதுவும்  நீதிக்கும் சட்டத்துக்கும் புறம்பான செயலாகும்.

 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு இது முற்றிலும் மாறுபட்டு அதை மதிக்காத ஒரு செயலாகும். இங்கே நீதி என்பது கேள்விக்குறியே. சட்டத்தின் ஆட்சி (Rule of law) சரியாக இல்லாவிடில் மக்கள் எங்கே போய் முறையிடுவது எனவே சரியான நீதி கிடைக்கும் என்ற எல்லா நம்பிக்கைகளையும் மக்கள் இழந்து விடுவார்கள். ஜனநாயகம் மக்கள் ஆட்சி எல்லாம் மறைந்து அரசனின் ஆட்சியில் இருக்கும் ஒரு ஆதிக்கம் போல் ஆகிவிடும் நாடு.

மக்களுக்காவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தனக்கு உரிய அதி உச்ச அதிகாரத்தை வைத்துக் கொண்டு சரியான நடை முறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக எடுக்கும் முடிவானது ஒரு சர்வாதிகார ஆட்சியேயாகும்.சட்டவாட்சியின் மூன்று முக்கிய துறைகளான சட்டம் நீதி நிர்வாகம் இந்த மூன்று முக்கிய துறைகளும் தனி தனியாக இயங்கும் அதே வேளை இவைகளுக்கு இடையில் ஒரு சட்ட சமநிலை  காணப்பட வேண்டும் ( Balance of power). நீதித் துறையோ நிர்வாகத் துறையோ அல்லது சட்டவாக்கத் துறையோ அரசியல் அமைப்புக்கு முரணாகவோ அல்லது பிழையான ஒரு தீர்ப்பை வழங்கினால் ஒன்றை ஒன்று அதிகாரம் செலுத்தக் கூடிய வகையில் அன்றி சமதத்துவமான ஒரு சட்ட நடைமுறையை பின் பற்ற வேண்டும்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஸ்ரீ லங்காவில் இந்த மூன்று துறைகளும் சுதந்திரமாக இயங்குவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.நீதித்துறையில் இருந்து நிர்வாக துறை வரையிலும் அரசியல் அமைப்பு ரீதியிலான சட்ட பிரிவுகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வருவதை பார்க்கிறோம்.அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குழந்தைகளின் கொலையாளிக்கும் இன்னும் ஒரு மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருக்கிறார்.

இது இலங்கையின் நீதித் துறையின் இருப்பையே சவாலுக்கு உட்படுத்தி இருக்கிறது.தனது அதிகாரத்தை ஜனாதிபதி முழுமையாக துஷ்பிரயோகம் செய்திருப்பதாக சட்டத் துறை வல்லுனர்களால் கண்டனத்துக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்.சட்டமும் நீதியும் ஒழுங்கும் சீர்குலையும் போது மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே முக்கியம். இப்படியே அமைதியாக இருப்பார்களேயானால் இந்த நாட்டின் எதிர் காலம் என்னவாகும்.எந்த வித மாற்றங்களையும் விரும்பாதவரையில் இந்த நாட்டினதும் மக்களினதும் எதிர் காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும்.நாடு கூட ஒரு சர்வாதிகார நிலையை நோக்கி நகர்ந்து தோல்வியடைந்த நாடக(Failed State) இருக்கப் போகிறதா என்பதை காலம் பதில் சொல்லும்.

பா.உதயன் ✍️

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, uthayakumar said:

ஒரு காலத்தில் அரசனுடைய அதிகாரத்தை குறைப்பதற்காகவும் இதை இல்லாமல் ஆக்குவதற்காகவும் அரசியலமைப்பு முடியாட்சி, பாராளுமன்ற முடியாட்சி அல்லது ஜனநாயக முடியாட்சி பின்பு முழுமையான மக்கள் ஆட்சி என்று அதிகாரங்கள் பகிரப்பட்டன.பெரிய பிருத்தானியாவில் ஏற்பட்ட மாற்றங்களும் பிரஞ்சுப் புரட்சியும் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

மேற்குலக  இந்த சட்ட வரைபுகள் தென் ஆசியாவுக்கு வேண்டியதில்லை என சீனா விரும்புகிறது "ஒரு கட்சி ஒரு தலமை" என்ற ஆட்சி முறையை அமுல் படுத்த சீனா முயல்கிறது அதற்காக தென் ஆசியா நாடுகளில் பணத்தை இறைக்கின்றது சீனா....அதில் வெற்றியும்  அடைந்து வருகிறது...வறுமை ஒழிப்பு அபிவிருத்தி இரண்டுமிருந்தால் மக்கள்  ஜனநாயகத்தை மறந்து சர்வாதிகார   ஆட்சிக்கு வாழ பழகிவிடுவார்கள் என சீனா சித்தாந்த வாதிகள் நினைக்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, uthayakumar said:


அதிகாரப் பிரிவும் சமநிலை சட்ட வரையறையும்-பா.உதயன் 
——————————————————————————————————————

நீதி, நிர்வாகம், சட்டம் என் கையை விட எவன் கையிலும் இல்லை.
ஆக்குவதும் நானே அழிப்பதுவும் நானே அந்த லூயிஸ் மன்னனும் நானே என்று  ஒரு கையில் எல்லா அதிகாரத்தையும் வைத்திருந்து சட்டம்,நீதி,நிர்வாகத்திற்கு (executive legislative and judiciary) இடையிலான அதிகாரப் பிரிவும் (separation of power) சமநிலை சட்ட வரையறையும்( checks and balances) இல்லாத விடத்தில் தனி நபர் சுதந்திரமும் இருக்கப் போவதில்லை. இவை அனைத்தும் ஒருவர் கையில் இருந்தால் இது ஓர் சர்வாதிகார ஆட்சியே. (authoritarianism ) ஒரு காலத்தில் அரசனுடைய அதிகாரத்தை குறைப்பதற்காகவும் இதை இல்லாமல் ஆக்குவதற்காகவும் அரசியலமைப்பு முடியாட்சி, பாராளுமன்ற முடியாட்சி அல்லது ஜனநாயக முடியாட்சி பின்பு முழுமையான மக்கள் ஆட்சி என்று அதிகாரங்கள் பகிரப்பட்டன.பெரிய பிருத்தானியாவில் ஏற்பட்ட மாற்றங்களும் பிரஞ்சுப் புரட்சியும் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

இந்த மூன்று துறைகளுக்கு இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பதற்கான நவீன கோட்பாட்டை முதல்  முறையான தோற்றுவித்தவர்  பிரெஞ்சு தத்துவவியலாளர்  மான்டெஸ்கியூ ஆவர். இவரே இந்தத் துறைகளுக்கு இடையிலான அதிகார பிரிவையும் அதிகார சம நிலையையும் இதன் முக்கிய பங்களிப்பையும் விளக்கினார்.அரசியல் விஞ்ஞானத்தில் ஆழமான தத்துவார்த்த சிந்தனை கொண்ட  மார்க்கிய வல்லி,தோமஸ் ஹோப்ஸ், ஜோன் லொக், ஜான் ஜாக் ரூசோ. வோல்ட்டயர், போன்ற அரசியல் வரலாற்றுத் தத்துவவியலாளர் போலவே மான்டெஸ்கியூ என்று அனைவராலும் அறியபட்டவர்.

 நீதியை மதிக்காவிடில் தனி நபர் பாதுகாப்பும் சுதந்திரமும் கேள்விக்குறியே. எந்த மக்களுக்கும் சமத்துவமான சட்டரீதியான நீதி கிடைகாது போனால் அது ஒரு தோல்வியான அரசு என்றே கூற முடியும்(Failed State). அதே வேளை அந்த மக்களின் நன் மதிப்பையும் எதிர் காலத்தில் இந்த அரசு இழந்துவிடும். குற்றம் செய்யாதவர்களை சிறையில் அடைப்பதும் கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதுவும்  நீதிக்கும் சட்டத்துக்கும் புறம்பான செயலாகும்.

 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு இது முற்றிலும் மாறுபட்டு அதை மதிக்காத ஒரு செயலாகும். இங்கே நீதி என்பது கேள்விக்குறியே. சட்டத்தின் ஆட்சி (Rule of law) சரியாக இல்லாவிடில் மக்கள் எங்கே போய் முறையிடுவது எனவே சரியான நீதி கிடைக்கும் என்ற எல்லா நம்பிக்கைகளையும் மக்கள் இழந்து விடுவார்கள். ஜனநாயகம் மக்கள் ஆட்சி எல்லாம் மறைந்து அரசனின் ஆட்சியில் இருக்கும் ஒரு ஆதிக்கம் போல் ஆகிவிடும் நாடு.

மக்களுக்காவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தனக்கு உரிய அதி உச்ச அதிகாரத்தை வைத்துக் கொண்டு சரியான நடை முறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக எடுக்கும் முடிவானது ஒரு சர்வாதிகார ஆட்சியேயாகும்.சட்டவாட்சியின் மூன்று முக்கிய துறைகளான சட்டம் நீதி நிர்வாகம் இந்த மூன்று முக்கிய துறைகளும் தனி தனியாக இயங்கும் அதே வேளை இவைகளுக்கு இடையில் ஒரு சட்ட சமநிலை  காணப்பட வேண்டும் ( Balance of power). நீதித் துறையோ நிர்வாகத் துறையோ அல்லது சட்டவாக்கத் துறையோ அரசியல் அமைப்புக்கு முரணாகவோ அல்லது பிழையான ஒரு தீர்ப்பை வழங்கினால் ஒன்றை ஒன்று அதிகாரம் செலுத்தக் கூடிய வகையில் அன்றி சமதத்துவமான ஒரு சட்ட நடைமுறையை பின் பற்ற வேண்டும்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஸ்ரீ லங்காவில் இந்த மூன்று துறைகளும் சுதந்திரமாக இயங்குவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.நீதித்துறையில் இருந்து நிர்வாக துறை வரையிலும் அரசியல் அமைப்பு ரீதியிலான சட்ட பிரிவுகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வருவதை பார்க்கிறோம்.அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குழந்தைகளின் கொலையாளிக்கும் இன்னும் ஒரு மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருக்கிறார்.

இது இலங்கையின் நீதித் துறையின் இருப்பையே சவாலுக்கு உட்படுத்தி இருக்கிறது.தனது அதிகாரத்தை ஜனாதிபதி முழுமையாக துஷ்பிரயோகம் செய்திருப்பதாக சட்டத் துறை வல்லுனர்களால் கண்டனத்துக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்.சட்டமும் நீதியும் ஒழுங்கும் சீர்குலையும் போது மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே முக்கியம். இப்படியே அமைதியாக இருப்பார்களேயானால் இந்த நாட்டின் எதிர் காலம் என்னவாகும்.எந்த வித மாற்றங்களையும் விரும்பாதவரையில் இந்த நாட்டினதும் மக்களினதும் எதிர் காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும்.நாடு கூட ஒரு சர்வாதிகார நிலையை நோக்கி நகர்ந்து தோல்வியடைந்த நாடக(Failed State) இருக்கப் போகிறதா என்பதை காலம் பதில் சொல்லும்.

பா.உதயன் ✍️

நல்லதொரு அலசி ஆராய்ந்த ஆக்கம் .👍  பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👌 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.