Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்மாறன் மரணம்: "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்மாறன் மரணம்: "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ

2 டிசம்பர் 2020
புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்
நன்மாறன்
 
படக்குறிப்பு,

ஒற்றை செருப்புடன் வந்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறனை (பின் இருக்கையில் இருப்பவர்) தனது ஆட்டோவில் பயணியாக அழைத்துச்செல்லும் ஓட்டுநர் பாண்டியன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நன்மாறன் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அவர் மறைந்த இன்று மீண்டும் பகிரப்படுகிறது.

"என்கிட்ட 20 ரூபாய்தான் இருக்கு, வரலாமா?"

மதுரை முனிச்சாலையை சேர்ந்த பாண்டியன் என்பவர், ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். அவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி காலையில் மதுரை அண்ணா சாலை பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் நோக்கிச் சென்ற போது, அரசு மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிலையத்தில், முதியவர் ஒருவர் பேருந்தில் ஏற முற்பட்டுள்ளார்.

முதியவரின் ஒற்றைக்கால் செருப்பு அப்போது கீழே தவறி விழுந்துள்ளது. எனவே அவர் பேருந்திலிருந்து இறங்கிச் செருப்பைத் தேடியுள்ளார். அவரை அடையாளம் கண்ட ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன், முதியவரிடம் சென்று ஆட்டோவில் வரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு அந்த முதியவர், "என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கிறது. கொண்டு போய் விட்டுவிடுவீர்களா?" என்று கேட்டிருக்கிறார்.

"சரிங்கய்யா" என்று சொல்லி அவரை ஆட்டோவில் ஏறக்கூறிய பாண்டியன், ஆட்டோவில் இருந்த அந்த முதியவருடன் ஒரு செல்ஃபி எடுத்து அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

அதில், "வெறும் 20 ரூபாயுடன், ஒற்றைக் கால் செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு மறு செருப்பைத் தேடித் திரிந்த அந்தப் பெரியவர் மதுரை கிழக்கு தொகுதியில் இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் எளிமையின் சிகரமான தோழர் நன்மாறன் அய்யா. கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும் மிகவும் எளிமையான, நேர்மையான, மனிதநேயம் கொண்ட மனிதரான அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று பாண்டியன் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். இந்த படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

யார் இந்த நன்மாறன்?

நன்மாறன் மரணம்

"மேடை கலைவாணர்" என்று அழைக்கப்படும் நன்மாறன் (எ) ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப்பணியாற்றியவர்களில் ஒருவர். மதுரையில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் பெயரை பட்டியலிடும் போது இவர் தவிர்க்க முடியாத நபராக கருதப்படுகிறார்.

மதுரை கிழக்கு தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ ஆக இருந்த போதும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.

தமிழில் முதுகலை மேல்படிப்பு முடித்த பின்னர் ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் தட்டச்சராக நன்மாறன் பணியாற்றினார். தொடர்ந்து கைத்தறி தொழிலாளர் சங்கத்திலும், பஞ்சாலை தொழிலாளர் சங்கத்திலும் ஊழியராக பணியாற்றினார்.

தமிழக அரசியலில் கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் மதிக்கப்பட்ட இவர், 2001, 2006ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்காக ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.

ஆரப்பாளையத்தில் மனைவியுடன் வசித்து வரும் நன்மாறனுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் குணசேகரன் நாகமலை புதுக்கோட்டையில் இருக்கும் பாண்டியன் (தமிழ்நாடு) கிராம வங்கியில் பணியாற்றுகிறார். இளைய மகன் ராஜசேகரன் மதுரை அரசு மருத்துமனையில் தற்காலிகப் பணியில் இருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-55163528

".... இந்தியாவில் அரசியலில் நேர்மையாக இருந்தால் பிஞ்ச செருப்பும் 20 ரூபாயும் தான் இறுதியில் மிஞ்சும்..."

இதனை பார்த்து விட்டு தமிழகத்து பழுத்த அரசியல்வாயின் மனம் இப்படித்தான் எண்ணியிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கு நூறு உண்மை........ஒன்றில் அதலபாதாளத்தில் கிடைக்கும் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள் அல்லது மலையளவு உயரத்தில் இருக்குமளவு உட்சபட்ச ஊழல் கிருமிகளாக இருக்கிறார்கள்.....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்துத்தொழாயிரத்து தொண்ணூறாம் ஆண்டுக்குப் பின்பு பிறந்த ஒவ்வொரு தமிழ்நாட்டில் வதிபவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது நோக்கம் நிறைவேற பணத்தை கையூட்டகக் கொடுத்தோ அல்லது வாங்கியோ இருப்பார்கள் இப்படிபட்ட ஒழுக்கக்கேடான சமூகத்தில் நன்மாறன் அவர்களுக்கு எங்கே இடமிருக்கிறது.

கேட்டால் பிழைக்கத்தெரியாதவர் எனக்கூறுவர். சிறீலங்காவில்கூட ஒரு பைசா கையூட்டுக்கொடுக்காமல் அலுவலகங்களில் எமது அலுவல்களை முடிக்கலாம்  (அண்மையில் நடந்த எனது அனுபவத்தின்படி) ஆனால் தமிழ்நாடு அப்படி இல்லையே! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.