Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடியரசுத் தலைவராக ஒரு பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடியரசுத் தலைவராக ஒரு பெண்

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் வரக்கூடும் என்பது குறித்து பெரும் ஆரவாரங்கள் எழுந்துள்ளன. காங்கிரசு கூட்டணி சார்பில் இம்முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதீபா பாட்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

சென்ற முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கேப்டன் இலட்சுமியைத் தோற்கடித்த அதே காங்கிரசு கட்சிதான் இம்முறை பிரதீபா பாட்டீலை நிறுத்தியுள்ளது. கேப்டன் இலட்சுமி இந்திய தேசிய இராணுவத்தில் இயங்கியவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சோடு பங்கேற்றவர். இந்திய விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்து பொது வாழ்க்கையில் செயலாற்றி வருபவர். அவரைவிட பிரதீபா பாட்டீலை சிறந்த வேட்பாளராகக் கருத இயலாது.

ஆகஇ காங்கிரசு கட்சிஇ ஒரு பெண் குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தை விடஇ தங்களுக்கு சாதகமான ஒருவரை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பிரதீபா பாட்டீலை முன் மொழிந்துள்ளது. ஒரு பெண் குடியரசுத் தலைவராக வருவதால் மட்டும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு நேரும் இழிவுகள் நீக்கப்பட்டுவிடாது.

முதன் முறையாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கே. ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராக வந்த போதுஇ அது ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் ஒட்டு மொத்த விடுதலையாகப் பார்க்கப்படவில்லை. மாறாக அது ஒரு குறியீடாக மட்டுமே பார்க்கப்பட்டது.

ஏனெனில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் குடியரசுத் தலைவராகவே வந்திருந்த போதும்இ பாப்பாப்பட்டிஇ கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் ஊராட்சித் தலைவர்களாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வர இயலவில்லை. இன்றும் பல ஊராட்சிகளில்இ ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் சுதந்திரமாகச் செயலாற்ற இயலவில்லை. சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் ஓயவேயில்லை. மேலவளவு முதல் கயர்லாஞ்சி வரை சாதியின் கொடூரம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

அதைப் போலவேஇ ஒரு பெண் குடியரசுத் தலைவராக வருவதாலேயேஇ பெண்களின் சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிடாது. குறைந்த பட்சம்இ சமூகஇ அரசியல் தளங்களில்கூட பெண்களுக்கான மதிப்பு மீட்டெடுக்கப்பட்டுவிடாது.

பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்கும் சட்டம்இ எந்தக் கட்சியின் எதிர்ப்பும் இல்லாத நிலையிலும் கூடஇ காரணமேயின்றி இன்னமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்ற ஒன்று வந்த பிறகும்இ பெண்களின் மீதான வன்முறைகள் குறையவில்லை.

அரசியலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் பல பதவிகளை வகித்த போதும்இ இந்த ஆணாதிக்க அரசியல் அரங்கில் பெண் என்ற அளவில் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள்இ பெண்கள் தயக்கமோ அச்சமோ இன்றி பொது வாழ்வில் நுழைவதற்குத் தடையாகவே இருக்கின்றன.

பெண் ஊராட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடங்களில் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களே உண்மையான அதிகார மையமாக இருக்கின்றனர். இன்னமும் பல துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. இன்று வரை உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதியாக ஒரு பெண் வர இயலவில்லை. இராணுவத் துறையில் சேவைப் பணிகளில் மட்டுமே பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. களப்பணியில் பெண்களை ஈடுபடுத்துவதில் பெரும் தயக்கம் நிலவுகிறது. பிற துறைகளிலும் அதி உயர்ந்த பதவிகளை பெண்கள் எட்டுவது என்பது கனவாகவே உள்ளது.

இந்தச் சூழலில்இ இந்தியா விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் கழித்தாவது ஒரு பெண் குடியரசுத் தலைவராக வரக்கூடிய சூழல் உருவாகியிருப்பதே வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

கே. ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்த போதுஇ ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்ததற்கு அடையாளமாகஇ ஒட்டு மொத்த சமூக விடுதலையை நோக்கிய ஒரு முற்போக்கு சிந்தனையாளராகச் செயலாற்றும் குடியரசுத் தலைவராகவே இருந்தார்.

அதைப் போலவே சமூகத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்இ சம பங்கினராக இருக்கும் பெண்களுக்கும்இ அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைஇ உரிமைகளை மீட்டெடுக்கக் கூடிய வகையில் சிந்தித்துச் செயலாற்றக் கூடிய ஒரு பெண் குடியரசுத் தலைவரே இன்றைய தேவை. பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக வந்தால் இந்த எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா?

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலட்சுமியைத் தோற்கடிக்கக் காரணமாக இருந்தது அப்துல்காலாமை பாஜக தெரிவு செய்தது தான். இலட்சுமியை முன் நிறுத்தியது காங்கிரசும், இடதுசாரிகளும் தான். ஆனா அப்பேக்க பாஜக பெரும்பான்மையோடு இருந்ததால் இலட்சுமி தோத்துப்போனார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.