Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகள் பேரவையின்... 48 வது கூட்டத் தொடர் இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள்!

மனித உரிமைகள் பேரவையின்... 48 வது கூட்டத் தொடர் இன்று!

ஐக்கிய  நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய முதல்நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் , இலங்கை தொடர்பான 46 கீழ் 1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பிலான வாய்மூல அறிக்கையை சமர்பிக்கவுள்ளார்.

அத்துடன் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர அமைப்புகள் கருத்து தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், பதிலளிப்பதற்கான சந்தர்ப்பமும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா  பரவல் காரணமாக இலங்கை சார்பில் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்  காணொளி ஊடாக கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சார்பாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பிலும் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

https://athavannews.com/2021/1238964

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரங்கள் தொடர்பில் மிச்சேல் பச்லெட் கவலை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது தொடர் ஜெனீவாவில் இலங்கை நேரப்படி  இன்று (13)  பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.

இன்றைய நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய அமர்வில், ஐ.நா மனித உரிமைகள் 46வது கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான யோசனைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தமது கருத்துக்களை முன்வைத்தார்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பிலும் தனது கவனத்தை செலுத்தியிருந்த மிச்சேல் பச்லெட் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல்போனோரின் குடும்பங்கள், ஊடகவியலாளர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைகள் கவலையளிக்கின்றன என்றார்.

Tamilmirror Online || இலங்கை விவகாரங்கள் தொடர்பில் மிச்சேல் பச்லெட் கவலை

  • கருத்துக்கள உறவுகள்

Seminar-Room-11-940x375.jpg

சரிதான்.. கூடி பேசி தேத்தண்ணீ , விசுகொத்து சாப்பிட்டு கிளம்புவினம் ..😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவசரகால சட்டம் அமுல், இராணுவமயப்படுத்தல் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி

அவசரகால சட்டம் அமுல், இராணுவமயப்படுத்தல் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி

மனித உரிமைகள் தொடர்பாக போதுமான முன்னேற்றத்தை உறுதி செய்ய தவறியமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மற்றும் இராணுவமயமாக்கல் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி வெளியிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகியது.

இதன்போது மரணதண்டனை கைதி துமிந்த சில்வா விடுதலை, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டமை குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

மேலும் சட்டத்தரணி உள்ளிட்ட பலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து சுட்டிக்காட்டிய அவர், உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்தோடு காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் தொடர்ந்தும் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

https://athavannews.com/2021/1239100

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பிலான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை பேரவையோடு இணங்கிச் செயற்படும் என ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை செயலில் காண வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளதை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட், தனது வாய்மூல முன்னேற்ற அறிக்கையூடாக வெளிப்படுத்தியுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தையும் சட்ட ஆட்சிக்கு முரணான விடயங்களையும் சுட்டிக்காட்டியதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சம்பந்தமான திடமான நிலைப்பாடு குறித்தும் எம்.எ.சுமந்திரன் நன்றி தெரிவித்தார்.

அதேபோல், சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான பொறிமுறை ஏற்படுத்துவது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் நிறைவுறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1239161

  • கருத்துக்கள உறவுகள்

மிச்செல் பச்செலெட்டின் அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஆரம்பம்!

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது, மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட், சமர்பித்த பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த வாய்மொழி மூல அறிக்கை தொடர்பான உறுப்பு நாடுகளின் விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது.
கூட்டத் தொடரை ஆரம்பித்து உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை, ஆப்கானிஸ்தான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பில் வாய்மூல அறிக்கையை சமர்பித்திருந்தார்.

இதன்படி இது தொடர்பான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கவுள்ளன.

எதிர்வரும் எட்டாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் இடம்பெறும். 40க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்களும் நிறுவனங்களும் முன்வைத்துள்ள சுமார் 90 அறிக்கைகள் குறித்து இந்த பேரவைகள் கலந்துரையாடப்படும்.
-(3)
 

http://www.samakalam.com/மிச்செல்-பச்செலெட்டின்-அ/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா தீர்மானத்தை எதிர்த்த பீரிஸ்-ஆணையாளருக்கு பதிலடி

ShanaSeptember 14, 2021
 

lyi.jpg

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளை இலங்கை முற்றாக நிராகரித்துள்ளது.

மெய்நிகர் முறைமையின் ஊடாக உரையாற்றும் போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அக்குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை தாங்கள் நிராகரிப்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு நீண்டதோர் அறிக்கையையும் அனுப்பிவைத்துள்ளார்.

அவ்வறிக்கையில் கொவிட்-19 தொற்றுநோயின் தற்போதைய மற்றும் அழுத்தமான சவால்களின் கீழ், சமூக வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதை அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாக நாங்கள் கருதுகின்றோம்.

எமது சவால்களை ஒப்புக்கொள்வதில் நாம் வெளிப்படையாக இருக்கின்றோம், பொறுப்பான மற்றும் ஜனநாயக அரசாங்கமாக, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான முழு அளவிலான பிரச்சினைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

http://www.battinews.com/2021/09/blog-post_680.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.