Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கியூபாவில் கம்யூனிஸ அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - சரிகிறதா காஸ்ட்ரோ எழுப்பிய சாம்ராஜ்ஜியம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கியூபாவில் கம்யூனிஸ அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - சரிகிறதா காஸ்ட்ரோ எழுப்பிய சாம்ராஜ்ஜியம்?

13 ஜூலை 2021, 08:02 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கியூபா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

போராட்டக்காரர்களை சிலரை பாதுகாப்புப் படையினர் இழுத்துச் சென்றனர்

கியூபாவில் நெடுங்காலத்துக்குப் பிறகு கம்யூனிஸ அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரச் சரிவு, உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருந்தனர்.

இப்போது கொரோனாவை கையாண்ட விதமும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கியூபாவில் அரசுக்கு எதிராகப் பேசுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதால் அங்கு நடந்திருக்கும் போராட்டங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

 

போராட்டங்களுக்கு எதிராகச் சண்டையிடும்படி கியூபாவின் அதிபர் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

"இங்கு உணவு இல்லை, மருந்து இல்லை, சுதந்திரமும் இல்லை" என போராட்டத்தில் ஈடுபட்ட அலெஜான்ட்ரோ என்பவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

"சர்வாதிகாரம் ஒழியட்டும்", "விடுதலை வேண்டும்" என்பன போன்ற முழக்கங்கள் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது எழுப்பப்பட்டன.

"எங்களுக்குப் பயமில்லை. எங்களுக்கு மாற்றம் தேவை. சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம்," என சான் அன்டோனியாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கற்றவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களுக்கு சீரூடையில்லாத அதிகாரிகள் பலர் உதவி செய்தனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை அழைத்துச் செல்வது போலவும், அடிப்பது போலவும், சிலர் மீது மிளகுத் தூள் தெளிப்பானைப் பயன்படுத்து போலவும் சமூக வலைத்தளங்களில் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன.

பாதுகாப்புப் படையினருடன் நடந்த தள்ளுமுள்ளுவில் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கியூபா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

போராட்டத்தின்போது அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞருக்கு காயம் ஏற்பட்டது

மிகவும் அரிதான போராட்டத்தையடுத்து, கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ்-கேனல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

1962-ஆம் ஆண்டில் இருந்து கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை, "பொருளாதாரத்தை முடக்கும் கொள்கை" என்று அவர் சாடினார்.

நாட்டை வீழ்த்துவதற்காக அமெரிக்கா அமர்த்திய கூலிப்படையினர்தான் இந்தப் போராட்டக்காரர்கள் என்று கூறிய அவர், தனது ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து கியூப புரட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1959-ஆண்டு ஃபிடெல் காஸ்ட்ரோ தலைமையில் நடந்த கியூபாவின் எழுச்சியை அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பிட்டார்.

"புரட்சியாளர்களே! நீங்கள் வீதிக்கு வந்து போராட உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அவர் அறிவித்தார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக வீதிக்கு வந்து சண்டையிடுமாறு தனது ஆதரவாளர்களை அதிபர் தூண்டி விடுவதாக இந்த அறிவிப்பு கவனிக்கப்படுகிறது.

"சண்டைக்கான அழைப்பு மிகவும் கவலையளிக்கிறது" என லத்தீன் அமெரிக்காவுக்கான அமெரிக்காவின் மூத்த அரசுமுறை அதிகாரியான ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கியூபாவுடன் நீண்ட காலமாகக் கசப்பான உறவைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, போராட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.

கியூபாவின் மக்களுக்கு ஆதரவாகக் தாங்கள் இருப்பதாகவும், அரசில் இருப்பவர்கள் வன்முறையில் இருந்து விலகி மக்களின் குரலைக் கேட்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

"கியூப மக்கள் அடிப்பையான மற்றும் உலகளாவிய உரிமைகளை துணிச்சலாகக் கேட்கிறார்கள் " என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சூறையாடப்பட்ட கடைகள்

அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் தலைநகர் ஹவானாவின் தென்மேற்கே உள்ள சான் அன்டோனியோ நகரில் ஒரு ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கியது, விரைவில் நாடு முழுவதும் பரவியது.

கியூபா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பல இடங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களை கவிழ்த்தனர், கடைகளை உடைத்தனர்

பலர் சமூக வலைத் தளங்களில் போராட்டக் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பினர். அரசுக்கும் நாட்டின் அதிபருக்கும் எதிராக போராட்டக்காரர்கள் எழுப்பிய முழக்கங்கள் அதில் காட்டப்பட்டன.

கம்யூனிஸ்ட் அதிகாரிகளால் எளிதில் அடையாளம் காணக்கூடிய சிறிய நகரங்களில்கூட மக்கள் போராட்டத்தில் இறங்கியிருப்பது முக்கியத்துவமானது என்பதுடன், போராட்டத்தை வளர்க்கவும் செய்யவும் என்கிறார் பிபிசி ஆன்லைனின் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பிராந்திய ஆசிரியரான் வனீஸா பக்ஸல்ட்டர்.

இன்னொருபுறம் அரசுக்கு ஆதரவான சிலர் அணிவகுத்தபடி ""இந்த வீதிகள் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு சொந்தமானவை" என்று முழக்கங்களை எழுப்பும் காட்சிகளைக் கொண்ட ஒரு காணொளியை கியூபாவின் வெளியுறவு அமைச்சர் பதிவேற்றியிருக்கிறார்.

கியூபா

பட மூலாதாரம்,VANDRAD

 
படக்குறிப்பு,

கோப்பு

காவல்துறையினரின் வாகனங்கள் கவிழ்க்கப்பட்டதையும், வெளிநாட்டு பணத்தில் பொருள்களை விற்கும் அரசுக்குச் சொந்தமான கடைகள் சூறையாடப்பட்டதையும் சில சமூக ஊடக இடுகைகளில் காண முடிகிறது. கியூப மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு அரசுக் கடைகள் மட்டுமே வழி. ஆனால் அங்கு விலை மிகவும் அதிகம்.

கியூபாவின் பொருளாதாரம் மிகவும நொடிந்த நிலையில் உள்ளது.. கொரோனாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான சுற்றுலா அழிந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரை, கியூபாவின் மற்றொரு முக்கிய வருவாய் ஆதாரம். ஆனால் இந்த ஆண்டு அறுவடை எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது.

கியூபாவின் சர்க்கரை உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அஸ்கியூபா அமைப்பு,எரிபொருள் பற்றாக்குறை மற்றும் இயந்திரங்களின் பழுது உள்ளிட்டவை சர்க்கரை உற்பத்தி குறைந்து போனதற்குக் காரணங்கள் என்று கூறுகிறது.

பொருளாதாரத்தின் முக்கியமான அம்சங்கள் முடங்கி விட்டதால், அரசின் அன்னியச் செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் பற்றாக்குறையை ஈடுசெய்ய வெளிநாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்யவும் முடியாது என்பதுதான் இன்றைய கியூபாவின் நிலை.

1959ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த க்யூபாவின் அரசை வீழ்த்திய புரட்சிக்கு தலைமை தாங்கியவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அந்த புரட்சியில் ராவுல் காஸ்ட்ரோ கமாண்டராக செயல்பட்டார்.

அதன் பிறகு 2006ஆம் ஆண்டு உடல் நலம் மோசமாகும் வரை நாட்டின் அதிபர் பொறுப்பில் இருந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதன்பின் அதிபர் பொறுப்பை 2008ஆம் ஆண்டு தனது சகோதரரிடம் வழங்கினார். ஃபிடல் காஸ்ட்ரோ 2016ஆம் ஆண்டு மரணமடைந்தார். தொடர்ந்து அதிபராக இருந்த ராவுல் காஸ்ட்ரோ கடந்த ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து விலகினார்.

https://www.bbc.com/tamil/global-57815394

  • கருத்துக்கள உறவுகள்

கியூபாவில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது!

கியூபாவில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது!

கியூபாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களும் எதிர்க்கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

‘சட்ட உதவி மையம் கியூபலெக்ஸ்’ தொகுத்த புள்ளிவிபரங்கள், ஞாயிற்றுக்கிழமை சுமார் 100பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறுகின்றன.

அரசாங்க எதிர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சனிக்கிழமை ஹவானாவின் தென்மேற்கே சான் அன்டோனியோ டி லாஸ் பானோஸ் நகரில் ஆரம்பமானது. பின்னர் விரைவில் நாடு முழுவதும் பரவியது.

வீதிகளில் இறங்கியவர்கள் பொருளாதாரத்தின் சரிவு, உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை, விலை உயர்வு மற்றும் கொவிட்-19 தொற்றை அரசாங்கம் கையாளுவது குறித்து கோபப்படுவதாகக் கூறினர்.

சில எதிர்ப்பாளர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து, அடிப்பது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

கியூபாவில் அங்கீகரிக்கப்படாத பொதுக்கூட்டங்கள் சட்டவிரோதமானது மற்றும் போராட்டங்கள் அரிதானவை. இதனிடையே, கியூபாவின் ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவித்தவர்களை ‘கூலிப்படையினர்’ என்று விமர்சித்தார்.

கியூபா மீதான அமெரிக்கத் தடைகள் 1962ஆம் முதல் பல்வேறு வடிவங்களில் நடைமுறையில் உள்ளதே பற்றாக்குறைகளுக்கு காரணம் என ஜனாதிபதி மிகுவல் தியாஸ் கேனல் குற்றம் சாட்டினார்,

கியூபாவுடனான விரோதப் போக்கின் பல தசாப்த கால வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா, கியூபர்களுடன் நிற்பதாகக் கூறியதுடன், வன்முறையிலிருந்து விலகி அதன் மக்களுக்குச் செவிசாய்க்குமாறு அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

‘கியூப மக்கள் அடிப்படை மற்றும் உலகளாவிய உரிமைகளை தைரியமாக வலியுறுத்துகின்றனர்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

https://athavannews.com/2021/1228413

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கியூபா போராட்டம்: பற்றாக்குறையைச் சமாளிக்கப் பயணிகள் கொண்டுவரும் உணவு மற்றும் மருந்துகளுக்கு வரிவிலக்கு

2 மணி நேரங்களுக்கு முன்னர்
கியூபா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பல இடங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களை கவிழ்த்தனர், கடைகளை உடைத்தனர்

கியூபாவுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வரும் பயணிகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படாது எனக் கியூபா அரசு தெரிவித்துள்ளது.

பல பத்தாண்டுகளாக கியூபாவை ஆண்டு வரும் கம்யூனிச அரசுக்கு எதிராக அங்கு மிகப்பெரிய போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விலைவாசி உயர்வு, உணவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிராகவும், கோவிட் தொற்றை அரசு கையாண்ட விதத்தைக் கண்டித்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

இந்தநிலையில், திங்கட்கிழமை முதல் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த வரம்பும் இல்லை என அரசு அறிவித்துள்ளது.

 

இந்த நடவடிக்கை தற்காலிகமானதுதான் என்றும், மிகத் தாமதமான சிறிய நடவடிக்கை என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

புதன்கிழமையன்று அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கூட்டத்தில் பிரதமர் மானுவல் மர்ரெரோ குரூஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ்-கேனல் தொனியுடன் ஒப்பிடும் போது, பிரதமர் குரூஸின் தொனி போராட்டக்காரர்களுடன் இணக்கமாகச் செல்வது போல இருந்தது.

ஆர்ப்பாட்டங்கள் பரவியபோது, வீதியில் இறங்கி ''கிளர்ச்சியை வீழ்த்த வேண்டும்'' என அதிபர் குயேல் டையாஸ்-கேனல் அரசு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நேர்மாறாக, இறக்குமதி வரிகளை நீக்க வேண்டும் என பல பயணிகள் கோரிக்கை வைத்தனர் என்றும், இந்த முடிவை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் குரூஸ் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31க்கு பிறகு நாட்டின் நிலைமையை அரசு மதிப்பிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கியூபாவிற்குப் பயணிப்பவர்கள் தற்போது 10 கிலோ வரை மருந்துகளை வரி விலக்கில் கொண்டு வர முடியும். ஆனால், அவர்கள் கொண்டு வரும் உணவுக்கு, தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களுக்குக் குறைந்த அளவிலான சுங்க வரி செலுத்த வேண்டும்.

நாட்டில் நிலவும் மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான ஒரு வழியாக இறக்குமதி வரிகளை நீக்க வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர்.

அதிக அளவிலான வெளிநாட்டுப் பொருள்கள் மற்றும் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே பயணிக்கும் 'முலாஸ்' எனும் வணிக நபர்களைத் தடுப்பதற்காகக் கியூப அரசு வரிகளை விதித்தது.

ஆனால் இந்த நடவடிக்கை, அரசு நடத்தும் கடைகளில் கிடைக்காத பொருட்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரும் கியூபா முலாஸ்களை மட்டும் பாதிக்கவில்லை, உணவு மற்றும் சுகாதார பொருட்களுக்காக வெளிநாடுகளில் உள்ள உறவினர்களை நம்பியிருக்கும் மக்களையும் பாதித்தது.

இறக்குமதி வரியை நீக்குவது அரசின் ஒரு அரிய சலுகையாகக் கருதப்பட்டாலும், இந்த நடவடிக்கையைப் பலர் ஏளனம் செய்கின்றனர்.

கோவிட் தொற்றுநோய் காரணமாகக் கியூபாவுக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை நீக்குவதால் பலன் கிடைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு தொடங்கிய போராட்டம் பல பத்தாண்டுகளில் கியூபாவில் நடந்த மிகப்பெரிய போராட்டம் மட்டுமல்ல நாடு முழுவதும் நடந்த பரவலான போராட்டமாகக் கருதப்படுகிறது.

போராட்டத்தை ஒட்டி கியூபாவில் முடக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

போராட்டத்தை ஒட்டி கியூபாவில் முடக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

போராட்டம் தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலர் சமூக வலைத் தளங்களில் போராட்டக் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பினர். அரசுக்கும் நாட்டின் அதிபருக்கும் எதிராகப் போராட்டக்காரர்கள் எழுப்பிய முழக்கங்கள் அதில் காட்டப்பட்டன.

கியூபாவின் பொருளாதாரம் மிகவும் நொடித்த நிலையில் உள்ளது. கொரோனாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான சுற்றுலா அழிந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரை, கியூபாவின் மற்றொரு முக்கிய வருவாய் ஆதாரம். ஆனால் இந்த ஆண்டு அறுவடை எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது.

கியூபாவின் சர்க்கரை உற்பத்தியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அஸ்கியூபா அமைப்பு,எரிபொருள் பற்றாக்குறை மற்றும் இயந்திரங்களின் பழுது உள்ளிட்டவை சர்க்கரை உற்பத்தி குறைந்து போனதற்குக் காரணங்கள் என்று கூறுகிறது.

பொருளாதாரத்தின் முக்கியமான அம்சங்கள் முடங்கி விட்டதால், அரசின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.