Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 இளைஞர்கள் கடத்தல் : முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவின் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் தொடராது என்று சட்டமா அதிபர் திணைக்களம்  கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது.

2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் வழக்கில், கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

11 இளைஞர்கள் கடத்தல் : முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவின் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் தீர்மானம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மீளப் பெற சட்ட மாதிபர் தீர்மானம்!

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு... எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை, மீளப் பெற சட்ட மாதிபர் தீர்மானம்!

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தி, காணாமல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பகிர்வு பத்திரத்தை மீளப் பெற சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படை தளபதி, மேன் முறையீட்டு நீதிமன்றில் கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்ற வழக்கு விசாரணைகளை நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்துள்ள ரீட் மனு மீதான பரிசீலனைகள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போதே சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி இதனை அறிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுடன் மன்றில் ஆஜரான சட்டத்தரணி நுவன் போப்பகே, சட்ட மா அதிபர் மனுதாரருக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மீளப் பெறுவதற்கான காரணத்தை மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என கோரினர்.

இவ்வாறான நிலையில், குற்றப் பத்திரிகையை மீளப் பெறுவது தொடர்பில் ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றுக்கு அறிவிக்க, சட்ட மா அதிபர் தரப்புக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்நிலையில், இந்த ரிட் மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2021/1244852

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.