Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம்

October 30, 2021
 

. சிறை இந்திய மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம்இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பணம் சிறைக்கு மாற்ற அனுமதித்து பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கடற்படையிரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே நேற்று முன் தினம் மீனவர்கள் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பருத்துத்துறை நீதிமன்ற நீதிபதி, மீனவர்கள் அனைவரையும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடற்படைத் தளத்தில் தங்கியுள்ள மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றக் கோரியும் அவர்களை விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்கக் கோரியும் யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை அதிகாரிகள் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் அவர்களை விசாரிக்கவும் அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, குறித்த மீனவர்களை தூதரக அதிகாரிகள் சந்தித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை கையளிப்பதற்கும், மீனவர்கள் உறவினர்களுடன் தொலைபேசி ஊடாக உரையாடுவதற்கும் அனுமதி வழங்குமாறு இந்தியத் துணைத்தூதரகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிபதியிடம் கோரியிருந்தார்.

அதனைப் பரிசீலித்த நீதிபதி, தூதரக அதிகாரிகள் குறித்த விவரங்களையும், குடும்பத்தாரின் தொலைபேசி இலக்கம் மற்றும் உறவு முறை குறித்த விவரங்களையும் எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

23 தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற உத்தரவு

காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி இரண்டு படகுகளில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த மீனவர்களை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடற்படை முகாமில் உள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும், யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றக் கோரி, யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிவான், கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் சிறையில் வைக்க உத்தரவிட்டனர்.

https://athavannews.com/2021/1247422

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.