Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடிக்கொண்டிருக்கிறார்-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடிக்கொண்டிருக்கிறார்-பா.உதயன்

அனைவருக்குமான அரசு தாம் என்று சொல்பவர்கள் எந்த அபிவிருத்தியும் முதலீடும் செய்ய வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். ( winning the hearts and minds of tamil people ) யுத்த வடுக்கள், காயங்கள், காணாமல் போனோருக்கான நீதிகள் இப்படி அடிப்படை உரிமைகளையாவது கொடுக்க முன்வர வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மையை (Political Stability) அன் நாட்டில் முதலில் கட்டி எழுப்பவேண்டும்.

இவை ஒன்றும் இல்லாமல் எவரையும் பேச்சுக்கு அழைப்பதும் அபிவிருத்தி செய்ய வாருங்கள் என்பதும் இலங்கையில் முதலீடு செய்யுங்கள் என்பதும் வெறும் கண்துடைப்பாகும். சர்வதேச சமூகத்தையும் அத்தோடு அப்பாவித் தமிழரை ஏமாற்றும் செயலுமாகும். சிங்கள மக்களின் மனங்களை நாமும் வென்றாக வேண்டும் என்றால் இரு இனங்களுக்கு இடையிலான பாலத்தை ஆளும் வர்க்கம் நல்லிணக்கத்தின் ஊடாக அமைக்க வேண்டும். இவை இல்லாமல் எதுகும் இலங்கையில் நகராது. அந்த மக்களுக்கான நீதியை வழங்காமல் எந்த ஒரு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.( without justice, there is no reconciliation ) என்ற உண்மையை உண்மையாகவே ஆழமாக சிந்தித்து சமாதானத்தை விரும்பும் அந்த மக்களும் உள்நாட்டு வெளி நாட்டு அரசியல் வாதிகளும் உணர வேண்டும். 

பொய்யான கோட்பாடுகளை பிரச்சாரங்களை வாக்குறுதிகளை சிங்கள மக்களுக்கு வழங்கி இரு இனங்களுக்கு இடையிலான குரோதத்தை வளர்த்து பேரினவாதம் என்ற பெரும் பூதத்தை வளர்த்து விட்ட ஆளும் வர்க்க அரசியல் தலைவர்களும் இவர்களுக்கு முண்டு கொடுத்து நிற்கும் போலி இடது சாரிகளும் இனி மேலும் சரியான பாதையில் நடப்பார்களா என்பது இனியும் சந்தேகமே. ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லிக்கொண்டு யுத்த வெற்றி என்று சொல்லிக்கொண்டு கொண்டாடுவதும் அதே தேசத்தில் வாழும் இன்னும் ஒரு இனத்தை கண்ணீரொடு அவல வாழ்வு வாழ பார்த்திருப்பதும் மாக இருந்ததன் பலனை இன்று இந்த தேசம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி அனுபவித்துக் கொண்டிரு ப்பதை பார்க்கிறோம். 

எமது விடுதலைப் போராடத்தில் நாம் கூட எல்லாம் சரியாகத் தான் கொண்டு சென்றவர்கள் அல்ல எம்மிலும் பல பிழைகள் இருந்தன. இதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உரியது என்றபோதும் நாம் செய்யும் விமர்சனம் கூட சரியாக செய்ய வேண்டும். நாம் செய்யும் விமர்சனங்கள் எதிரிக்கு பலமாக இருக்கக் கூடாது. சில தமிழர்கள் அரசியல் வாதிகள் கூட தாயகத்திலும் வெளியிலும் எதிரிக்கு சாதகமாகவே தமது விமர்சனங்களை கருத்துக்களை வைப்பதை பார்க்கிறோம். இது எம்மையே நாம் காட்டிக் கொடுப்பது போல் ஆகிவிடும். எவ்வளவு தூரம் தமிழர் ஒற்றுமை தமிழர் வாழும் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சிதைக்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் சிங்கள தென் இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு வெற்றியே. இதை தமிழர் உணராது போனால் மீண்டும் மீண்டும் தோல்விகளையே சந்திக்க நேரிடும்.

இன்று இலங்கையில் உள்ள நிர்வாக நீதிமன்றங்களில் கூட மொத்த ஊழல் மற்றும் நேர்மை இல்லாமை மற்றும்  சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து உயர்கல்வி அறிவு சார்ந்த சரியான பொருளாதாரக் கொள்கை அமைக்க தவறியதும் இன்றைய நிலைமைக்கு காரணமாகும். உண்மையான சமாதானத்தை விரும்பும் தலைவர்கள் இலங்கையில் இருந்திருந்தால் எந்த வித வெளி உலகத் தலையீடும் இன்றி நாமாகவே பேசி நமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும். உள் நாட்டிலேயே அந்த தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் பேசி எல்லாத் தீர்வையும் கண்டிருக்க முடியும். எத்தனையே கொடுத்த வாக்குறுதிகளை கடந்த காலங்களில் எந்த சிங்கள தலைவர்களும் நிறைவேற்றவில்லை.13ம் சரத்து கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கியுளது இதனால் சில தளர்வுகளை ஏற்படுத்தி மேற்குலத்தை தனத பக்கம் திருப்பி இதில் இருந்து மீள்வதற்காக புலம் பெயர் தமிழருடனும் பேசத் தயார் என்ற அறிவிப்பானதில் உண்மை தன்மை இருக்குமா என்பது சந்தேகமே. அதே வேளை போர்க்கால நீதி விசாணையில் வெளி உலக தலையீட்டில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு யுத்தியாகவும் இதை பயன்படுத்த காய்களை கட்சிதமாக நகர்த்தப் பார்க்கிறது. இதை சரியான முறையில் புலம் பெயர் தமிழர்களும் அரசியல் வாதிகளும் புரிந்து விளங்கி அதில் உள்ள சூட்சுமம் அறிந்து காய்களை நகர்த்த வேண்டும் அணுக வேண்டும்.

ஒரு காலம் புலிகள் தான் பேச்சுவார்த்தைக்கும் தீர்வுக்கும் தடையாக இருக்கிறார் என்றவர்கள் இன்று எதையுமே வழங்க தயார் இல்லை. எவரினது அழுத்தமும் பலம் உள்ள நாடுகளின் மத்தியஸ்தமும் இல்லாமல் எந்த ஒரு காயையும் இலங்கையோடு நகர்த்த முடியாது எந்தக் கொம்பனாலும். இலங்கையின் இனப்பிரச்சினைக் கான இந்தப் 13 ம் சரத்துத் தீர்வும் இந்தியாவின் அழுத்தத்தினால் இரு இனங்களுக்கிடையிலான திணிப்பினால் வந்ததே தவிர இலங்கை தானாக தந்ததல்ல. அதுகும் வந்தது அப்போ தமிழர் பேரம் பேசக்கூடிய பலத்ததோடு இருந்ததனால் தான். இப்போ இருந்த ஒற்றுமையையும் தொலைத்து விட்டு உடைந்து சிதறி உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் இப்போ எதுகும் தமிழரிடம் இல்லை என்றாகியபின் எதைத் தான் தானாகத் தருவார்கள். எல்லாமே அவர் அவர் நலனுக்குகேற்ப உலகம் என்றாகிய பின் எங்கே அறமும் தர்மமும் மனிதாபிமானமும் இருக்கப் போகிறது. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு இன்னும் இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பா.உதயன்✍️

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, uthayakumar said:

புலிகள் தான் பேச்சுவார்த்தைக்கும் தீர்வுக்கும் தடையாக இருக்கிறார் என்றவர்கள் இன்று எதையுமே வழங்க தயார் இல்லை

இவர்கள் ஒரு பச்சோத்திகள், என்றுமே இப்படிதான் இருப்பார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.