Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் 10 ஆவது உலகத் தமிழ் மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் 10 ஆவது உலகத் தமிழ் மாநாடு

*உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 10 ஆவது உலகத் தமிழ் மகாநாடு இம்மாதம் 20, 21, 22 ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெறவுள்ளது.

உலகத் தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்குடன் அரசியல் சார்பில்லாத இன, மத பேதங்களைக் கடந்து உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் 1974 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. மகாநாட்டை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும் மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து மலாயா பல்கலைக்கழகத்தில் நடத்தவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மகாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ப.கு.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இம் மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து, சமூக அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் பெ.சந்திரசேகரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, என். ஷ்ரீகாந்தா, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ். விஜயகுமாரன், தமிழகத்திலிருந்து தமிழக அரசின் முக்கிய அமைச்சர்களும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் கலந்து சிறப்புரைகளை ஆற்றவுள்ளதாக உ.த.ப. இயக்க பொதுச் செயலாளர் துரை. கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மலையக மக்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் பிரச்சினைகள் பற்றி கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீடாதிபதி பேராசிரியர் சோ. சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

"உலகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் அன்றும் இன்றும்" என்ற தொனிப்பொருளில் இம் மாநாடு அமையவுள்ளது. புலம்பெர்ந்த தமிழர்களின் அயல் சூழல், தாய்மொழி அறிவு, தமிழர் பண்பாடு , நாகரிகம் மற்றும் அவைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லல், அரசியல், பொருளாதார, சமூகத்துறைகளில் மேம்பாடு ஆகியவற்றில் உள்ள சவால்களை எதிர்கொண்டு முனைப்புடன் செயற்படுதல் போன்றவை முக்கியமாக எடுத்தாய்வு செய்யப்படும்.

இதனோடு தமிழ்வழி இறைவழிபாடு, தமிழாண்டு, தமிழ்க்கல்வி ஊக்குவிப்பு, தமிழ்மரபுகளை நிலைப்படுத்துதல், தனித்தமிழ் ஊக்குவிப்பு, தமிழ் இறையாண்மை, தமிழ்க்கலை மீட்பு, தமிழ் பாதுகாப்பு, தமிழர் பண்பாடு, தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, மறைந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை வரலாறு, எதிர்கால தமிழ் இனம் எதிர்நோக்கும் சவால்கள், தமிழ் ஊடகங்கள் போன்ற விடயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இம் மாநாட்டிற்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து அதன் கிளைத் தலைவர் அலன் ஆனந்தன், உ.த.ப. இயக்க நோர்வே கிளைத் தலைவர் சு.தியாகலிங்கம், பிரித்தானியா கிளைத் தலைவர் க.இராசமனோகரன், உ.த.ப. இயக்க சுவிஸ் கிளைத் தலைவர் பொ.முருகவேள், உ.த.ப. இயக்க ஜெர்மனிக் கிளைத் துணைத் தலைவர் கவிக்கோ பரம. விசுவலிங்கம் உட்பட 20 இற்கும் மேற்பட்ட பேராளர்களும், கனடாவில் இருந்து உ.த.ப. இயக்க அனைத்துலக துணைத் தலைவர் அறநெறிக் காவலர் வேல். வேலுப்பிள்ளை, உ.த.ப. இயக்க காப்பாளர் பேராசிரியர் இ. பாலசுந்தரம், உ.த.ப. இயக்க மக்கள் தொடர்பாளர் லோகன் லோகேந்திரலிங்கம் உட்பட 15 இற்கும் மேற்பட்ட பேராளர்களும்,

தென் ஆபிரிக்காவில் இருந்து உ.த.ப. இயக்க ஆபிரிக்க ஒன்றியத் தலைவர் முனைவர் வே.கோவிந்தசாமி , உ.த.ப. இயக்க டர்பன் மாநில பொறுப்பாளர் சைவப்புலவர் சின்னப்பன், தென் ஆபிரிக்க கூட்டிணைப்புக் கழகத் தலைவர் மிக்கி செட்டி உட்பட 10 இற்கும் மேற்பட்ட பேராளர்களும்,

தமிழகம் புதுவை, அந்தமான் ஆகிய இடங்களில் இருந்து உ.த.ப. இயக்க தலைமையக துணைத்தலைவர் பெருங்காவிக்கோ வா.மு.சேதுராமன், உலகத்தமிழர் பேரவைத் தலைவர் முனைவர் சனார்த்தனம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் எழில் வசந்தன், புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் நா. இளங்கோ, பேராசிரியர் அரங்க முருகையன், அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் தாமோதரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் பே. நடராசன், புதுவை உ.த.ப. இயக்க தலைவர் வீரமதுரகவி, செயலதிபர் தமிழ்மணி, அந்தமானில் இருந்து உ.த.ப. இயக்க அந்தமான் கிளைத் தலைவர் ஆர். தர்மோதரன் , அந்தமான் சங்கத் தலைவர் ஆ.க.போதிராசன் உட்பட 50 இற்கும் மேற்பட்ட பேராளர்களும்,

நியூசிலாந்திலிருந்து உ.த.ப. இயக்க கிளைத் தலைவர் சிவபாலன், அவுஸ்திரேலியாக் கிளைத் தலைவர் ஆர். விக்கிரமசிங்கம் ஜே.பி. உட்பட 10 இற்கும் மேற்பட்ட பேராளர்களும் இலங்கையிலிருந்து உ.த.ப. இயக்க இலங்கைக் கிளைச் செயலாளர் சிவநேசச் செல்வன், இ. தவகோபால் உட்பட பலரும் இம் மாநாட்டில் கலந்து கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மா நாடு சிறக்க எமது வாழ்த்துக்கள்!!!! :P

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாநாடு சிறப்புற இடம்பெறவும், எடுக்கப்படும் தீர்மானங்கள் வெற்றியளிக்கவும் எனது வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.