Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளங்காமல் பேசும் தலைவர்கள்

Featured Replies

விளங்காமல் பேசும் தலைவர்கள்

தற்போது ஆளும் தரப்பு முன்வைத்திருக்கும் தேர்தல் சீர்திருத்த ஆலோசனைகளை நாடாளுமன்றம் மூலம் நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், அவற்றை நடை முறைப்படுத்தும் அனுமதியை மக்களிடம் நேராகப் பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

அரசமைப்பு விவகார அமைச்சரும் மூத்த இடதுசாரியுமான டி. ஈ. டபிள்யூ. குணசேகரா இப்படி உரைத்திருக்கின்றார்.

நாட்டின் அரசமைப்பு விவகார அமைச்சரே இவ்வாறு கூறியிருப்பது குறித்து அழுவதா, சிரிப்பதா என்ற நிலைக்குத் தள்ளப்பட் டிருக்கின்றார்கள் மக்கள்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம் புரியாமல் அரசமைப்பு விவகார அமைச்சர் பேசுகின்றாரோ என்ற சந்தேகம் சட்டம் புரிந்த சாதாரண மக்களுக்கும் எழுகின்றது.

இந்த அரசு தற்போதைய தனது நடவடிக்கைகள் மூலம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை வாயிலாக பிரேரித் திருக்கும் உத்தேச தேர்தல் சீர்திருத்தச் சட்டம், சிறுபான்மை இனங் களை குறிப்பாக மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அடியோடு பாதிக்கச் செய்யும் கபடச்சதியை உள்நோக்காகக் கொண்டது. அது மட்டுமல்ல. சிறு பான்மையினரின் கட்சிகளில் தங்கியிருந்து தான் அரசு அமைக்க முடியும் என்ற தற்போதைய இக்கட்டிலிருந்து பெரும்பான்மைச் சிங்களவர்களின் பெரிய கட்சிகளை விடுவித்து, அவை தனித்து ஆட்சி அமைத்து, எதேச்சாதிகாரம் செய்வதற்கான வாய்ப்பை உறு திப்படுத்துவதும் இத்திட்டத்துக்குள் பொதிந்து கிடக்கின்றது.

அது ஒரு விடயம். ஆனால் இத்தகைய தேர்தல் சீர்திருத்தத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்காவிட்டால் மக்களிடம் சென்று சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதுவும் அதன் முடிவு கட் டுப்படுத்தாத தீர்ப்பாக அமையத்தக்கதான கருத்துக்கணிப்பு (ணணிண ஆடிணஞீடிணஞ் கீஞுஞூஞுணூஞுணஞீதட்)வாயிலாக அங்கீகாரத்தைப் பெற்று அச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தலாம் என்ற கருத்தும், எண்ண மும் கேலிக்குரியவை; சட்ட ரீதியாக வாய்ப்பே அற்றவை; சாத்தியப் படாத விவகாரம்.

மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்பான அர சமைப்பு ஏற்பாடுகளை மாற்றியமைக்கும் இந்த உத்தேசத் தேர்தல் சீர்திருத்தம், சட்ட ரீதியான அந்தஸ்துப் பெற வேண்டுமானால், அதற்கேற்ற வகையில் அரசமைப்பை மாற்றுவது தவிர்க்க முடியாத அவசியமாகும்.

அரசமைப்பை மாற்றுவதாயின் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயமானதாகும். சில சமயங்களில் அந்த அரசமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரின் ஆதரவோடு சர்வ ஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களின் அனுமதியையும் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிடவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

ஏற்கனவே இத்தகைய விடயத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நோக்குபவர்கள், அரசின் உத்தேச தேர்தல் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதானால், இந்த இரண்டையுமே நாடாளு மன்றில் மூன்றில் இரு பங்கு எம். பிக்களின் ஆதரவு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்கள் அனுமதி ஆகிய இரண்டையுமே கட்டாயம் நிறைவு செய்யவேண்டியிருக்கும் என்பதைப் புரிந்துகொள் வர்.

இது, அரசமைப்பு விவகார அமைச்சருக்குப் புரியாமல் இருப்பது விந்தைதான்.

இத்தகைய ஒரு சிறு திருத்தம் ஒன்றை அரசமைப்புக்கு செய்வதற்கு முன்னைய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசு முயன்று மூக் குடைபட்டதை அரசமைப்பு விவகார அமைச்சர் அறிவாரா? இது தொடர்பாக அரசமைப்புக்கு அந்த அரசினால் கொண்டுவரப்பட்ட திருத்தம் நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டி ருப்பதையும், அதனால் அத்திருத்தம் நடைமுறைக்கு வராமல் போனமையையும் சட்டத்துறை தொடர்பானவர்கள் மறந்து போயி ருக்க மாட்டார்கள்.

1977இல் நடந்த பொதுத் தேர்தலில் கலவானைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஐ. தே. க. வேட்பாளரான பலப்பிட்டிய அபேரட்ண பண்டார ஹேரத்துக்கு எதிராக அத்தேர்தலில் போட்டி யிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சரத் முத்தெட்டுவேகம தேர்தல் ஆட்சேபனை வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தாம் தோற் கலாம் என்று அஞ்சிய பலப்பிட்டிய, ஒரு தந்திரம் செய்தார். 1978 இறுதியில் நாடாளுமன்றுக்கு முன்அனுமதி யின்றி மூன்று மாதங்கள் பிரசன்னமாகாமல் தவிர்த்து அதன் மூலம் 1979 ஜனவரி 5 ஆம் திகதி தமது எம்.பி. பதவியை இழந்தார். இந்நிலையில் பன்னிரண்டு நாள் கள் கழித்து அத் தொகுதிக்கு அவரையே தமது புதிய எம். பியாக ஐ. தே.க.நியமித்தது. அதையடுத்து கலவானைத் தொகுதியின் நியமன எம். பியானார் அவர்.

இந்நிலையில் மேற்படி தேர்தல் செல்லுபடியற்றது என நீதிமன் றம் தீர்ப்பளித்தது. அதனால் அத்தொகுதிக்கு இடைத் தேர்தலும் நடந்தது. அத் தேர்தலில் பலப்பிட்டிய போட்டியிடவில்லை. ஆளும் ஐ. தே. கட்சியும் வேட்பாளரை நிறுத்தவில்லை.

கலவானைத் தொகுதியில் ஏற்கனவே நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரே பதவியிழந்துள்ளார். அத் தொகுதிக்குப் பின்னர் தாங்கள் நியமித்த வேட்பாளர் பதவியிழக்கவில்லை என்று ஐ. தே. க. முன்வைத்த வாதத்தை அப்போதைய சபாநாயகர் ஏற்றுக் கொண்டதால் ஒரு புறம் கலவானைத் தொகுதி இடைத் தேர்தல் நடக்க, மறுபுறம் கலவானைத் தொகுதியின் எம். பியாக ஐ.தே. கவின் நியமன அங்கத்தவர் பலப்பிட்டிய தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விளங்கினார்.

இந்நிலையில் 1981 ஜனவரி 12 இல் நடந்த இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் சரத் முத்தெட்டுவேகம வெற்றியீட்டினார். அவருக்கு நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்குவதாயின் நாடாளு மன்றின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒன்றால் அதிகரிக்க வேண் டிய நிலை ஏற்பட்டது.

வேறு வழியின்றி இடைத் தேர்தலில் வென்ற சரத் முத்தெட்டுவேகமவுக்கும், அதே தொகுதிக்கு தாங்கள் முன்னர் நியமித்த பலப் பிட்டியவுக்கும் இடமளிப்பதற்காக எம். பிக்கள் எண்ணிக்கையை ஒன்றால் அதிகரிக்கும் அரசமைப்புத் திருத்தத்தை ஐ.தே.க. அரசு கொண்டுவந்தது.

நாடாளுமன்றில் அப்போது இரண்டில் மூன்றுக்கும் அதிகமாக, ஆறில் ஐந்து பெரும்பான்மையை வைத்திருந்த ஜெயவர்த்தனா அர சினால் அந்த அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற முடியவில்லை. முட்டுக்கட்டை போட்டுவிட்டது உயர்நீதிமன்றம். அவ்வாறு எம். பிக் கள் எண்ணிக்கையை மாற்றுவதற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரு பங்கு ஆதரவோடு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி யும் பெறவேண்டும் எனத் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

தமது விருப்பப்படி ஓர் எம். பிக்கு இடமளிப்பதற்காக பல கோடி ரூபா செலவில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதா என்ற மலைப் பில் அந்த அரசமைப்புத் திருத்தத்தை அப்படியே பொத்தெனக் கை விட்டது அந்த அரசு. பலப்பிட்டியவை தமது எம். பி. பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு வீட்டுக்குப் போகுமாறு அரசு பணிக்க, 1981 ஜனவரி 15இல் அவர் ராஜினாமாச் செய்தார். அவரது ஆச னத்தில் இடைத் தேர்தலில் வென்ற சரத் முத்தெட்டுவேகம அமர, பிரச்சினை தீர்ந்தது.

ஆக, இந்தப் பட்டறிவை தற்போதைய அரசமைப்பு விவகார அமைச்சர் ஒரு தடவை புரட்டிப் பார்ப்பாரானால், நாட்டின் நாடாளு மன்றப் பிரதிநிதித்துவ முறையையே தலைகீழாக மாற்றும் தேர்தல் சீர்திருத்தத்தை வெறும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நடைமுறைக் குக் கொண்டுவர முடியாது என்ற தாற்பரியம் அவருக்கு சுலபமாகப் புரியும். இத்தகவல் அவருக்குச் சமர்ப்பணம்.

-உதயன்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.