Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிஷாலினியின் மரணம் வறுமையின் அடையாளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஷாலினியின் மரணம் வறுமையின் அடையாளம்

மரணம்4 e1627571190407 ஹிஷாலினியின் மரணம் வறுமையின் அடையாளம்

 

ஹிஷாலினியின் மரணம் வறுமையின் அடையாளம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஓருங்கிணைப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.


 

 
ஹிஷாலினியின் மரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


 
“தலவாக்கலை அக்கரப்பத்தனைப் பிரதேசத்தின் டயகம மூன்றாம் பிரிவைச் சேர்ந்த ஜூட்குமார் ஹிஷாலினி என்ற 16 வயதுச் சிறுமி கொழும்பிலுள்ள அரசியல் பிரிமுகரின் வீட்டில் பணிப் பெண்ணாக அமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி குறித்த சிறுமி பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு-தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த போதும் சிகிச்சை பலனின்றி 15 ஆம் திகதி அவரது உயிர் பரிதாபகரமாகப் பிரிந்துள்ளது.

சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் அவரது குடும்பத்தினரும் பணிப்பெண் தரகரும், சிறுமியை வேலைக்கு அமர்த்தியிருந்த வீட்டாரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளதாக விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.


 
தவிர, சிறுமியின் சாவுக்கு நீதி வேண்டி நாடு தழுவிய ரீதியில் பலரும் கண்டன அறிக்கைகளையும் கவனயீர்ப்புப் போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மையில் சட்டத் துறையும் நீதித் துறையும் இவ்விடயத்தில் சுயாதீனமாக வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும். சந்தர்ப்பத்தை தம்வசப்படுத்திக் கொண்டு பல தரப்பினராலும் ஊகத்தின் அடிப்படையில் பரப்பப்பட்டு வரும் வதந்திகள் நீதி விசாரணைக்கு குந்தகத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களை கண்டித்து மொத்தச் சமூகமும் குரலுயர்த்துவது வரவேற்கத்தக்கதே. எனினும், கரிசனைகள் வெறுமனே களச் சூழலோடு மட்டும் காணாமல்  போகும் விடயமாக அன்றி இவ்வாறான சம்பவங்கள் மீள் நிகழாதவாறு ‘ஏன்? எதனால்? எப்படி? என ஆராய்ந்து தொடர் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.


 
நாட்டினுடைய பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பாக விளங்கக் கூடிய தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் நூற்றாண்டு காலத் துயரமாகத் தொடர்கின்றது. இது இன்றுவரை அரசின் மனச்சாட்சியை உரசிப் பார்த்ததாகத் தெரியவில்லை. இந்த மக்களின் தொழில் கௌரவம், பாதுகாப்பான வாழிடம், கல்வி, சுகாதாரம், நிரந்தர வருமானம், சுயதொழில் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்பு போன்ற அடிப்படைக் காரணிகள் தொடர்பில் அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல், லயன் அறைச் சீவியத்தையும் நகர்ப்புறத்துச் செல்வந்தர்களின் பங்களாக்களை நாடிச் செல்லும் சிறுவர் கூலிகளையும் மலையக மண்ணிலிருந்து இல்லாதொழித்திட முடியாது.

சிறுவர்கள் தொழிலாளர்களாவதில் குடும்பங்களின் பொருளாதாரச் சமூகப் பண்புகள் குறித்து பெற்றோர்களின் தீர்மான மனப்பாங்கும் ஒரு காரணமாகின்றது. பிள்ளைகளை தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கு இந்தக் குடும்பங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. மலையக சமூகத்தின் முக்கிய குறைபாடான வறுமையை ஒழித்து அவர்களது நிரந்தர வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மலையக தொழிற்சங்களும், அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் இணைந்து விரைந்து முன்னெடுக்க வேண்டும்” என்றுள்ளது.

 

 

https://www.ilakku.org/hishalinis-death-was-a-sign-of-poverty/

  • கருத்துக்கள உறவுகள்

வறுமை கொல்லவில்லை.. சக மனிதர்கள் ஈவிரக்கமின்றி கொன்றதற்கு ஏன் அவளையும் வறுமையையும் வைகிறீர்கள். தானே தன் உழைப்பால் வறுமையை போக்க நினைத்து சக மனிதர்களை அணுகியது அவள் குற்றமா.. அப்படி.. அணுகிய.. சஜ மனுசியை.. பாலியல் துன்புறுத்தி.. கொன்றது குற்றமா. 

இப்படி செய்யச் சொல்லி அல்கா.. நபி சொல்லி வைச்சிருக்கினமோ..?! எங்க எதில. இதை ஏன் நபிகளை வைச்சு கேள்விக்கு உட்படுத்திறாங்கள் இல்லை.. அல்கா.. நபியை உயிரை விட அதிகமா மதிக்கிறவையிட்ட. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவது, ரிசார்ட் க்கு ஆதரவாக இருப்பவர்களும், முஸ்லீம் அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் பதவிகளில் (academia போன்றவை) இருப்பவர்கள்.

வறுமை போன்றவற்றை முன்னிறுத்தி, முஸ்லிம்களிடம் வளர்ந்து இருக்கும் இந்த 'அரபு' பண்பாட்டை மறைக்க முயல்கிறார்கள்.

வேறு தமிழரிடம் மலையகச் சிறுவர், சிறுமியர் வேலை பார்த்த போது, பாகுபாடு குற்றச்ச்ட்டுகள் இருந்ததே தவிர, பாலியல், வன்முறை சம்பந்தமாக குற்றச்சாட்டுகள் இருக்கவில்லை.

இதனால், தமிழரிடம் இல்லாது இருக்கும் என்று சொல்லவில்லை.

அனால், முஸ்லிகளிடம் இந்த வேளைக்கு அமர்த்துவோரை பாலியல் அடிப்படையில் துன்புறுத்துவது, தாம் Arab வலி வந்தவர்கள் என்று முஸ்லீம் தலைவர்கள் விதைக்க, அநேகமான முஸ்லிகள் Arab காலசரத்தை தழுவுகிறார்கள்.

அதன் விளைவே, இப்பொது வெளியில் வந்து இருக்கிறது, அதுவும், விதைத்த முஸ்லீம் தலைவர் வீட்டில் இருந்து.    

இதில் கவனமாக இருங்கள்.     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.