Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்திற்கு அதிகாரங்களை அள்ளி வழங்கும் அரசாங்கம் - பிரதேசசபை உறுப்பினர் கனகையா தவராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்திற்கு அதிகாரங்களை அள்ளி வழங்கும் அரசாங்கம் - பிரதேசசபை உறுப்பினர் கனகையா தவராசா

தற்போதைய கோட்டாபய அரசு இராணுவத்திற்கு அதிகாரங்களை அள்ளிவழங்குவதாகவும், இந்த நிலை நீடித்தால், சகல அதிகாரங்களையும் பெற்றுக்கொண்ட இராணுவத்தினர் ஒருகட்டத்தில் ராஜபக்ச குடும்பத்தையே சிறைக்குள்தள்ளவும் நேரிடலாம் எனவும், அவ்வாறே பல நாடுகளில் இடம்பெற்றுள்ளதாகவும் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் கனகையா தவராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஜூலை மாதத்திற்கான அமர்வானது நேற்று வியாழக்கிழமை (15.07.2021)  இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த அமர்வில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தினைக் கண்டித்து, சபையில் தீர்மானம் ஒன்றினை சமர்ப்பித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

65.jpg

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையிலே படிப்படியாக, இராணுவ ஆட்சி ஒன்று உருவாகிக்கொண்டிருக்கின்றது. இதனை மக்கள் அனைவரும் உன்னிப்பாகவும், எச்சரிக்கையுடனும் அவதானிக்கவேண்டும்.

இந்த இராணுவ ஆட்சி பல நாடுகளிலே ஏற்பட்டு மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை இழந்திருக்கின்றனர்.

குறிப்பாக உகண்டாவிலே இடிஅமீன் என்கின்ற இராணுவ சர்வாதிகாரி நாட்டைக்கைப்பற்றி ஆட்சி செய்தார்.

பாக்கிஸ்தானிலே பூட்டோ பிரதம மந்திரியாக இருந்தபோது தன்னுடைய இராணுவத்தினை வலுப்படுத்தி இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினார். அந்தப் பூட்டோவையே ஜெனரல் ஜாகியாக்கான் என்ற இராணுவத்தளபதி கைதுசெய்து அவருக்கு மரணதண்டனைகூட வழங்கியிருந்தார்.

மியான்மாரிலே தெரிவுசெய்யப்பட்ட ஆம் சாம் சுகி என்பவரை இராணுவம் கைதுசெய்து தமது கையிலே ஆட்சியை வைத்திருக்கின்றது. இதுபோல இலங்கையிலே ஏற்படப்போகின்றது.

தற்போது இலங்கையில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இருக்குமென்றும், தாம் இராணுவசெயலாளராக இருந்ததால் இராணுவம் தமது கையில் இருக்குமெனவும் நினைத்துக்கொண்டு முக்கியமான அதிகாரங்கள் பலவற்றினை இராணுவத்தின் கைகளில் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக இந்த கொவிட் - 19 தடுப்பூசிபோடும் அதிகாரங்கள்கூட தற்போது இராணுவத்தினரிடமே வழங்கப்பட்டுள்ளது.

மக்களுடைய எல்லா விடயங்களும் தற்போது இராணுவமயப்படுத்தப்பட்டுவிட்டது.

எதிர்காலத்தில் இந்த நாட்டிலே, தற்போது ஆட்சியிலுள்ள இந்த ராஜபக்ச குடும்பத்தைக்கூட இராணுவம் கைதுசெய்யக்கூடியநிலை இருக்கின்றது. ஏன் எனில் இராணுவத்திற்கு அதிகளவில் அதிகாரங்களை வழங்கினால் இவ்வாறுதான் இடம்பெறும். அவ்வாறே பல நாடுகளிலும் இடம்பெற்றிருக்கின்றன.

ஓர் தற்காலிக சுய நன்மைக்காக இந்த கோட்டாபய அரசாங்கம் ஆட்சி அதிகாரங்களை இராணுவத்திடம் தாரைவார்த்துக்கொண்டிருக்கின்றது.

இதனுடைய விளைவு, எதிர்காலத்திலே இராணுவ சர்வாதிகாரம் இலங்கையில்  இருக்கப்போகின்றது.

அண்மையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட இடித்துரைத்திருந்தார்.

குறிப்பாக கொத்தலாவல இராணுவக் கல்லூரியினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள்ளாலிருந்து எடுத்து இராணுவத்தின் வசம் ஒப்படைக்கின்றனர்.

பல்கலைக்கழகம் என்றால் அது எந்தப் பல்கலைக்கழகமாக இருந்தாலும்சரி, அது பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கீழேயே இருக்கவேண்டும்.

ஆனால் தற்போது அதனைத் தனியாகப் பிரித்தெடுத்து இராணுவத்தின்வசம் ஒப்படைக்கின்றனர்.

இது தமிழர்களை மாத்திரமல்ல சிங்கள மக்களையே பாதிக்கப்போகின்றது. தமிழர்ப்பொறுத்தவரை இது பாரிய பிரச்சினையாக இருக்கப்போவதில்லை. ஏன் எனில் ஏற்கனவே நாம் ஒரு அடக்குமுறை ஆட்சியின்கீழேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

ஆனால் இந்த அப்பாவி சிங்களமக்களும் இந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படவிருக்கின்றனர்.

எனவே சிங்களச் சகோதரர்கள் இந்த விடயத்தில் துடிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்.

தற்போது இருக்கும் நிலையினை மாத்திரம் வைத்துக்கொண்டு சிந்திக்கக்கூடாது. எதிர்காலத்தைப்பற்றியும் சிந்திக்கவேண்டும்.

தற்போது இந்த கொத்தலாவல தேசிய இராணுவ பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராடியவர்கள், முக்கியமாக ஆசிரியர் சங்கசெயலாளர் ஜோசெப் ஸ்டாலின், பல பௌத்த பிக்குக்கள், பல சிவில் அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்தினார்கள். நீதிமன்று அவர்களை விடுதலைசெய்தது.

ஆனால் இந்த இராணுவ அரசு, அவர்களை தனிமைப்படுத்தல் சட்டம் என்று கூறி, கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் கைதுசெய்துவைத்துள்ளார்கள்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து எடுத்து இராணுவத்தின்வசம் வழங்கியதை எதிர்த்துத்தான் ஜோசெப் ஸ்டாலினும், பௌத்த பிக்குக்களும் ஏனைய சிவில் அமைப்புக்களும் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அவர்கள் சுகாதார விதிமுறைகள் அனைத்தையும் கடைப்பிடித்திருந்தனர். அப்படியிருந்தும் கைதுசெய்யப்பட்டனர்.

நீதிமன்று அவர்களை விடுதலைசெய்தபோதும் அவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

பழிவாங்கலுக்காக, இந்த நாட்டில் மக்கள் போராடக்கூடாது, உரிமைகளைப் பெறக்கூடாது என்பதற்காகவே தடுத்துவைத்துள்ளனர்.

இந்தப்போராட்டத்தை நசுக்கினால் ஏனைய மக்களும் போராட முன்வரமாட்டார்கள். எனவே தாம் சர்வாதிகாரமாக இந்த நாட்டிலே குடும்ப ஆட்சி ஒன்றினை உருவாக்கிக்கொள்ளலாம் எனத் தீர்மானத்திருக்கின்றனர்.

ஆகவே இத்தகைய விடயத்திலே நாம் இனம், மதம், பிரதேசம் என்ற பாகுபாடுகள் அனைத்தையும் விட்டு மக்கள் விழிப்பாக் இருக்கவேண்டும். இந்த சர்வாதிகாரத் தனத்தினைக் கண்டிக்கவேண்டும்  என்றார்.
https://www.virakesari.lk/article/109480

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இராணுவத்தினர் ஒருகட்டத்தில் ராஜபக்ச குடும்பத்தையே சிறைக்குள்தள்ளவும் நேரிடலாம் எனவும், அவ்வாறே பல நாடுகளில் இடம்பெற்றுள்ளதாகவும் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் கனகையா தவராசா தெரிவித்துள்ளார்.

இவருக்கு ஏன் இந்தப் பாலூற்றும் வேலை....! பழமொழியைக்கூட மறந்துவிட்டாரா.??

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

ஆனால் இந்த அப்பாவி சிங்களமக்களும் இந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படவிருக்கின்றனர்.

அழுவார், அழுவார் எல்லாம் சிங்கள மக்களை எண்ணியே மனம் உருகி அழுகின்றனர். விழுத்தப்பட்டு எழுந்திருக்க முடியாமல் உதவி இன்றி தவிக்கும் தமிழருக்காக அழுவார் யாரையும் காணோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.