Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் தரை, கடல், வான் தாக்குதல்களை படையினர் ஒரு மாதத்திற்குள் முடக்கியுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தரை, கடல், வான் தாக்குதல்களை படையினர் ஒரு மாதத்திற்குள் முடக்கியுள்ளனர் வீரகேசரி நாளேடு

தொப்பிகலை காட்டு பகுதியில் படையினர் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு புலிகளை விரட்டியடித்து அப்பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். கிழக்கில் மட்டுமல்லாது பொதுவாகவே புலிகளின் வான், கடல் மற்றும் தரைவழி தாக்குதல்களை படையினர் ஒரு மாதத்திற்குள் முடக்கியுள்ளனர் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றில் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்திற்குள் படைத் தரப்பில் 35 பேரும் பொதுமக்கள் 30 பேரும் பலியாகியுள்ளனர். அத்துடன் படைத் தரப்பில் 161 பேரும் பொதுமக்கள் 18 பேரும் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அவசரக் காலச் சட்ட நீடிப்பு விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

படையினர் தொப்பிகல காட்டு பகுதியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு புலிகளின் முகாம்களை தாக்கியழிப்பதுடன் புலிகளின் பல முகாம்களை படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.அது மட்டுமல்லாது புலிகளுக்கு உணவு, மருந்து வழங்கும் பாதை மூடப்பட்டதனால் புலி பயங்கரவாதிகள் தொப்பிகலையிலிருந்து பின்வாங்கியுள்ளனர். இன்னும் பின்வாங்கி வருகின்றனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் இதேவேளை சாதாரண பொது மக்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் மிக கவனமாகவே இருக்கின்றது. இதன் பிரகாரமே செயற்படுகின்றது.

அதேபோல் அரசாங்கம் கிழக்கில் மீன் பிடிப்பதற்கு விதித்திருந்த தடையை நீக்கி மீன்பிடிப்பதற்கு இடம் வழங்கியுள்ளது. அது மட்டுமல்லாது பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கில் பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் அதேவேளை கொழும்பில் கேந்திர மையங்கள் மற்றும் முக்கியஸ்தர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட குண்டு லொறிகள் இரண்டை படையினர் கைப்பற்றியுள்ளனர்.

படையினர் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு இன, மத, மொழி பேதங்கள் இன்றி சகலரும் இணைந்து ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அமைதியின் ஆழம் உணர்த்தப்படும் போது பாய்ந்து வரும் புலிகளின் நாற்படைகளும் ரட்ணஸ்ரீக்க சேதிசொல்லும். என்னவென்று, "நாங்கள் எங்கிருந்தோம் என்பதல்ல, நீ உன்னையும் உன் மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்" என்றுதான். உலகம் அறியும் என்ன நடக்கிறதென்று. இவர்கள்தான் அறியாப்பிள்ளைகளாய் உளறுவாயர்களாய் இருக்கின்றார்கள்.

முடக்கவில்லை அமைதியாக இருகீனம் பொறுங்கோ தெரியும் அநேகமாக இந்த மாதத்தில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.