Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜிவ் கொலை சந்தேகநபர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் மாநில மத்திய அரசுகளுக்கு உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுனரின் அனுமதிக்குக் காத்திருக்கத் தேவையில்லை என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பு

 

NaliniSriharan_1200-e1628932517669.jpeg

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவளிகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் 7 பேரையும் ஆளுனரின் அனுமதிக்குக் காத்திராமல் உடனேயே விடுதலை செய்யும்படி சென்னை உயர்நீதி மன்றம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

 

இக் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நளினி சிறிகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இக் கட்டளையை விடுத்துள்ளனர். ஆளுனரின் அனுமதியில்லாது, இவ்வேழுபேரையும் விடுதலைசெய்யும் ஆணையை, மாநில அரசு பிறப்பிக்கவேண்டும் என்பதே நளினியின் விண்ணப்பமாகும். தலைமை நீதிபதி சஞ்சிப் பனர்ஜி மற்றும் நீதியரசர் பி.டி. அவ்டிகேசவலு ஆகியோர் நேற்று (13) இவ் வழக்கை விசாரித்திருந்தார்கள். இக் கட்டளைக்கு மாநில, மத்திய அரசுகள் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமெனவும் அத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 

நளினி, முருகன், சாந்தன்,பேரறிவாளன்,ஜயகுமார்,ரவிச்சந்திரன், றொபேர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரே ரஜிவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அநுபவிப்பவர்களாவர்.

 

இந்த 7 கொலைக்குற்றவாளிகளையும் விடுதலை செய்வதை யோசிக்கும்படி தமிழ்நாடு ஆளுனர் பன்வர்லால் புரோஹித்துக்கு, செப்டம்பர் 9, 2018 இல், தமிழ்நாடு அரசின் முந்தைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிபார்சு செய்திருந்தார். ஆனாலும் அதன் மீது ஆளுனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும், தம்மை விடுதலை செய்யக் கட்டளையிடும்படி நளினியும் மற்றயோரும் தொடர்ந்து பல்வேறு விண்ணப்பங்களையும் ஹேர்பியஸ் கோர்ப்பஸ் மனுக்களையும் உயர்நீதிமன்றத்தில் செய்திருந்தனர். அப்படியிருந்தும் ஆளுனருக்குக் கட்டளையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

தற்போது நளினி செய்த விண்ணப்பத்தில், மாநில அர்சின் சிபார்சின்மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதமை அரசியலமைப்புக்கு முரணானது எனவும் மாநில அரசின் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு ஆளுனருக்கு உண்டு அதைவிட அவருக்கு வேறு வழியேதும் இல்லை எனவும், அதனால் அவரது ஆணைக்குக் காத்திராமல் மாநில அரசு தங்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் கேட்டிருந்தார்.

 

அதே வேளை இந்திய அரசியலமைப்பின் 161 வது கட்டளையின் பிரகாரம், 10 வருடங்கள் அல்லது அதற்கு குறைவாக சிறைத்தண்டனை அனுபவித்த 3,800 ஆயுள் கைதிகள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் நளினி தனது விண்ணப்பத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.(தி நியூஸ் மிநிட்)

https://www.marumoli.com/ராஜிவ்-கொலை-சந்தேகநபர்கள/?fbclid=IwAR2lRAyALm8J_gYbIqwA-3SYh5RSM-NgWSEfq-Ct0kunkOkXkKkmtZkpGSE

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவளிகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் 7 பேரையும் ஆளுனரின் அனுமதிக்குக் காத்திராமல் உடனேயே விடுதலை செய்யும்படி சென்னை உயர்நீதி மன்றம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

இலங்கை சுந்திரமடைந்த நாளின் பின்னர் இனக்கலவரம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட முதலாவது தமிழின அழிப்பிற்கும், தொடரும் அழிப்புகளுக்கு எண்ணை வார்க்கும் இந்தியாவின் செயற்பாடுகளும் மனதில் சொல்லொன்னாத் துயரங்களை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒரு துயரை நீக்கிவிடுவது போன்ற இந்தச் செய்தி சிறிது ஆறுதல் தருகிறது.  

6 hours ago, nunavilan said:

இக் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நளினி சிறிகரன்

இது தவறு. குற்றவாளிகளாகக் காண்பிக்கப்பட்ட... என்பதே சரியானது.  

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மை என்றால், அதாவது நீதி மன்ற உத்தரவு, ஹிந்தியா, இலங்கை தொடர்பான  கொள்கைகளை ஏதோ ஓர் வழியில் கருத்துடையதான மாற்றத்திற்கு தயார் செய்யப்படுகிறது.

ஆனால். செயலில் நடப்பது எல்லாம் அரசியல் முடிவுகளும், செயற்பாடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.