Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா அரசை விமர்சித்தால் துரோகி முத்திரை: சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர்

Featured Replies

சிறிலங்கா அரசை விமர்சித்தால் துரோகி முத்திரை: சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர்

சிறிலங்காவில் நீங்கள் அரசாங்கத்தை விமர்சித்தால் உடனடியாக உங்களுக்கு துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டு விடும். இது ரூவாண்டாவில் நடைபெற்றது. ஆனால் சிறிலங்காவில் நடப்பது இதுவே முதற்தடவை. எனவே தான் பிரதான ஊடக இல்லங்கள் கூட தமது பணிகளைச் செய்வதில்லை என்று சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை அவர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

கடந்த வருடத்தில் இருந்து நாம் அரசின் போக்கை அவதானித்தால் அது ஊடகவியலாளர்கள் மீதான எந்த வன்முறையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது பொது மற்றும் ஆயுதக் குழுக்களினால் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை அடிப்படையாகக்கொண்டது. எனினும் தற்போது ஏற்றுக்கொள்ளும் கலாச்சாரம் தோன்றியுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள், படுகொலைகள், தாக்குதல்கள் போன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது எந்தவித அச்சமும் இன்றி, பதில் நடைவடிக்கைகள் தொடர்பான எதுவித பயமும் இன்றி ஊடகங்களின் மீது தாக்குதலை நடத்தலாம் என அதிகாரத்தில் உள்ள குழு நினைப்பதாகவே தெரிகின்றது.

சுதந்திர ஊடக இயக்கமான நாம் இதனை இட்டு மிகவும் கவலை அடைகின்றோம். ஓவ்வொரு மாதமும் எமக்கு தாக்குதல், அச்சுறுத்தல் அல்லது படுகொலை தொடர்பாக ஏதாவதொரு முறைப்பாடாவது கிடைத்து வருகின்றது.

கடந்த புதன்கிழமை (04.07.07) யாழ்ப்பாணத்தில் எஞ்சியுள்ள சுதந்திர ஊடகத்துறையின் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் தகவல் ஒன்று செல்லிடப்பேசி மூலம் அனுப்பப்பட்டிருந்தது. அரச படையினர் ஊடகவியலாளர்களை தாக்கும் போது அதனை ஏனைய குழுவினரும் இயற்கையாகவே பின்பற்றலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலைமைகளில் ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் செய்வது பெரும் சிரமமானது. நாம் இது தொடர்பாக ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வரும் முறைப்பாடுகள் தொடர்பாக எம்மிடம் எந்த தகவலும் இல்லை. 19 வருட ஆட்சியின் பின்னரும் யாரும் அவர்களுக்கு எதிராக எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜனநாயக வழிகளில் தெரிவு செய்யப்பட்ட அரசானது மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது அதன் கடமை. அரசு அதனை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேற்கொள்ள முடியாது. ஆனால் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் மேற்கொள்ளலாம். பெரும்பாலான அச்சுறுத்தல்கள் அரச தரப்பு மற்றும் படைத்தரப்புகளில் இருந்தே வருகின்றன.

ஜெயசிக்குறு படை நடைவடிக்கையை எடுத்துக்கொண்டால் எமக்கு அதனைப்பற்றி எழுத உரிமை இருந்தது. ஆனால் தற்போது போருக்கு ஊடகவியலாளர்கள் ஆதரவு தரவேண்டும் என அரசு கேட்டுள்ளது. எமது கடமை என்பது மோதல்களில் நடுநிலை வகிப்பதாகும். அமெரிக்காவும் இதனை செய்ய முனைந்தாலும் அங்கு பல மாற்று வழிகளின் மூலம் ஊடகத்துறையினரது குரல்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு விடும்.

இந்தியாவில் கூட ஊடகங்கள் துரோகிகள் என்ற முத்திரை குத்தப்படாது தமது குரல்களை கொடுக்க முடிகின்றது. ஆனால் சிறிலங்காவில் நீங்கள் அரசை விமர்சித்தால் உடனடியாக உங்களுக்கு துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டு விடும். இது ரூவாண்டாவில் நடைபெற்றது. ஆனால் சிறிலங்காவில் நடப்பது இதுவே முதற் தடவை. எனவே தான் பிரதான ஊடக இல்லங்கள் கூட தமது பணிகளைச் செய்வதில்லை. பல தமிழ் ஊடகவியலாளர்கள் கருணா குழுவையும், விடுதலைப் புலிகளையும் விமர்சிக்க அச்சமடைகின்றனர்.

குற்றவியல் தடுப்புச் சட்டத்தை கொண்டு வருவதில் அரசு தீவிரமாக உள்ளது. நாடாளுமன்றத்திற்கு இது கொண்டுவரப்பட முன்னர் அதனை கொண்டுவரப் போவதாக அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதன் அர்த்தம் என்னவெனில் இதன் மூலம் அரசு, ஊடகங்களை கட்டுப்படுத்தலாம் என அரசு நம்புகின்றது என்பதாகும்.

ஆனால் நாமே எங்களை கட்டுப்படுத்த முடியுமே தவிர அரசினால் அல்ல. அமைச்சரவையில் இருந்து இதனை முன்னர் எதிர்த்தவர்களும் தற்போது அதற்கு ஆதரவு வழங்குகின்றனர். இது ஒரு ஜனநாயக விரோதமான சட்டமாகும்.

நாட்டின் பாதுகாப்புக்கு ஊடகத்துறை அச்சுறுத்தலாக இருக்கின்றது என அரசு கூறுகின்றது. ஆனால் அண்மையில் கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதல் திட்டத்தை ஊடகங்கள் வெளியிடவில்லை அரசே வெளியிட்டது. அது ஊடகங்களின் மூலம் வெளிவந்திருப்பின் நாம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்போம்.

அது எப்போதும் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல். ஆனால் நாம் எப்போதும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இரு மூத்த இராணுவ அதிகாரிகளின் ஊழல்களை நாம் வெளிக்கொண்டு வந்ததனால் அவர்கள் மீது நடைவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை வெளிக்கொண்டு வராது விட்டிருந்தால் இராணுவத்தின் ஆயுதக் கொள்வனவுகளில் பெரும் ஊழல்கள் நிகழ்ந்திருக்கும். நாமும் எமது கடமைகளில் இருந்து தவறியிருப்போம்.

எனினும் பெருமளவான ஊழல்களை எம்மால் வெளிக்கொண்டுவர முடியவில்லை. தற்போதைய கேள்வி என்னவெனில், தேசியப் பாதுகாப்பை ஊடக சுதந்திரத்திற்கு எதிராக அரசு எவ்வளவு தூரம் பயன்படுத்த போகின்றது என்பது தான்.

நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை காணமுடியாத நிலையில் அரசு உள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு அவர்களால் ஒரு தீர்வை கொண்டுவர முடியாது. நான் ஒரு பாதுகாப்பு நிபுணர் அல்ல. ஆனால் கடந்த தசாப்தங்களில் பாதுகாப்பு கொள்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகளே தற்போதைய நிலையை உருவாக்கியுள்ளது. பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளுக்கு இடையில் நிகழ்ந்த அதிகாரப் போட்டியே இந்த பாதுகாப்பின்மைக்கான காரணம்.

ஊடகங்களும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு வழங்குவதில்லை. எனவே பிரச்சினைகளின் போது ஒரு ஒருமைப்பாடு இருப்பதில்லை. இதில் எல்லோரினதும் பங்கு உள்ளது. ஆனால் நாம் ஒன்றுபடுவதில்லை. சில சமயங்களில் ஊடகவியலாளர்களின் மரணத்தின் போது கூட இது எமக்கு நெருக்கடியை கொடுப்பதுண்டு. தற்போது ஊடகவியலாளர்கள் பணியாற்ற முடியாத அளவிற்கு வன்முறைகள் நிறைந்த பகுதிகளில் யாழ்ப்பாணமும் ஒன்று.

சுதந்திர ஊடக இயக்கத்தில் உள்ள சில வலிமையான மனிதர்கள் அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக மௌனமாக இருப்பது துரதிர்ஸ்டவசமானது. அவர்களின் குறுகிய கருத்துக்களே இதற்கான பின்னனிக் காரணம். பிரச்சினை இருப்பதனை எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் ஆனால் அதனை எதிர்கொள்ள மறுக்கின்றனர். இது அரசுக்கும் எந்தவித சேவையையும் செய்யப்போவதில்லை.

வன்முறைகளோ அல்லது ஊழல்களோ அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் போது அரசு அதனை அறியவேண்டும், நாங்கள் அதனை வெளிக்கொண்டு வர வேண்டும். ஏனெனில் யாரும் அவர்களை அணுகி அதனை செய்யப் போவதில்லை.

ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துவதனை சுதந்திர ஊடக இயக்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஊடக சுதந்திரத்தை எவ்வாறு மேன்மைப்படுத்துவது என்பது தொடர்பாக நாம் தீவிரமாக சிந்தித்து வருகின்றோம். ஆனால் நாம் பிளவுபட்ட ஊடகத்துறையாக உள்ளோம். சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்களின் சிந்தனைகள் முற்று முழுதாக வேறுபட்ட கோணங்களில் உள்ளன. ஊடகத்துறை முறைப்பாட்டு ஆணைக்குழுவும் அதன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இயங்குவதில்லை. அது தனது கடமையை செய்ய முடியும் என நிரூபிப்பதற்கு இதுவே நேரம்.

என்ன நடந்தாலும் நாம் ஒருமித்த குரலில் பேச ஆரம்பிக்க வேண்டும். இது அரசிற்கு எதிரான நடவடிக்கை அல்ல ஆனால் உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகங்களை நாம் தொடர்புகொள்ள செய்யவேண்டும். ஊடகவியலாளர்கள் அச்சமின்றி தமது கடமைகளை செய்யும் பொருட்டு நாம் அவர்களின் உறுதித் தன்மையை கட்டி எழுப்ப வேண்டும் என்றார் சுசந்த தேசப்பிரிய.

http://www.eelampage.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.